காதலோடு தோழமை செய்வோம்!!!!!!!!!

நட்பின் முதல் பக்கம் நீ என்றாய் !!!
ஏன் நண்பா இன்று அந்த பக்கம் இல்லை?

படித்து படித்து செல்லரித்து விட்டதா?
இல்லை அலுத்து விட்டது என
கிழித்து விட்டாயா?

செயற்கையாய் கூட இயற்கையாய்
இருக்க முடியவில்லை உன்னிடம் !!!

உன்னிடம் வேண்டுவது
காதல் பிச்சை இல்லை,
என் தோழமை பிச்சை !!!

இறைஞ்சுவதை விட
இறப்பது மேல் என்பேன்,

ஆனால்???

உன்னிடமோ இரஞ்சுவதை தவிர
வேறெதுவும் அறியேன்...

வா நண்பா, காதலோடு தோழமை செய்வோம்...

எழுதியவர் : ஜி.டி (1-Dec-12, 10:26 pm)
பார்வை : 1353

மேலே