மறுபடியும் பிறக்கிறேன்

கவிதை தான்
என் காதலி
மகிழ்ந்து களித்திட ..!

வானம் ,பூமி தான்
என் அளவுகோல்
தராசு போல ...!

கடல் தான்
எனக்கு எண்ணிக்கை லிட்டரில்
அளந்து மகிழ ...!

மலை அருவி தான்
எனக்கு நித்தமும்
சடுகுடு விளையாடிட ..!

மழைதான்
எனக்கு சண்டை போட
கட்டி அணைத்திட ...!

மரங்கள் தான்
எனக்கு சாய்ந்துகொள்ள
தானாகவே விசிறிக் கொள்ள ..!!

பறவைகள் தான்
எனக்கு ஓடிப் பிடித்து விளையாடி
பட்டம் விட்டு பறக்க விட ..!

ஆடு மாடுகள் தான்
எனக்கு மவுனம் காத்திட
பேசாமல் ஊமை மொழி பேசிட ..!

நதியோடு தான்
எனக்கு மேலும் கீழும் குதித்து
ஓடி விளையாட ..!

இவை கனவாக ....
இல்லை !இல்லை!
நிஜமாக இருந்தால் ...!

குளத்தில் வளரும்
தாமரையாகவோ
அல்லியாகவோ
பிறந்திட
ஆசைப் படுகிறேன் ...!!

எழுதியவர் : செயா ரெத்தினம் (10-Dec-12, 7:34 am)
பார்வை : 132

மேலே