இதழ் ரேகை...!!!

கண்மணி,
நீ என் விரல் பிடித்த போது,
அதில் விட்டுச் சென்ற ரேகைகளை.....,
தண்ணீர் அழித்து விடலாம்...!!!

நீ என் இதயம் கசக்கிய போது,
அதில் விட்டுச் சென்ற ரேகைகளை.....,
நெருப்பு எரித்து விடலாம்...!!!

நீ என்னை விரலால் முத்தமிட்ட போது,
என் இதழில் விட்டுச் சென்ற ரேகைகளை....,
உன் இதழ் கொண்டே அழித்து விடலாம்...!!!

ஆனால் என்னவளே,
உன் விழிகள் என் நினைவுகளில் விட்டுச் சென்ற ரேகைகளை...,
தண்ணீரால் அல்ல,நெருப்பினால் அல்ல,
உன் குளிர் முத்தத்தால் அல்ல,
எதை கொண்டும் அழிக்க முடியாது...!!!

இவன்,
நிர்மல் குமார்

எழுதியவர் : நிர்மல் குமார் (2-Jan-13, 7:43 pm)
பார்வை : 270

மேலே