காதலும் காவியம்

நான் தேடும் கவிதையே நீயாகி போய்விடில்
உனக்கு நானடி உன் சொந்தமாகுவேன்
உன் விரல் பிடித்து நானும் நடந்திடும் காலம்
மிக அருகிலேன்று நானும் நம்பி செல்லுவேன்
உன்னை எண்ணி செல்லுவேன்

காத்திருந்த காதலி நீ காவியமாய் ஆகிவிடில்
கண்மூடி நானும் என்னடி சேர்வேன் உன்னினைவோடு நானும் நீங்கி போவேன்
சுய உணர்வோடு நானும் தள்ளி செல்வேன்

சாக வேண்டியது தான் என்று சரித்திரமாய் கொண்டாடும் காதலை
நான் வாழ வேண்டிய உயர் வைத்தியாமாய் மாற்றுவேன்
வழி மாறி போகமாட்டேன் உன் வார்த்தையை
எண்ணி
தகர்த்தே எறிந்தாலும் தன்மானம் நின்று விடுவதில்லை ஓரிடத்தில்
மீண்டும் கொடி பற்றி குத்துவிளக்காய் ஒளி விடுவேன்
குலமகளே உன் நினைவிலும் புது சரித்திரம் படைப்பேன்
எறிந்த காதலினால் ஏக்கம் கொள்ளமாட்டேன் !
தூக்கம் தொலைக்கமாட்டேன் !! துக்கம் கொள்ளமாட்டேன் !!!.
வசந்தம் வரவேற்க வாசலிலே நிற்கிறது
வரவேற்று என் இதயத்தில் இருத்திக் கொள்வேன்.

எழுதியவர் : bhanukl (8-Dec-12, 2:27 pm)
Tanglish : kaathalum kaaviyam
பார்வை : 105

மேலே