பூங்குழலி தமிழ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பூங்குழலி தமிழ்
இடம்:  coimbatore
பிறந்த தேதி :  30-Dec-1995
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Jun-2014
பார்த்தவர்கள்:  672
புள்ளி:  87

என்னைப் பற்றி...

இறுதி ஆண்டு கணினி அறிவியல் பயிலும் சிறு வாசகி..

என் படைப்புகள்
பூங்குழலி தமிழ் செய்திகள்
பூங்குழலி தமிழ் - திருமூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Jan-2016 11:36 am

என்னுடைய குழந்தைப் புகைப்படம் ...எனது செல்லப்பெயர் ஆனந்த்..வீட்டில்....உறவினர்கள்,நண்பர்கள்..,எங்கள் ஊர் மக்கள் எல்லோருக்குமே என்னை ஆனந்த் என்றால்தான் தெரியும்...பள்ளி கல்லூரியில் மட்டுமே எனது பெயர் திருமூர்த்தி ...எனக்கு ஆனந்த் எனற பெயர்தான் மிகவும் பிடிக்கும் ..நன்றாக ஞாபகம் இருக்கிறது ..கோபிசெட்டிபாளையம் புகைப்படக் கடையில் அப்பா இருக்கையில் அமர்ந்துகொண்டு என்னை பக்கத்தில் நிற்கவைத்து படம் எடுக்கச் சொன்னார் ..ஆனால் நான் அடம்பிடித்து தூக்கிகொள்ளச் சொன்னேன்...பிடிவாதத்தோடு அழுததால் எனது ஆசைப்படியேஅவர் தூக்கிக்கொண்டு படம் எடுத்தார் ..பாருங்கள்,அழுத முகத்தோடு எனது உதடுகள் எவ்வளவு பிதுங்கி உள்ளது என்று ...


இந்தப் புகைப்படம் எனது பழைய புத்தகங்களை தூசிதட்டி தூய்மைப் படுத்தும்போது நினைவின் அச்சில் மீண்டும் பதிப்பேறியது ....இந்த போகிப்பண்டிகையில் மலர்ந்தது எனது மழலை கனவுகள் ...

அப்பாவுக்கு பெண் குழந்தை என்றால் மிகவும் விருப்பம் ..அதனால்தான் என்னை இப்படி அழகாக சீவி சிங்காரித்து இருக்கிறார் ... இந்த கணம் நான் ஏதோ ஒன்றை அவரிடமிருந்து இழந்து விட்டதாக மனது உறுத்துகிறது ...

நன்றி ...

வாழ்வின் ரசனைப் பயணத்தில் ..
திருமூர்த்தி 

மேலும்

நன்றி நட்பே ..! 21-Jan-2016 11:35 am
அழகான.....படம்....ஆனந்த்...... 19-Jan-2016 8:00 pm
நன்றி தோழமையே ..! 19-Jan-2016 7:52 pm
சோ cute த அண்ணா புட்டு புட்டு நு அழகா இருக்கேங்க 18-Jan-2016 12:19 pm
பூங்குழலி தமிழ் - ரசிகன் மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Aug-2014 8:57 pm

விக்கல் எடுத்துக்கொண்டே இருந்தது

அம்மா சொன்னங்க

உன்னை யாரோ நினைக்கிறாங்க என்று

எனக்கு

கோவம்

கோவமாக வந்தது

அம்மாவிடம் கேட்டேன் நீ எனக்கு யாரோவா ???

( கேட்டதில் பிடித்தது )

மேலும்

செம சூப்பர் 07-Jan-2016 10:43 am
ரசித்ததற்கு மகிழ்ச்சி 15-Aug-2014 10:48 pm
அம்மம்மா அசத்தல் தோழரே ...!! 15-Aug-2014 12:09 pm
உண்மை உண்மை 15-Aug-2014 12:22 am
devi sri அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2014 6:36 pm

ஆடவரை நம்பாதே
ஆழ் கடலில் வீழாதே!
ஊடல் தரும் விழிகளையே
உத்தமியே நாடாதே!

குரங்கு மனம் கொண்டவனே
குவலயத்து ஆடவராம்!
மரந்தாவும் அவர்களிடம்
மனதினை நீ கொடுக்காதே!

இதயத்தை எடுத்து விட்டு
இன்பத்தை ஊட்டி விட்டுக்
கதைகள் பல பேசி வரும்
காளையரை நம்பாதே!

பாதை தனில் போகையிலே
பார்வையிலே காமத்தைப்
போதையுடன் ஊட்டுகின்ற
புருஷர்களை நம்பாதே!

காத லென்றால் கரும்பா வான்!
காளையவன் தினம் வருவான்!
பேதை நீ திருமணத்தைப்
பேசிடிலோ விலகிடுவான்!

காதல் என்று சொல்லவரும்
காளையரை நம்பாதே
வேதனையைத் தேடாதே!
வெதும்பி மனம் வாடாதே

மேலும்

சரியா தான் சொல்லிருக்கேங்க 07-Jan-2016 10:41 am
நன்றி 04-Sep-2014 7:31 am
ஆடவரை அருமையாகச் சாடிவிட்டீர்கள். பெண்கள் கில்லாடித்தனம் பற்றியும் நாளிதழ்களில் ஏராளமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன 03-Sep-2014 7:35 am
பூங்குழலி தமிழ் - வெசந்தோஷ் ஹிமாத்ரி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Aug-2015 11:08 am

அண்ணன் என்பவளுக்கு
அரைபிடி புத்தகமும் கிடையாது..


ஹால் டிக்கெட் வரும்வரை
பரீச்சை காத்திருக்காது..


ஜீனியர் வழிந்தாலும்
அளவோடு வழிந்திடு...

அகல இருந்தால் அரைத்திட்டு,
கிட்ட வந்தால் முட்ட மார்க்.


எவ்வளவு மதிப்பெண்ணாயினும்
கடைசியில் ஒரே குழி.

காதலி டிபன்
நண்பனுக்கும் மிஞ்சும்.

மேலும்

அண்ணன் என அழைக்கும் பெண் புத்தகம் கேட்டால் தர மாட்டோம்... :) 20-Aug-2016 12:56 pm
அண்ணன் என்பவளுக்கு அரைபிடி புத்தகமும் கிடையாது.. இதுக்கு என்ன அர்த்தம் எனக்கு புரியல? 07-Jan-2016 10:30 am
பூங்குழலி தமிழ் - மாரியப்பன் S அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jan-2016 12:42 pm

மனைவி கனவனிடம் சொன்னாள்,
நான் கர்பமாக இருக்கிறேன் என்று..
அதற்கு கணவன்
அவளை அணைத்து முத்தமிட்டபடியே
சொன்னான்,
’நாம் கர்பமாக இருக்கிறோம்’ என்று சொல்...
உன்னுள் வளர்வது என்னில் பாதி உன்னில்
பாதி, உன்
கருவை என்னால் சுமக்கமுடியாது தான்
ஆனால் கர்பத்தில்
இருக்கும் உன்னையும் நம் குழந்தையையும்
நான்
இதயப்பூர்வமாக சுமக்கிறேன்...
இப்போது சொல் ”நாம் கர்பமாக இருக்கிறோம்”
என்று...
இது தான் உண்மையான காதல்!!

மேலும்

வாழ்த்துக்கு நன்றிகள் பல ............................. 06-Jan-2016 11:54 am
செம அழகு.. 06-Jan-2016 9:51 am
உணர்வாக எனக்குள் பதிந்த வரிகள் என்றுமே மறக்காது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Jan-2016 11:46 pm
பூங்குழலி தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2015 4:40 pm

காணா கண நேரத்தில் உன்னை
காண விரும்பி நான் ஏங்க
தூங்கா இரவதினில்
என் நினைவு தேடி நீ வாட
பனிப் பொழுதின் குளிரதினில்
இருவர் பார்வையும் சேர
மறைத்து வைத்த காதல்
அனைத்தையும் மழையென
நாம் பொழிந்தோம்
இறுக்கமான அணைப்பதிலே..

மேலும்

சந்தோசம் பா.. 06-Jan-2016 2:02 pm
வாவ் ஜுபேறு 06-Jan-2016 11:56 am
ஓஹு இது உங்களுக்கும் தெரிஞ்சுடுச்சா !!!!!!!!! 04-Jan-2016 9:46 am
பூங்குழலி தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Dec-2015 9:59 am

மூடிய கருவறைகள் மீண்டும் திறக்கட்டும்
அவன் இன்று விடுப்பு
அவளை நான் இன்று காண
நேற்றைய அவளிடம் நான் செல்வேன்..

யார் கூறியது பெண்களுக்கு மட்டும் தான்
கருவறை உண்டு என்று?
ஆண்களுக்கு மட்டுமே உண்டு
காதல் எனும் குழந்தையை சுமக்கும்
ஒவ்வொரு ஆணின் மனமும்
இல்லை இல்லை கருவறையும்
ஒரு பெண்ணை தானே சுமக்கிறது
பெண்ணையும் சுமக்கும் கருவறை ஆணே..!!!!

மேலும்

கருத்திற்கு நன்றி 30-Dec-2015 9:17 am
சிறப்பு 29-Dec-2015 1:35 pm
நன்றி :-) 28-Dec-2015 4:28 pm
பூங்குழலி தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2015 10:02 am

பார்க்க நினைத்த இடத்தில் நீ இல்லை
பார்க்காத உலகில் நீ இருந்தாய்
கனவில் கனவு கான் என்றான்
கண்டேன் காதல் கொண்டேன்
அவனே என் உயிராக...

மேலும்

வாழ்த்து‌‌ ம்ம் 13-Jul-2022 9:45 am
இது எங்கங்க சந்தேகம் இருக்குது ??!!! 17-Dec-2015 9:55 am
காதல் கொண்ட பின் சந்தேகம் எனும் நஞ்சை தூக்கி வீசி விடுங்கள். 17-Dec-2015 12:24 am
நன்றி :-) 16-Dec-2015 12:09 pm
பூங்குழலி தமிழ் - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Dec-2015 9:57 am

ஒரு விழி இரு பார்வை
இரட்டை காட்சி ..
ஒற்றை பார்வை கருவிழி
இரு விழி ஒற்றை காட்சி முனையில்
அட நீ தானோ ???

மேலும்

இது நான் எழுதலீங்கோ 17-Dec-2015 9:53 am
அப்படியும் இருக்கலாம் இன்னும் ரசித்து எழுதுங்கள் 17-Dec-2015 12:23 am
சங்கீதா அளித்த எண்ணத்தை (public) மாரியப்பன் S மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
23-Jun-2015 4:48 pm

அனைவரும் உணர்ந்தால்
அனைத்து உறவுகளிடம்
அன்பைபெற முடியும் ....

மேலும்

ஆம் நட்பே... நன்றிகள் nadpe... 24-Jun-2015 11:25 am
உண்மை தான் மா சகி ....... 23-Jun-2015 5:16 pm
ஆம் நட்பே... நன்றிகள் மா... 23-Jun-2015 5:03 pm
மிக உண்மையான வார்த்தை நட்பே 23-Jun-2015 4:50 pm
மனிமுருகன் அளித்த எண்ணத்தை (public) மாரியப்பன் S மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
22-Jun-2015 3:51 pm

உன் அழகு
உன் அழகு
கவிதை எழுதிய நான்
உன் காதலன் ...
அதை ரசித்த நீ
என் காதலி .......என்றால்
காதலை இப்போது - நீ
அழிக்க நினைக்கிறாய் .......

கேட்டால் - நான்
நான் கவிதைக்குத்தான்
காதலி என்கிறாய்!
பரவாயில்லை
நாட்கள் சென்றவுடன்
என்னை அழித்தது போல்
என்
கவிதையையும் அழித்துவிடாதே.....
அவைதான் உன்னை அழகுபடுத்தியவை!

என்றும் அன்புடன்
அ.மணிமுருகன்

மேலும்

சங்கீதா அளித்த படைப்பை (public) திருமூர்த்தி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
25-Apr-2015 2:39 pm

முத்தம் ....

சத்தமின்றி .............
சம்மதத்துடன் ..................
இரு இதழ்கள் ....................
போர் தொடுக்கும் ................
மௌனமாய் .........................
.............முத்தம்.....................

மேலும்

இனிப்பு... 26-Jun-2015 5:49 pm
ம்ம்ம்ம் நன்றி சத்யா.....மிக்க மகிழ்ச்சி மா.... 28-Apr-2015 1:24 pm
அழகு சகி மா ... 28-Apr-2015 1:21 pm
நட்பின் வரவிலும் வாழ்த்திலும் மிக்க மகிழ்ச்சி .... மிக்க நன்றி நட்பே... 25-Apr-2015 3:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (44)

மன்னை சுரேஷ்

மன்னை சுரேஷ்

காட்டுமன்னார்குடி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அரவிந்த்

அரவிந்த்

thiruthuraipoondi
மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்

இவர் பின்தொடர்பவர்கள் (45)

வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (46)

மேலே