அன்றே உறக்கமடி..........

அன்றே உறக்கமடி..........

கன்றாக நான் மாறிக்
குன்றேறிக் குதிக்கின்றேன்.......

அன்றாடம் உன்னை நினைத்து
தென்றலாய் அலைகின்றேன்........

அன்று நான் சிறுபிள்ளை
அழகுன்னைக் கண்டதில்லை......

என்றுனைப் பார்த்தேனோ
அன்று நான் பருவமடந்தேன்.......

தொன்று தொட்டுக் காதலுக்கு
கண்ணில்லை என்பார்கள்............

கண்ணில்தான் நம் காதல்
கருவுற்றுக் கணிந்ததடி.............

ஒன்றுடன் ஒன்றிணைய
ஒன்றுதான்;இரண்டல்ல,

என்று நாம் புதுக்கணக்கு
எழுதிடுவோம் உலகினுக்கு.............

"என்றுனை நான் சேர்ந்து
இன்னுயிரில் கலப்பேனோ..,

அன்றுதான் உறக்கமடி
அதுவரைக்கும் கலக்கமடி............."

எழுதியவர் : Sureka (1-Nov-10, 10:58 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 442

மேலே