வலிகள் என்றும் தீருவதில்லை

என் கனவோடு வந்தவளே,
ஏனோ கண்ணைக் கசக்க வைத்து விட்டாய்..
உன் நினைவு குடிகொண்ட நெஞ்சத்தில்,
நஞ்சு வழியச் செய்துவிட்டாய்..

உயிரோடு உறவாடிவிட்டாள்,
ஏனோ,
உணர்வோடு உறவாட மறுத்து நின்றாள்..
உன் கடைக் கண் பார்வை கொண்டு,
என் காயமொன்றை ஆற்றிவிடு இன்று..

விடியலொன்றைத் தேடுகிறேன்,
உன் விழி வழியே நானுமிங்கு..
விடை பெற்று சென்றுவிட்டாய்,
வினாக் குறியாக நானுமிங்கே..

வட்டமிட்டு வந்த போதும்,
கிட்டப் பார்வை தந்த போதும்,
விட்டுவிட்டுப் போவாயென்று,
என் புத்தி கெட்ட நெஞ்சத்துக்கு,
கொஞ்சம் கூட எட்டவில்லை..

உன் கண்கள் பேசும் மொழிகளெல்லாம்,
காதல் மொழி தான் என்றிருந்தேன்..
ஆனால்,
அது காயம் செய்யும் விழிகலென்று,
கத்தி கிழித்த பின் உணர்ந்துவிட்டேன்..

மானங்கெட்ட மனசானதே,
நீ மறுத்த பின்னும் உனை நாடுதே..
மறந்து போக வேண்டுமென்றால்,
மறுபிறவி கொண்டாலும் பற்றிடாதே..

கனவுகள் மட்டும் வாழ்க்கையென்றால்,
கடந்து போகும் எந்தன் சோகம்..
நடக்கும் நிகழ்வுகளை நோட்டம் கொள்ளாமல்,
நிலையை வாழ்வேன் உன்னுடன் கனவில்..

ஒதுக்கப்பட்ட சோகம்,
இன்னும் ஓய்ந்து போகாததென்ன..
செதுக்கப்பட்ட என் வாழ்க்கை,
உன்னால் சிதைக்கப் படுவதென்ன..

ஒருத்தியை மட்டும்
நினைக்கும் மனமானதே,
ஓரவஞ்சனை செய்து
உன்னுடன் உறவாடுதே..
என் விருப்பு தவறா,
உன் வெறுப்பு தவறா,
வரையறை வைத்துவிட்டாய் நம் நட்புக்கு,
வருத்தம் எந்தன் வாடிக்கையானதே..!!

எழுதியவர் : பிரதீப் (14-Nov-12, 12:10 pm)
பார்வை : 433

மேலே