இணுவை லெனின் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இணுவை லெனின்
இடம்:  ஈழம் (paris. )
பிறந்த தேதி :  31-Oct-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Aug-2014
பார்த்தவர்கள்:  863
புள்ளி:  81

என்னைப் பற்றி...

புலம் பெயர்ந்த தமிழன்
(எதிர்கால விவசாயி )

மகிழ்ச்சி

என் படைப்புகள்
இணுவை லெனின் செய்திகள்
மீ மணிகண்டன் அளித்த எண்ணத்தில் (public) manimee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Jun-2019 5:59 am


வருவாயே நீயுமென்று.... 

எனது வரிகள்... தீபிகா நவீன் அவர்களின் இசையிலும் குரலிலும்.....

தங்களின் மேலான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

நன்றி
மீ.மணிகண்டன் 



மேலும்

சிறப்பு 06-Oct-2019 2:58 pm
நன்றி ஐயா தங்களின் ஆசியுடன் இன்னும் எழுதுவோம்.... நன்றி வாழ்க வளமுடன் 29-Jun-2019 2:30 am
மிகச் சிறப்பாக இருக்கிறது உங்கள் வரிகளும் இசையும் . பாடகியின் குரல் மிக இனிமை. பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது நவீனமான இசையை ஒட்டியிருப்பினும் பாடகியின் திருத்தமான உச்சரிப்பும் இசை வரிகளை அமுக்காமல் இயைந்து போகும் அழகும் பாடலுக்கு மெருகு கூட்டுகிறது . இன்னும் சில கண்ணிகள் எழுதலாமே. மழை அவ்வளவு எளிதாகவா வருகிறது இந்நாட்களில் ? பாராட்டுக்கள் பாடல் பிரிய மீ மணிகண்டன் & இசைக்குழு .பகிர்கிறேன் 28-Jun-2019 8:48 am
Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) G RAJAN மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Dec-2015 10:10 pm

மானென்பே னாடும் மயிலென்பேன் நீந்திடும்
மீனென்பேன் பார்வையோ மின்னலென்பேன்- தேனென்பேன்
தென்றல் வருடிட தெம்மாங்குப் பாட்டிசைப்பேன்
கன்னக் குழிதனைக் கண்டு

மேலும்

மிகவும் அழகு அம்மா......!! 21-Dec-2015 1:51 pm
கன்னமிட்டு மனதிலே நுழைகிறது கன்னக்குழி வெண்பா 19-Dec-2015 2:51 pm
அழகு 19-Dec-2015 2:49 am
ஆஹா ஓசைக்கு குயில்களும் உங்களிடம் கற்றுக்கொள்ளும் நயத்துக்கு மயில் கூடமும் உங்கள் பேனா கேட்கும் அம்மா 18-Dec-2015 11:09 pm
முதல்பூ அளித்த படைப்பில் (public) Punitha Velanganni மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Oct-2015 4:04 pm

என்னவளே...

ஒருமுறை சந்தித்தோம் மீண்டும்
சந்திப்போமா என்று நினைக்கையில்...

எதார்த்தமாக மீண்டும்
சந்தித்தோம்...

பார்த்துகொண்டது விழிகள்
அடித்துகொண்டது இமைகள்...

மோதிகொண்டது மூச்சுகாற்று
இடமாறிகொண்டது இதயம்...

இனிமையான ஓர்
காதல் பயணம்...

உன்னிடம் காதலனாக
இல்லாமல்...

கணவனாக சில அன்பு
கட்டளைகள் நான் இட...

நீ என்னிடம் மறுத்திருக்கலாம்
முடியாது என்று...

மௌனங்களை தந்துவிட்டு
என்னை பிரிந்து சென்றதேனடி நீ...

நீ இதழ்திறந்து பேசிருந்தால்
என்இதயம் தாங்கி இருக்கும்...

மௌனத்தால் என்னை
கொன்றுவிட்டு சென்றாயடி...

மீண்டும் என்னைவந்து சேர்வாய்

மேலும்

அலையாடுகிறது காதல் எத்தனை மென்மையான ஊடல்////செம 24-Oct-2015 2:39 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 23-Oct-2015 2:24 pm
அருமை தோழமையே... 22-Oct-2015 4:01 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 22-Oct-2015 3:38 pm
இணுவை லெனின் - செ செல்வமணி செந்தில் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2015 2:59 pm

முடிந்தவரை

ஏதேனும்

ஒரு செயலுக்குள்

எனை

முழுவதுமாக

தொலைத்தேனும்

உனை

மறக்க

முயலும்

என் முயற்சிகள்

அத்தனையையும்

முறியடிக்கின்றன



உன் நினைவுகள் ..............

மேலும்

நன்றி தோழா !! 07-May-2016 6:16 am
காதல் தரும் நினைவுகள் அருமை ,, வாழ்த்துகள் ! 06-May-2016 5:23 pm
மிக்க நன்றி மீனா !!! 12-Nov-2015 3:11 pm
மிக உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் தோழி தொடருங்கள் 12-Nov-2015 3:09 pm
பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) உதயகுமார் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Oct-2015 2:48 pm

மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்களின் 81 வது பிறந்தநாள் விழா அன்று , 

என்னை நெஞ்சார வாழ்த்தியும் , அன்பை பொழிந்த எழுத்து தள உறவுகளுக்கும் , முகமே அறியாவிடினும் பாசத்தோடு பாராட்டிய நட்புகளுக்கும் , அத்தனைக்கும் காரணமான அன்பு  நண்பர் திரு அகன் அவர்களுக்கும் சிரம் தாழ்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன் . 

நிலவோடு ஓர் உரையாடல்   நூல் வெளியீட்டு விழா , 

என்றுமே என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாய் அமைந்துவிட்டது. 

நன்றி நன்றி நன்றி 

மேலும்

முயற்சிக்கலாம் சார் .நண்பர்களுடன் பேசி முடிவு செய்யலாம் சார்..முடியும் என்று நினைக்கிறேன் 27-Oct-2015 10:07 pm
ஒன்றும் கவலை வேண்டாம் கருணா அவர்களே .....அடுத்த முறை அதற்கென்றே ஒரு சிறு கூட்டம் ஏற்பாடு செய்வோம் இங்கே....திட்டமிடுங்கள் நாளை , இடத்தை ( சென்னையில் ) , நேரத்தை , நபர்களின் எண்ணிக்கை ...அடுத்து தங்கும் வசதி , உணவு ஆகிய .....கூடி பேசுவோம் . நான் சொல்வது சரியா நிதியே ...... 27-Oct-2015 8:38 pm
தங்களோடு நீண்ட நேரம் கலந்துரையாடிய நண்பர்கள் கூட்டத்தில் நானும் ஒருவனாய் இல்லாமல் போனது குறித்து வருந்தினேன்..மீண்டும் ஒரு சந்திப்பு விரைவில் நிகழ ஆவல் கொண்டுள்ளேன் சார்..! 24-Oct-2015 9:02 am
நன்றி நன்றி நண்பரே! மீண்டும் இதுப்போலொரு விழாவில் விரைவில் சந்திப்போம் நாம் சென்னை வாசிகள் என்பதால் அதற்காண வாய்ப்புகள் அதிகம் 23-Oct-2015 9:15 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) manimee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Aug-2015 6:57 am

காதல் ONE SIDE பண்ணினாலும் TWO SIDE
பண்ணினாலும் கடைசியா SUICIDE தான் பண்ணக்கூடாது
-இப்படிக்கு காதல் பற்றிய FOUR SIDE -ம் யோசிப்போர் சங்கம்-

செருப்பு இல்லாம நாம நடக்கலாம்.ஆனா,
நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது
- இப்படிக்கு தீவிரமாக யோசிப்போர் சங்கம்-

அவள் என்னைத் திரும்பி பார்த்தாள்
நானும் அவளைப் பார்த்தேன்
அவள்..மறுபடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்...
-இப்படிக்கு பரீட்சையில் ஒண்ணுமே தெரியாமல் திரு திருவென விழிப்போர் சங்கம்-

மேலும்

மிக்க நன்றி ! வாழிய நலம் !! 04-Oct-2015 7:34 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 04-Oct-2015 5:44 am
வருகையாலும் கருத்தாலும் மனம் மகிழ்ந்தேன் 04-Oct-2015 5:44 am
அருமை ! 04-Oct-2015 1:23 am
இணுவை லெனின் - இணுவை லெனின் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2015 10:21 am

மலை மலையாய் உயர்ந்த அலை
மண்டியிடும் கடற்கரைகள்

கத்திக்கிடக்கும் கடல் ஒலியின்
உயிர்த்தொடக்கம் கடற்கரைகள்

நிலம் தின்னும் நீல கடலரக்கன்
கரையாமல் கரைக்கும் கடற்கரைகள்

கடலின் தொடக்கமா ? முடிவா?
கடற்கரை
பார்க்கும் பார்வையில் வாழ்வின்
படி சொல்லும் கடற்கரைகள்

மேலும்

##பயணம்## நீலவானம் நிலவாய் தோன்ற நீளும் பாதை அழகாய் தோன்ற காற்று வெளியில் காந்த மொழியில் பாடுப்பாடி பயணம் போயிடுவோம் சேர்த்து வைத்த சோகத்தை எல்லாம் செலவுசெய்யும் இப்பயணம் துயில் கொள்ளும் கனவுகள் எல்லாம் உயிர் கொள்ளும் இத்தருணம் சிறை உடைத்த புள்ளினம்போல சிறகடித்து பூமியின் மேலே உறவுகள் எனும் இறகுகள் சேர்த்தே பறப்போம் மிதப்போம் இறப்போம் அதுவரையில் . உயிர்த்துகளாய் பிறப்போம் கணம் கணமாய்... 06-Oct-2019 7:35 pm
நன்றி மிக்க மகிழ்ச்சி 27-Aug-2015 11:40 am
மிக்க நன்றி அடுத்த படைப்பில் கடலாய் வருகிறேன் 27-Aug-2015 11:39 am
நன்றி தோழரே 27-Aug-2015 11:37 am
இணுவை லெனின் - பழனி குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2015 8:57 am

சென்ற பகுதியில் வாழ்வில் நடந்த சோகங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன் . இந்த பகுதியில் மாறுதலுக்கு மகிழ்ச்சியான நிகழ்வுகளை ​கூறிட விரும்புகிறேன் .

நான் வங்கியில் பணியில் இருந்தபோது வருடாந்திர பொது கூட்டங்களுக்கும் ( Annual General Meeting ) மதுரைக்கு 20 முறை சென்றது மட்டுமன்றி , இருமுறை குற்றாலத்தில் நடந்த இயக்குனர்கள் கூட்டத்திற்கும் , LFC யில் ஒரு முறை கோவாவிற்கும் , கொடைக்கானல் , ஊட்டி , மைசூர் , பெங்களுர், கோவை என்று சில ஊர்களுக்கும் சென்று உள்ளேன் .

1994 மற்றும் 1996 ம் ஆண்டுகளில் எங்கள் வங்கியின் வளர்ச்சிக்காகவும் , NRI Accounts க்காகவும் , நிர்வாகத்தின் மூலம் , உயர் அதிகாரிகளுட

மேலும்

இணுவை லெனின் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Aug-2015 10:21 am

மலை மலையாய் உயர்ந்த அலை
மண்டியிடும் கடற்கரைகள்

கத்திக்கிடக்கும் கடல் ஒலியின்
உயிர்த்தொடக்கம் கடற்கரைகள்

நிலம் தின்னும் நீல கடலரக்கன்
கரையாமல் கரைக்கும் கடற்கரைகள்

கடலின் தொடக்கமா ? முடிவா?
கடற்கரை
பார்க்கும் பார்வையில் வாழ்வின்
படி சொல்லும் கடற்கரைகள்

மேலும்

##பயணம்## நீலவானம் நிலவாய் தோன்ற நீளும் பாதை அழகாய் தோன்ற காற்று வெளியில் காந்த மொழியில் பாடுப்பாடி பயணம் போயிடுவோம் சேர்த்து வைத்த சோகத்தை எல்லாம் செலவுசெய்யும் இப்பயணம் துயில் கொள்ளும் கனவுகள் எல்லாம் உயிர் கொள்ளும் இத்தருணம் சிறை உடைத்த புள்ளினம்போல சிறகடித்து பூமியின் மேலே உறவுகள் எனும் இறகுகள் சேர்த்தே பறப்போம் மிதப்போம் இறப்போம் அதுவரையில் . உயிர்த்துகளாய் பிறப்போம் கணம் கணமாய்... 06-Oct-2019 7:35 pm
நன்றி மிக்க மகிழ்ச்சி 27-Aug-2015 11:40 am
மிக்க நன்றி அடுத்த படைப்பில் கடலாய் வருகிறேன் 27-Aug-2015 11:39 am
நன்றி தோழரே 27-Aug-2015 11:37 am
இணுவை லெனின் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-May-2015 4:14 am

உயிர் பெற்ற தமிழினம்
உடல் கருகி போன நாள்
ஓங்கிய தமிழ் நாதம்
ஓலமாய் போன நாள்

மீசை நரைத்த முதியவர்கள்
ஆசை வளர்த்த ஆடவர்கள்
கண்சிமிட்டிய காதலர்கள்
கல்வி தேடிய மாணவர்கள்
பேச தொடங்கிய மழலைகள்
பேணிக்காத்த விலங்குகள் என
கொத்தணிக்குண்டதுவில் கருகிய
கடைசி நாள்

புள்ளி விபர கணக்கின்றி
புகைந்து போன எம் சாவை
சொல்லி அழைத்து நீதி பெற
நாதி என்று ஏதும் உண்டோ ??????

வானத்தின் முடிவு தேடி
ஓடிடும் வாழ்க்கையாய்
தேடுகிறோம் நீதி
அழித்தவர்கள் யாரோ ????? .

மேலும்

தோழரே உண்மைகள் வலிகள் நிறைந்தவை 18-May-2015 10:06 pm
நன்றி தங்கள் கருத்திக்கு ஒன்றாவோம் ஒரே குரலாய் 18-May-2015 2:49 pm
வலிக்கிறது வரிகள் 18-May-2015 2:26 pm
நீதியும் நியாயமும் தமிழர் விடயத்தில் பொய்த்துப்போன நாள்தான் இந்த மே 18, அன்று தொடங்கி இன்றுவரையும் தொடர்ந்து தமிழன் வஞ்சிக்கப்பட்டுகொண்டு இருக்கிறான். இந்த உலகத்தில் தமிழனுக்கு நியாயம் பேச எவரும் முன் வராதது வேதனையாக இருக்கிறது. பேரினவாத சக்திகள் தமிழனின் இருப்பை சிதைத்து, தமிழனின் தொன்மையான வரலாற்றினை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். உலகமகா பேரினவாத சக்திகளிடம் இருந்து தமிழனத் தன்னைத்தானே காப்பாடிக்கொள்ளவேண்டிய நிலையில் இன்று இருக்கின்றான். இனியும் ஒற்றுமை இன்றி பிரிந்தே கிடந்தால் தமிழனின் இருப்பு இல்லாமல் போய்விடும் என்பதுதான் உண்மை. 18-May-2015 2:17 pm
இணுவை லெனின் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2015 3:48 pm

ஆண் என்றும் பெண் என்றும்
இரட்டை கோடுகள் இணைத்துகீறிய
அழகிய ஓவியம் மழலைகளே

மழலை முகங்களே
மகிழ்வின் குறிகளே
உலகின் பொதுக்கவிதை
மழலை மொழிகளே

பூவிலும் மெலிதாய்
பொலிவுற்ற மேனி -நீ
மௌனம் என்பதே
அறியாத ஞானி

அசையும் பொருட்கள்
உன் தோழர்
அசையா நிலவும் உன்
சிறுவிரல்க்கு அடிமை

கவிசெய்து புவி வெல்லும்
கவி வல்லர் ஆயினும்
உன் மழலை மொழி கேட்பின்
மண்டியிட்டே ஆகணும்

நோயுற்று நான் வீழிலும்
உன் நினைவுண்டு வாழ்ந்தாலே
மருந்துகள் செய்யாமாயம்
உன் மலர்முகம் செய்யுமே

பணமொன்று தேவையாய் -மனதுள்
பதிகின்ற வரையிலே
குழந்தைகள் கடவுளின் நகல்களே

மேலும்

மிக்க நன்றி திரு பழனி குமார் அவர்களே .. தங்கள் வரவில் மகிழ்ச்சி 22-Mar-2015 11:05 pm
மிக்க நன்றி தோழரே ... மகிழ்ச்சி 22-Mar-2015 11:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழரே . தங்கள் கருத்திக்கு நன்றிகள் 22-Mar-2015 11:06 am
மிக்க நன்றிகள் நட்பே மகிழ்ச்சி 22-Mar-2015 11:04 am
இணுவை லெனின் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Mar-2015 5:09 am

மீள்பதிப்பு

என்மகளே அறிவாயோ
என் நிலைமை இது என்று
தென்கிழக்கு கடல்தாண்டி
அவுஸ்ரேலிய தீவு சிறையில்
தாய் தேசம் பிரிந்ததனால்
தவிக்கிறோம் விடை இன்றி

முள்ளி வாய்க்கால் போரிலே
உன் அன்னை மாண்டபின்பு
உனக்காக என்வாழ்க்கை -என
உயிர் பெற்று நான் எழுந்தேன்

எனை பெற்றோர்
உனை வளர்க்க
காணி வித்த காசிலே
கடல் கடந்து
கரை தொட்டேன்
அக்கணமே சிறைபட்டேன்
இத்தீவில்

உதிர்ந்து விழுந்த பால்பற்கள்
அதில் ஒளிர்ந்து நின்ற
புன்னகையும்
குதிரைவால் கொண்டையிட்டு
குதிக்கும் உன் குறும்பும்
எப்போது காண்பேனோ
என்மனம் ஏங்கும்

நத்தார் பொங்கல் என்று
மதம் கடந்து மகிழ்ந்தோம்
கடல

மேலும்

நன்றி தோழரே ... உண்மைகள் உண்மையில் வலிமிக்கவை . 21-Mar-2015 2:46 pm
தனி தனி தீவானோம்....நாளை நம் தேசத்தில் நம் வாழ்க்கை .... வலி காட்டும் வரிகள் தோழா... 21-Mar-2015 12:47 pm
நன்றி தோழரே தங்கள் வரவில் மகிழ்ச்சி 16-Mar-2015 2:00 pm
வலிகளின் வரிகளில் மனதில் காயங்களாகிறது... வாழ்துகள் தொடருங்கள்... 16-Mar-2015 1:25 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (107)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
தீனா

தீனா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (107)

இவரை பின்தொடர்பவர்கள் (107)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Enoch Nechum

Enoch Nechum

இலங்கை

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே