ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.......!

என்னில் உன் நினைவை புதைத்து விட்டு.......
எங்கோ, என்னை விட்டுசென்றாய் மனங்கவர் கள்வா......
தூக்கமும் வருவதில்லை, வந்தாலாவது கனவில் நீ இருப்பாய்,
கொஞ்சுமொழி பேசி என்னைகிறங்கடிப்பாய்,
கள்ளப்புன்னகை சிந்தி கண்சிமிட்டுவாய்......
நீதரும் நெற்றி முத்ததிற்காக நெடுநேரம் கண்மூடி நெஞ்சம் படபக்க
காத்திருந்த தருணங்கள் அவை.......
கனவில்தான் நீ இல்லை என்றானபோது......கைபேசியிலாவது
உன் குரளைகேட்க காத்திருக்கிறேன் கள்வா.......அழைத்திடு அலைபேசியில் ஆர்வமுடன் காத்திருக்கிறேன் !

எழுதியவர் : தஞ்சை சோழன் (6-Dec-12, 12:44 pm)
பார்வை : 150

மேலே