மீண்டும் வர வேண்டும் ..
மறைந்திட்ட
மனிதனை மனிதன் மதிக்கும் தன்மை !
மறந்திட்ட
ஒன்றாய் வாழ்ந்திடும் கூட்டுக் குடும்பம் !
அழிந்திட்ட
அடுத்தவர்க்கு உதவிடும் சீரிய குணம் !
மறந்திட்ட
தமிழனின் பண்புமிகு கலாசாரம் !
மறைந்திட்ட
சுயநலம் கலந்திடா பொதுநலம் !
அழிந்திட்ட
அன்புமிகு நேசமுள்ள மனிதாபிமானம் !
மறைந்திட்ட
ஊழலே அறிந்திடா அரசியல் வாதிகள் !
உதிர்ந்திட்ட
சாதிமத இனம் இல்லாத உணர்வுகள் !
உலர்ந்திட்ட
ஈர நெஞ்சுள்ள ஈகை குணங்கள் !
இதுவரை கண்டிராத
சண்டை சச்சரவே இல்லாத சமுதாயம் !
பழனி குமார்