"கவிஞனின் சுகப் பிரசவம் ........."

"கவிஞனின் சுகப் பிரசவம் ........."

வெங்கதிரும்,
வெண்மதியும்.........

தீயின் சுடுதலும்,
தென்றலின் தொடுதலும்.........

வானத்து நிலவும்,
வண்டு மொய்க்கும் மலர்களும் .......

துண்டு மேகமும்,
தூரத்துத் தொடுவானமும்..........

எழுதுகிறவனுக்கும்
எழுத்துக்கும்..............

எடுத்துச்சொல்ல முடியாத ஓர்
உள்ளார்ந்த ஈடுபாடும்-நேசமும்
இருக்க வேண்டும்.......

இந்தக் கலவியால் மட்டுமே
கருத்தரிப்பதென்பது சாத்தியப்படும்.......

"ஓர் கவிஞனால் அப்பொழுதுதான்
சுகமாய்ப் பிரசவிக்க முடியும்.........."

எழுதியவர் : Sureka (1-Nov-10, 10:49 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 427

மேலே