மீண்டும் வர வேண்டும் ..

மறைந்திட்ட
மனிதனை மனிதன் மதிக்கும் தன்மை !

மறந்திட்ட
ஒன்றாய் வாழ்ந்திடும் கூட்டுக் குடும்பம் !

அழிந்திட்ட
அடுத்தவர்க்கு உதவிடும் சீரிய குணம் !

மறந்திட்ட
தமிழனின் பண்புமிகு கலாசாரம் !

மறைந்திட்ட
சுயநலம் கலந்திடா பொதுநலம் !

அழிந்திட்ட
அன்புமிகு நேசமுள்ள மனிதாபிமானம் !

மறைந்திட்ட
ஊழலே அறிந்திடா அரசியல் வாதிகள் !

உதிர்ந்திட்ட
சாதிமத இனம் இல்லாத உணர்வுகள் !

உலர்ந்திட்ட
ஈர நெஞ்சுள்ள ஈகை குணங்கள் !

இதுவரை கண்டிராத
சண்டை சச்சரவே இல்லாத சமுதாயம் !



பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (23-Nov-12, 8:44 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 119

மேலே