நன்றிப்பெருக்கு

உள்ளத்தில் ஊறிடும் உணர்வுகள் ஆயிரம்
தூண்டிடும் நெஞ்சோ பாடிடும் பாயிரம் !
ஈகையும் இரக்கமும் பொங்கிடும் அன்பும்
கோபமும் தாபமும் அளவிலா ஆசையும்
இதயத்தில் ஊறிடும் இயற்கை உணர்வுகள் !

பெற்றவர் செய்திடுவர் நம்மின் தேவைகளை
மற்றவரும் செய்வர் சேவையாய் பல நமக்கு !
சிந்தித்துப் பார்த்தால் விளங்கிடும் நமக்கு
சிந்தையில் மின்னலாய் ஆற்றிய கடமைக்கும்
அற்புத சேவைக்கும் நன்றி நினைப்பதில்லை !

இறுதிவரை பணிவிடை கனிவுடன் செய்தலே
பெற்றவர்க்கு நாம் செய்யும் நன்றிக்கடன் !
உதவிகள் புரிந்த உயிர்களுக்கு என்றும்
உள்ளம் குளிர்ந்திட துணையாய் இருத்தலே
நானிலம் போற்றும் நன்றிப் பெருக்கன்றோ !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (3-Dec-12, 12:17 pm)
பார்வை : 190

மேலே