என் கனவுகள் உன்னைப் பற்றி................

என் கனவோடு பேசிவந்த என்னை
உன் நினைவோடு பேச வைத்தாய் !

வெறும் வார்த்தைகளாய் இருந்த
என் கவிதைகள்
உன்னைக் கண்டவுடன்
உன்னைப் பற்றிய நினைவுகளாய் மாறின !

நிலவோடு பேசிவந்த என்னை
உன் முகமோடு பேச
ஒரு சந்தர்ப்பம் அளிப்பாயா!

கனவுப் பூவை பறிக்க முடியாது
என்பதை பொய்யாக்கி
என் கனவை நிஜமாக்கினேன் !

கனவில் உன்னைப் பார்த்ததும்
என் வாழ்வின்
தென்றல் மோகம் தென்பட்டது !

உன்னைத் தேடவில்லை ஏனெனில்,
உன் வாழ்வின் ஒளி
உன்னைத் தேடி வரும் என்பதால் !

கனவில் கண்ட கண்ணைக் காணவே
கால் செல்லும் போக்கில்.................................

கனவில் கண்ட உன்முகம்
என்னை
நிலை குலைய வைத்தது உன் அழகால்!.........

உன் அழகினை கூற முடியாத
வார்த்தைஅற்ற
கவிஞன் நான் !.........................

கனவில் மட்டுமே காதலைக் கண்டேன்
நேரில் காண தவிக்கிறேன் !......................

என்னை மறந்து
உன்னைக்கான
உன் முகம் காட்டுவாயா?...... ஆவலுடன்

எழுதியவர் : வேல்முருகானந்தன்.சி (30-Nov-12, 5:24 pm)
பார்வை : 873

மேலே