உங்கள் பெயர் நிலைத்திட வாழுங்கள்
வானத்தை வெறித்து பார்த்தால் மட்டும்
போனவன் வருவானா ? பூமியில்
இழந்தவன் கிடைப்பானா - இங்கு இறந்தவன்
பிறப்பானா ..
மழை வானத்தை விட்டு வந்த
பின்னே மேகம் கேட்குமா - இந்த
துளி எனதென மேகம் கேட்குமா ..
குழந்தை பிறந்து வெளிவந்த
பின்னே கருவறை ஏற்குமா ? அந்த
சேய்தனை கருவறை ஏற்குமா .
இருப்பதை கிடைப்பதை
வைத்துக்கொண்டு - மகிழ்ச்சியாய்
வாழ்ந்திட வாருங்கள்... உலகில்
தோற்றதும் மனதை தேற்றுங்கள் ....
பிறந்தோம் வாழ்ந்தோம்
என்றில்லாம் சாதிக்க பாருங்கள் ,
உலகில் உங்கள் பெயர் நிலைத்திட
வாழுங்கள் .