ரூபி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரூபி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  18-Mar-2019
பார்த்தவர்கள்:  337
புள்ளி:  36

என் படைப்புகள்
ரூபி செய்திகள்
ரூபி - Priya Pandi அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Nov-2019 1:34 pm

என்னால் சரியான முடிவை எடுக்க முடியவில்லை எப்போதும் குழப்பமான மனநிலையிலே இருக்கிறேன் .
. என் மன நிலையை தெளிவு படுத்த யாரிடமாவது கேக்கும் பொது அவர்கள் கூறும் பதில் மேலும் என்னை குழப்பமடைய வைக்கிறது .இதற்கு தீர்வு தான் என்ன

மேலும்

ஒரு செயலை பற்றி நான்கு பேரிடம் விசாரிக்கலாம், பிறகு ஒரு முடிவுக்கு வந்து நம் எண்ணப்படி செயல்பட வேண்டும். எதையும் யோசித்துக்கொண்டே இருக்கக்கூடாது. செயலில் இறங்க வேண்டும். சரியாய் தவறா என்பது பின்னாளில் புரிய வரும். 04-Dec-2019 4:11 pm
அன்பு தோழி, உங்களின் மனநிலை எனக்கும் பல சமயங்களில் இருந்து உள்ளது... இதற்கான தீர்வு உங்களை நீங்களே ஆராய்வதில் மூலம் கிடைக்கும்... தன்னிலை அறிதலை விட சிறந்த தீர்வு ஏதும் இல்லை... உங்களின் மனதின் குணாதிசியங்களை பட்டியலிட்டு ஆராயுங்கள்... தீர்வு நிச்சயம் கிட்டும்... நம் மனதின் குழப்பத்தை நம்மால் மட்டுமே தீர்க்க இயலும்... இது எனது அனுபவத்தின் மூலம் நான் கண்ட தீர்வு... உங்கள் குழப்பங்கள் தீர பிராத்திக்கிறேன்... 27-Nov-2019 12:11 pm
வணக்கம் ப்ரியா பாண்டி. நான் எனது ஆவாஸ் (ஆவாஸ் - ஆஸ்ட்ரா வாழ்வியல் ஜென்ட்டர் - AUVAAZ - Auztra Vaazhviyal Zenter) வழியாக மாணவ மாணவியருக்கும் இளைஞருக்கும் வாழ்வியல் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன். உங்கள் கேள்வி - எப்போதும் குழப்பமான மன நிலையில் இருக்கும் நான் என் மனநிலையைத் தெளிவாக்கிக் கொள்ள என்ன வழி? ஒரு பிரச்சினை அல்லது முடிவெடுக்க வேண்டிய வேலை நமக்கு வரும்போது இதைப்போலக் குழப்பமான மனநிலை ஏற்படும். அதுவும் நமது முடிவு பல பின் விளைவுகளை ஏற்படுத்தும் எனும் போதும் தவறான் முடிவாகப் போய் விடுமோ எனும் சந்தேகம் ஏற்படும் போதும் இது அதிகமாகி நமது வேலையைப் பாதிக்கும். இதற்கு முக்கியமாக காரணங்கள் பல இருந்தாலும் முக்கியமான காரணம் நம்மிகம் அந்தப் பிரச்சினை அல்லது வேலை பற்றிய அனைத்துத் தகவல்களும் தேவையாக அளவில் நம்மிடம் இல்லாததே ஆகும். இன்னொரு காரணம் அந்தப் பிரச்சினை அல்லது வேலையை முடிக்க ஒன்றிற்கு மேற்பட்ட வழிகள் இருப்பது என்பதாகும். மூன்றாகது காரணம், அந்தப் பிரச்சினை அல்லது வேலையைப் பற்றிய முன் அநுபவம் இல்லாதது ஆகும். இதற்கு மன் நல ஆலோசனைகளோ மருத்துவமோ தேவையில்லை. வர்ம யோகப் பயிற்சிகளில் நினைவாற்றலைப் பன்ம்டங்கு கூட்டும் பயிற்சிகளும் தகவல்களை ஒருங்கிணைத்துக் குறியீடுகள் மூலம் மனதில் நிரந்தரமாகப் பதிக்கும் பயிற்சிகளும் உள்ளன. எண்ணற்ற அளவில் தகவல்களை நம் மனதில் என்றென்றும் எந்த வயதிலும் துளிக் கூட மங்காமல் நிலைக்கச் செய்ய இவை பேருதவி புரிகின்றன. உங்களது கேள்வி இன்னும் கொஞ்சம் விரிவாகவும் தெளிவாகவும் தெரிய வேண்டும். உங்களுக்கு இந்த ஆலோசனைகள் தனிப்பட்ட முறையில் வேண்டும் என்றாய் மின்னஞ்சல் வழியாகவும் இந்தப் பக்கத்திலேயே வேண்டும் என்றால் தெளிவாக விரிகாக் உங்கள் குழப்ப மனநிலையைப் பற்றிய தகவல்களுடனும் மீண்டும் தொடர்பு கொள்ளுங்கள். எந்தப் பிரச்சினைக்கும் அறுகோண நோக்கின் வழியே தெளிவான் உறுதியாக முடிவை எளிதாக எட்டலாம். மிக்க நன்றி!! வணக்கம்! 24-Nov-2019 11:14 pm
Confused foru 23-Nov-2019 11:14 pm
ரூபி - தீப்சந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2019 9:05 am

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?

மேலும்

கற்பு என்பது இருபாலுக்கும் சமம் என்பது அனைவரும் ஏனோ ஏற்பதில்லை... ஒரு பெண் எது செய்தாலும் அது சமூகத்தில் ஒரு பூதக்கண்ணாடி மூலமாகவே பார்க்கப்படுகிறது... சமூகம் என்பது வேற்று கிரக மனிதர்கள் அல்ல... நாம் அனைவரும் சேர்ந்ததே சமூகம்... ஒரு வீட்டில் ஒரு ஆண் தனது மனைவிக்கு செய்யும் துரோகம் ஏற்றுக்கொள்ளப்படும் பொது சமூகம் அதை பின்பற்ற தொடங்குகிறது... சமூகம் மாற நாம் மாறுவோம்.... கற்பு அனைவர்க்கும் சமம் என்பதை நாம் கற்போம், பின்னே சமூகத்திற்கு கற்பிப்போம்.... 13-Oct-2019 9:51 pm
எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டே வருகிறோம் இம்மறுமலர்ச்சியையும் பேதமின்றி ஏற்றுக்கொள்வோம் 30-Sep-2019 2:06 pm
சில ஆண்கள் மற்ற பெண்கள் மீது காட்டும் இரக்கம் அந்த பெண்ணை அவர் மீது காதல் கொள்ள செய்யலாம்... அவரும் அந்த அன்பு புதிதானதாக எண்ணி திசை மாறலாம்...... ஆனால் அந்த திசைமாறல் தவறு...... அது அவன் தன் மனைவிக்கு செய்யும் துரோகம்...... திசைமாறிய பாதை வாழ்வில் வெற்றியை ஒருபோதும் தரா..... இதை இன்றைய சமூகம் சாதாரண மாகவே பார்க்கிறது...... ஏனென்றால் சட்டமே பச்சை கொடி காட்டுகிறது...... ஆண் பெண் வேறுபாடு என்பது இதில் விலக்கல்ல..... விரும்பினால் யார் யாருடனும் வாழலாம்..... நான் சொல்லவில்லை...... நாசமா போன சட்டம்....... சொல்லுது. தமிழ் பண்பாட்டுடன் பார்க்கும் இது தவறானது மாக்கள் (மனிதம் இல்லாதவர்) பார்வையில் பெண் இந்த தவறை செய்தால் இழிவாகவும்.... ஆண் செய்தால் வீரமாகவும் கருதப்படுகிறது 28-Sep-2019 10:23 pm
வணக்கம் தோழர்களே ....... நிச்சயம் பெண்ணுக்கு கற்பு என்ற ஒன்று உங்கள் கட்டமைப்பில் உள்ளது என்றால் அது ஆணுக்கும் பொருந்தும் அது எப்படி பெண்ணுக்கு மட்டும் தான் அது உள்ளது என்று சொல்ல இயலும் ஆசா பாசங்கள் , வெறுப்பு விருப்பு , என்பதெல்லாம் எல்லோருக்கும் இயல்பு தானே பிறகு கற்பு மட்டும் பெண்ணுக்கு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் கற்பு என்ற வார்த்தையே பெண்ணை அடிமை பண்ண அல்லவா உருவாக்க பட்டது . ஆண் என்ற பாலினம் போல பெண் என்பதும் ஒரு பாலினம் தானே தவிர அவள் ஒன்றும் பூஜிக்கும் பொருள் அல்ல பெண்ணை பெண்ணாக சம உயிராக பார்த்தாலே இந்த கற்பு என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்த மாட்டார்கள் , இறுதியாக ஒன்று பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது நமக்கும் பொருந்தும் ஆகவே கற்பு என்ற ஒன்று இருக்கும் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்........ 24-Sep-2019 1:26 pm
மேலும்...
கருத்துகள்

மேலே