உங்கள் பெயர் நிலைத்திட வாழுங்கள்

வானத்தை வெறித்து பார்த்தால் மட்டும்
போனவன் வருவானா ? பூமியில்
இழந்தவன் கிடைப்பானா - இங்கு இறந்தவன்
பிறப்பானா ..

மழை வானத்தை விட்டு வந்த
பின்னே மேகம் கேட்குமா - இந்த
துளி எனதென மேகம் கேட்குமா ..

குழந்தை பிறந்து வெளிவந்த
பின்னே கருவறை ஏற்குமா ? அந்த
சேய்தனை கருவறை ஏற்குமா .

இருப்பதை கிடைப்பதை
வைத்துக்கொண்டு - மகிழ்ச்சியாய்
வாழ்ந்திட வாருங்கள்... உலகில்
தோற்றதும் மனதை தேற்றுங்கள் ....

பிறந்தோம் வாழ்ந்தோம்
என்றில்லாம் சாதிக்க பாருங்கள் ,
உலகில் உங்கள் பெயர் நிலைத்திட
வாழுங்கள் .

எழுதியவர் : -நளி. (26-Dec-12, 8:14 pm)
சேர்த்தது : Nalini muthu
பார்வை : 114

மேலே