அஹமது அலி - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  அஹமது அலி
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  02-Jun-1940
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jul-2012
பார்த்தவர்கள்:  7304
புள்ளி:  5379

என்னைப் பற்றி...

بسم الله الرحمن الرحيم
(ஏக இறைவனின் திருப்பெயரால் )
---------------------------------------------------------------
தொடங்குவது உன் பெயரால்
தொடர்வது உன் அருளால்!
-------------------------------------------------------------------



என் படைப்புகள்
அஹமது அலி செய்திகள்
அஹமது அலி - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2022 11:15 am

ஏழையின மென்று ஒன்று தோன்றிட
காரண மானப் பணத்தையே படைத்த
மானிட பதரை குன்றின் மீதேற்றி
கொடுரமாய் கொலையினை செய்யிணும் பாவமோ.

அழுவதும் தொழுவதும் இறையின் பாதம்
என்றே எண்ணி வைத்தவன் செய்தது
மாபெரும் இல்லமாம் அமைதியின் கூடமாம்
கோவெனும் அதிர்வதின் குவியலின் கோயிலே

நாளினை படைத்தது புவியுடன் பரிதியே
கோளில் வாழ்விடம் உடையது பசும்புவி
நிறைந்த உணவுகள் விளைய காரண
மாமழை பொழிவதும் பகலவன் கதிராலே

நிலத்துடன் மழையும் வானக் கதிரும்
பொதுவாய் கிடக்கு உயிர்கள் வளரவே
எதிலும் தொல்லை செய்தே வாழும்
மானிட பிறவியால் கெட்டது ஞாலமே.

பூவெனும் மனதுள் தேனாய் எண்ணம்
இருந்தால் நன்மை பொங்கி வருமே
மா

மேலும்

கவிதையைப் படித்து மின்னலென சுரீர் வார்த்தையால் அருமை கருத்திட்ட ஐயா கவி. அஹமது அலி அவர்களுக்கு நன்றிகள் பற்பல . 03-Oct-2022 11:43 pm
கவிதையைப் படித்து பாராட்டிக் கருத்திட்டு உற்சாகம் கொடுக்கும் ஐயா கவி . பழனி ராஜன் அவர்களுக்கு தலைவணங்கிய நன்றிகள் 03-Oct-2022 11:41 pm
மிக அழகு 03-Oct-2022 10:46 pm
தம்பி நன்நாடருக்கு வணக்கம் நல்லக் கவிதைநடையில் கருத்துப் பொதிந்த பாடல் பாராட்டுககள் 03-Oct-2022 12:01 pm
அஹமது அலி - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Oct-2022 6:31 pm

நிலவில் திளைக்கும் சகோரம் நீயோ
நிலவும் மகிழும் அமுத சாகரம்
அலைகடல் ஆழ்முத்தும் காதல்
..................புரியுமுன்
கலையெழில் செவ்விதழ் புன்னகை
.................முத்தினை

.











..

மேலும்

ஆம் ஆழ் கடல் சிப்பி நிலவொளியில் கருவுற்று முத்தீனும் அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய Nannadan 04-Oct-2022 8:55 am
மிக்க நன்றி கவிப்பிரிய அஹமது அலி 04-Oct-2022 8:46 am
ஆழிக்கடலும் முத்தும் பூரண நிலவால் எழுமே அமிழ்ந்து தகிப்பால் தன்காதல் விளக்கும் உலகம் சுழலும் வரையில். 03-Oct-2022 11:51 pm
தமிழழகு ஐயா.! 03-Oct-2022 10:44 pm
அஹமது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2013 7:36 am

நிலமெல்லாம் வழிந்தது ரத்தம்
நினைவெல்லாம் உயிர்களின் சத்தம்
கதையல்ல கற்பனையல்ல இது சத்தியம்
காந்தி பிறந்த மண்ணின் கருப்புச் சரித்திரம்
..........
படித்த போதும் கேட்ட போதும்
கண்ணீரில் உப்புக் காய்ச்சிய
திட்டமிட்ட படுகொலைகளை
திடமாய் எழுத முற்படுகிறேன்
........
மைகொண்டு எழுத மறுதலிக்கிறது
கண்ணீர் கொண்டு எழுதச் சொல்கிறது
கண்ணீர் கதறல்களை காட்சிகளை
மனசாட்சிகளை கொண்டு கேளுங்கள்
.......
எட்டுமாதக் கர்ப்பிணிப் பெண்
எமனாக நிற்கும் அரக்கர்களின் முன்
அஞ்சி ஓடுகிறாள் உயிருக்காய்
கெஞ்சிகிறாள் விட்டு விடும்படி
.....
இரக்கத்தை தொலைத்தவர்கள்
வயிற்றை வாளின் முனையால் கீறி
சிசுவை துண்டு துண்

மேலும்

வருகையும் வாசிப்பும் மகிழ்வு நன்றி 30-Oct-2013 9:47 am
வருகையும் வாசிப்பும் மகிழ்வு நன்றி ஐயா 30-Oct-2013 9:47 am
அருமை வாழ்த்துக்கள் தோழமையே ! 28-Oct-2013 4:32 pm
முகங்களை மறைத்தாலும் உண்மை முகம் மாறாது மறக்காது .உண்மை . 27-Oct-2013 6:16 pm
அஹமது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Jan-2022 11:05 pm

தண்டனைக் காலமிது
தண்டனைக்கான
கால நிர்ணயம் இன்னும்
கணக்கில் கொள்ளப்படவில்லை.!!!

கணக்கனை
அழைத்து வரப் போன
காவலன்
காலன் வரும் வரை
வரப் போவதில்லை..!!!

ஆம்..!
குற்றம் என்னவென்று
குருட்டுத் தனமாய் கேளாதீர்
அது கூட குற்றமாகும்..!!!

அப்படியென்றால்....
தண்டனை எதுவென்று கேட்பீர்..!!!

கேளும்.! கேளும்.!!

வாழ நினைத்தால்
வாழ்வே தண்டனையாய்...

சாக நினைத்தால்
சாவே தண்டனையாய்...

மறக்க நினைத்தால்
மறதியே தண்டனையாய்....

எல்லாமும்
தண்டனையாய் போக
அதற்கும் ஒரு தண்டனையாய்
இந்த வரிகள்.

மேலும்

அஹமது அலி - அஹமது அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jun-2020 12:41 pm

சுகந்திப் பூக்களை
முளரிப்பூ பறித்தல் என்பது
தென்றலுக்கு விசிறிடும்
இலைகளின் நேசம் போன்றது...
மென்மையை மென்மை கொண்டே
அழகை அழகு கொண்டே
கவர்தல் தானே பேரழகு.!

#அஹமது_அலி

மேலும்

நன்றி 10-Jun-2020 3:34 pm
அருமை ... 10-Jun-2020 1:13 pm
அஹமது அலி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jun-2020 12:41 pm

சுகந்திப் பூக்களை
முளரிப்பூ பறித்தல் என்பது
தென்றலுக்கு விசிறிடும்
இலைகளின் நேசம் போன்றது...
மென்மையை மென்மை கொண்டே
அழகை அழகு கொண்டே
கவர்தல் தானே பேரழகு.!

#அஹமது_அலி

மேலும்

நன்றி 10-Jun-2020 3:34 pm
அருமை ... 10-Jun-2020 1:13 pm
அஹமது அலி - பிரியாராம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Dec-2014 11:27 am

பாரதியின் செல்லம்மா போல்
பார்த்துக்கொள்ள துடிக்கிறேனே
பாசம்கொண்ட மாமா உன்னை
பார்த்திடத்தான் தவிக்கிறேனே........

வள்ளுவனின் வாசுகி போல்
வாழ்ந்திடதான் அழைக்கிறேனே - நீ
வாரதிசை பார்த்து தினம்
வாடிமனம் கொதிக்கிறேனே.......

மதுரைவீரன் பொம்மி போல
மஞ்சம் தொட நினைக்கிறேனே
மாலைநேர பூக்கள் கொய்து
மாலைசூட உருகுறேனே.........

கோவலனின் கண்ணகியாய்
கோடியாண்டு வாழ்ந்திடவே - உன்
கோட்டைவாசல் நாயகியாய்
கோரிக்கையை வைக்கிறேனே.......

அல்லிக்கொடி நீரைப் போல
அணைத்துக்கொள்ள ஏங்குறேனே
அன்பனவன் கரம்பிடிக்க
அணுதினமும் விழிக்கிறேனே....

கருவிழியும் கண்ணிமை போல்

மேலும்

கருவும், உருவும், உவமையும், மிக அழகு! 14-Feb-2018 10:11 pm
அஹமது அலி - அஹமது அலி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2013 7:49 am

ஆண்டவரெல்லாம்
மாண்டார்....
மாண்டவர் எங்கே
மீண்டார்?

தன்னை கடவுளென்றோரும்
தன்னுயிர் காப்பற்ற முடியாமல்
தரணி விட்டுப் போனார்..........

பிறப்பை உடையவர்
கடவுளென்றால்
பிறக்கும் முன்
யார் கடவுள்?

இறந்து மீள்பவர்
கடவுளென்றால்.....
மீளும் வரை
யார் கடவுள்?

கடவுளின் அவதாரம்
என்பவர்க்கெல்லாம்
அடிப்படை தேவைகள்
அத்தனையும் தேவை....

பிறர் உதவியில்
வாழ்பவன்
கடவுளா?

எத்தேவையுமின்றி
எல்லோருக்கும் உதவுபவன்
கடவுளா?

படைப்புகள் பலவும்
கடவுளென்றால்
படைத்தவனை
என்னவென்று அழைப்பது?

பெற்றோரும் உற்றோரும்
உள்ளவர் கடவுளென்றால்
சந்ததிகளும் கடவுள்களே!

மேலும்

மிக்க நன்றி தோழா 20-Nov-2013 8:10 am
மிக்க நன்றி தோழி 20-Nov-2013 8:10 am
மிக்க நன்றி தோழரே 20-Nov-2013 8:09 am
மிக்க நன்றி தோழி 20-Nov-2013 8:09 am
அஹமது அலி - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2016 9:18 am

பல அடுக்கு பாதுகாப்பு
நாட்டின் மூலையெல்லாம்...
கோலகாலமாய் என்
நாட்டின் சுதந்திர தினம்.!

கமண்டோ கண்காணிப்பில்
நட்டு வைத்த கம்பத்தில்...
கட்டவிழ்க்கபட்டது என்
நாட்டு தேசியகொடி.!

குண்டு துளைக்காத
முச்சுவருக்குள் நின்று...
பேசபட்டது என் நாட்டு
சுதந்திர உரை.!

வானத்தில் பறக்கிறார்
பார் காண என் பிரதமர்...
கடன் வெள்ளத்தில்
மிதக்கிறது என் பாரதநாடு.!

கார்ப்பரேட்டுகளுக்கு இங்கு
கார்ப்பெட் விரிப்பு....
சுமக்கிறேன் என் முதுகில்
வரிகளை.. வலிகளோடு..!

கோடிகடனாளி வெளிநாடு ஓட
என் சிறுகடன் விவசாயி...
உள்ளறையில் ஓடுகிறான்
சுருக்கு கயிற்றை தேட..!

மாதாவின் பெயர் கூவி
மனிதர்க

மேலும்

உணர்வுபூர்வமான வரிகள் 22-Mar-2019 9:05 pm
வாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் தோழமையே.! 16-Oct-2016 12:03 pm
உணர்வு மிகுந்த கருத்துக்கள். அழகான ஆழமான பதிவு 15-Oct-2016 6:03 pm
கருத்தை பதித்தமைக்கு நன்றிகள் தோழமையே.! 13-Oct-2016 9:30 am
அஹமது அலி - நா கூர் கவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Nov-2016 7:06 pm

இராப் பகலு பாராம
சேத்துல நா கால் வச்சேன்
நீங்க வருஷமெலாம்
சோத்துலதான் கை வைக்க...

பொழுதெல்லாம் அந்த
வயலுலதான் நா கெடந்தேன்
பட்டினியால் அழுவாம
தேசத்த நாங் காத்தேன்...

அயல்நாட்டு படிப்பெல்லாம்
நீங்க நல்லாதான் படிச்சிங்க
எங்க நிலப்பரப்ப பாக்காம
சேர்ந்து எல்லோரும் நடிச்சிங்க...

வெவசாயம் முதுகெலும்பு
நமக்குன்னு சொன்னீங்க
வெவரம் பத்தாம முதுகெலும்ப
திக்கொன்னு சுக்குநூறா ஒடச்சிங்க...

கிராமத்து சுத்த காத்தேயும்
நரகப் புகையால ஏனோதான் கெடுத்தீங்க
சிட்டென்ற இனத்தையே அழிக்கதான்
செல்போனு டவரிங்கு கொடுத்தீங்க...

தண்ணீரைதான் காசாக்க பாக்குறீங்க
எங்கண்ணீரையும் தூசாக்கி போகுறீங்க

மேலும்

அழகான வரி நண்பரே வாழ்த்துக்கள்...விவசாயம் தன் சாயத்தை இழந்து விலாசம் தெரியாமல் போய்விடுமோ.... 12-Apr-2017 6:40 pm
முத்திரை பதிக்கிறீர் . 27-Mar-2017 2:13 pm
கவிதை வயலில்-நீர் செய்த விவசாயம் விவசாய விசுவாசம் விவசாயமில்லையேல் விட்டு ஓடும் சுவாசம்! கவியே அபாரம்! 26-Feb-2017 1:33 am
அஹமது அலி - சீதளாதேவி வீரமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2016 5:45 pm

ரெட்ட மாடு ஓட்டி
ஏரொன்னுல பூட்டி
வயலுக்கு வகுடெடுத்தேன்!
வலிச்சா மன்னிச்சுடு தாயேன்னு
வரப்பு மேல நின்னு வரம் கேட்டேன்

ஒன்னா கிடக்கும் பிள்ளைகளா!
பிரிய நேரம் வந்துருச்சு
பின்னி கிடக்கும் நாத்துகள
பிரிச்சு பிரிச்சு பதிய வச்சேன்
இடையில ஏதும் கள வளந்தா
இரக்கமில்லாம அழிச்சேன்

நீரும் உரமும் நேரத்துக்கு தந்து
காலநேரம் பாக்காம
கண் தூக்கம் இல்லாம
கண்டதுதான் கோலம்
கொண்டதுதான் வேடமுன்னு
நாத்த வளக்க நான் எளச்சேனே!
எவனோ பசியார என்ன எழச்சேனே!

அறுவட வந்துருச்சு
நட்டு வச்ச நாத்தெல்லாம்
நட்டம் வராம வெளஞ்சிருச்சு

கதிர அறுத்து களத்துல சேத்துட்டேன்
வெல ஒன்ன சொல்லி
வெளஞ்சத வித்துட்ட

மேலும்

அருமையாக எழுதிருக்கீர்கள் தங்கள் திறமை மேலும் வளர வாழ்த்துக்கள் 02-Dec-2017 7:22 am
எங்கள் மன வயலை உழுதுவிட்டீர்கள்... அருமை... 25-Jul-2017 6:48 pm
நேர்த்தியான வரிகள் 10-Jul-2017 4:06 pm
நன்றி நட்பே 26-Feb-2017 6:31 am
அஹமது அலி - எண்ணம் (public)
01-Nov-2016 10:20 pm

எட்டிப் பார்க்க வந்த இடத்தில் 

தட்டிப் பார்க்கிறேன் பொத்தான்களை...
உறவுகள் எல்லோரும் நலமா?
நாட்கள் நகர்ந்து விட்டது
நானும் இடம் பெயர்ந்து விட்டேன்!

தளம் நுழைந்து பார்க்கிறேன்
முன்னாள் மாணவன் கல்லூரியை ஏங்கிப் பார்ப்பதை போல்....

மேலும்

போற்றுதற்குரிய படைப்பு மலரும் நினைவுகள் பாராட்டுக்கள் தொடரட்டும் உங்கள் இலக்கிய பயணம் தமிழா அன்னை ஆசிகள் 02-Nov-2016 7:36 am
மிக மிக நலம் தோழரே.... 01-Nov-2016 11:16 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (388)

பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்
அசுபா

அசுபா

திருச்சி
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (390)

இவரை பின்தொடர்பவர்கள் (393)

Nagaraj Ganesh

Nagaraj Ganesh

தமிழ்தேசம்
tamizhselvi

tamizhselvi

chennai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே