மனசாட்சி

மனிதனுடன் உடன் பிறக்கும்
உருவமில்லா உயிர் !

இறுதிவரை உயிர் மூச்சாய்
உடனிருக்கும் நண்பன் !

சரியோ தவறோ முடிவை
சொல்லிடும் நீதிபதி !

கண்ணில் தெரியா உன்னில்
வாழும் மாற்றான் !

ஆயுள்வரை மனித இனத்தை
காத்திடும் ஆயுதம் !

இரக்கம் இல்லா உள்ளங்களின்
உறங்கிடும் உயிர் !

உறவுகளில் உயர்ந்த உறவாய்
உருவமில்லா உறவு !

நட்பும் பகையும் உருவாகிட
காரணமான கருவி !

உறங்கிடும் நேரத்திலும் உறங்கிடா
கனவுலகின் கர்த்தா !

அரசியல் வாதிகள் அறிந்திடா
அடிப்படை அரிச்சுவடி !

உயர்ந்த உள்ளங்கள் உருவாகிட
உதவிடும் ஊன்றுகோல் !

நிகழ்வுகளை நினைவால் அலசி
உலர்த்திடும் கருவி !

நம்மை நாமே பார்த்துகொள்ளும்
நிலையிலா நிலைக்கண்ணாடி !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (9-Dec-12, 9:15 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 130

மேலே