முள் கிரீடம்..!
முடி சூடிய கிரீடங்களே..
முள் கிரீடத்திடம் பணிந்தது..!
முக்காலத்திற்கான போதனைகள்
ஒரு காலத்தில் தந்தது.
கற்கால மனிதனையும்
பிற்காலனாய் மாற்றியது..!
பிறகென்ன…?
முள் கிரீடத்திற்கு பதிலாய்
மலர் கிரீடம் சூட்டினோம்..,
ரத்தத்தில் பூக்கள் நனைந்தன..!
போர்களைத் தவிர்த்த
சிலுவைகள் போரினை
அடையாளப்படுத்தின..!
அவர் மீண்டும்..
அவதரிக்க விரும்புகிறோம்..,
ஆனால்,
சிலுவையில் அறையவே
காத்திருக்கிறோம்..!
சுயநலம் பீடித்த
மனிதர்களிடத்தில்
அவரெங்கு தப்ப முடியும்..?