போராட்டம்
என் இதயத்தில்
உன் துடிப்பு...
இருப்பினும் ஏனிந்த
வஞ்சக போராட்டம்???
உனக்காக ஓரிதயம்
ஓயாமல் துடிக்க...
காணும் நொடியில்
காதலோடு பார்க்கிறாய்...
நெருங்கி வருகையில்
நெருப்பாய் சுடுகிறாய்...
உன்னோடு வாழத்தான்
வாழ்ந்துவிடத்தான் ஆசை...
வழியின்றி உன்னினைவோடு
வாழ்ந்துகொண்டு சாகிறேன்...