!!!!!!!!!!!!!! (((((( எனது கதாநாயகர்கள் )))))) !!!!!!!!!!!!!!

பாட்டுத்தலைவன் பார(தீ) :

கவிகளின் கவியிவன்
கவிதைகள் கண்டால்
உள்ளங்கொள்ளும் "உணர்ச்சித் தீ" - எம்
பாட்டுத்தலைவனாம் "பாரதீ" !

வெள்ளையர்க் கெதிராயிவன்
"விதைத்த தீ" - அது
விருட்சமாய் படர்ந்த
"விடுதலைத் தீ" !

கவிஞர்கட்க் கிவன்பால்
"காதல் தீ" - இவன்
காலத்தால் அழியாத
"காட்டுத் தீ" !

முறுக்கு மீசையும்
முண்டாசு பாகையும்
முறைத்த பார்வயுங்கொண்ட
" பாரதத்தீ" எங்கள் "பாரதி" ..................................

##################

சேனைத்தலைவன் (சே)குவாரா :

அடிமை வர்கமென்ற
ஆணிவேரை ஒழித்திட்ட
அருஞ்செயல் "வீரனிவன்"
அசகாய "சூரனிவன்" !

புரட்சி யாளர்க்கெல்லாம்
உணர்ச்சி தனையூட்டி
எழுச்சி காணச்செய்த
"மலர்ச்சி நாயகனாம்" !

உலகம் கண்டெடுத்த
உன்னத வீரர்களுள்
உவமை சொல்லிடவே
"உற்றதோர் மாமனிதன்" !

இவன்பெயர் உச்சரித்தால்
இனம்புரியா உணர்ச்சியொன்று
உள்ளத்தில் ஊற்றெடுக்கும்
உண்மையென நானுரைப்பேன் ...........................

#######################

சிங்கத்தமிழன் பிரபாகரன்" :

இனத்தின் அழிவுகண்டு
சினத்தின் உச்சம்கொண்டு
சிலிர்த்தே சிங்கமென
சீறிநின்ற "செயல்வீரன்" !

புலிக்கொடி தாங்கியவன்
புயலென புறப்பட்டு
நரிப்படை நஞ்சர்களை
நசுக்கிடவே நாள்கொண்டான் !

தமிழ்மகன் என்றிட - என்னில்
தனிப்பட்ட கர்வமுண்டு
தம்பியென் றுலகழைக்கும்
"தலைமகனின்" தரங்கண்டு !

இருபதாம் நூற்றாண்டின்
இணையற்ற வீரமகன்
இவன்வாழ் சமகாலம்
நான்வாழப் பெருமைகொண்டேன் ..........................

######################

"தல" அஜித் :

அழகிய குணமகனாம் - நெஞ்சம்
அழுக்கற்ற பெருமகனாம் ,
முதுகில் காயம்கொண்டும்
முயற்சிமாறாத் திருமகனாம் !

திரைப்படம் கண்டிங்கு
தீபமேற்றும் ரசிகனில்லை - இவன்
திறமையும் பண்பும்கண்டே
திரண்டுவந்த ரசிகர்களாம் !

அலையென ரசிகருண்டு
அவர்பெயரில் அன்புண்டு - அதை
அரசியல் செய்திடாத
"ஆன்மாவே" இவனன்றோ !

தலைக்கனம் கொள்ளாத
தலை எங்கள் "தல" யென்பேன்
தன்னம்பிக்கை என்பதனின்
"தனிப்பெயரே" இவனென்பேன் !

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா..... (10-Nov-12, 1:30 pm)
பார்வை : 535

மேலே