தமிழிலே பேசுவோம் .....

பழமையும் தொண்மையும் பார்புகழும்
போற்றிடும் மொழியாம் தமிழ்மொழி !
தாய்மொழி பற்றும் தாயை நேசிப்பதும்
இரண்டும் ஒன்றே என்றும் நன்றே !

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினால்தான்
இனி நமக்கு வாழ்வும் புகழும் என்றால்
வாழ்ந்து மறைந்த வள்ளுவனும் பாரதியும்
இன்றும் வாழ்வது எழுதிய தமிழால்தானே !

தமிழ்மொழிக் கல்வி தடைபடும் ஏற்றம்
தமிழில் பேசுவது சமுதயாக் குற்றம்
இவை யாவும் இதயத்தில் இருந்தால்
இதைவிட துரோகம் தமிழுக்கு இல்லை !

அம்மா அப்பாதான் பேச்சின் ஆரம்பம்
மம்மி டாடிஎன்பது பூசிய அலங்காரம் !
ஆங்கிலம் என்றுமே இணைப்பு மொழி
தமிழோ நம்மை அணைக்கும் மொழி !

தலைமுறையாய் தழைத்திட்ட தமிழை
அழியாமல் என்றும் அணையா விளக்காய்
காத்திட தயங்காமல் தமிழில் பேசுவோம்
தவறிடும் எவரையும் தட்டிக் கேட்போம் !


தமிழை வளர்த்த அறிஞர்களும் உண்டு !
தமிழால் வளர்ந்த தலைவர்களும் உண்டு !
வீட்டில் தமிழிலேயே பேசுங்கள் !
தமிழை அழியாமல் காத்திடுங்கள் !

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (13-Dec-12, 10:01 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 217

மேலே