அழிவு தூரமில்லை
மனிதன்,
மனிதம் என்பதன்
புனிதம் உணர மறந்துபோனான்...
தான் வாழ
மற்றவரை கெடுக்க
பழகிவிட்டான்...
ஒரு வேலை தவறினால்
மன்னித்து மறந்துவிடலாம்...
மன்னித்துவிடும் இந்த உலகம்
என்ற போதையில்
ஓயாமல் தவறுபவனும்
அதனை மன்னிப்பவனும்
மண்ணைக் கெடுக்கும் மாக்கள்தான்...
இப்படியே போனால்
விடிவுக்கு வராத உலகிற்கு
முடிவுதான் வரும்...
-இப்படிக்கு ஒரு தமிழன்...