மாறிய வரதட்சனை

மணக்க இருக்கும் பெண்ணை
காட்சிப் பொருளாய் நினைப்பதோடு
மனைவி ஆவதற்கு முன்னரே
பேரம் பேசும் பலரும்
பொன்னாய் பணமாய் சீராய்
கேட்கும் காலம் மாறி மேலும்
ஆயுட் காலம் முழுதும்
வெளிச்சமமும் காற்றும் தேவையென
விளக்கும் எண்ணெய் மற்றும்
ஒரு இன்வெர்டரும் கட்டாயம்
வரதட்சணை என கேட்டிடும்
காலம் தொலைவில் இல்லை ..
இதுதான் காலத்தின் கோலமா ?

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (24-Nov-12, 9:06 am)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 96

மேலே