ஆக்னல் பிரடரிக் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஆக்னல் பிரடரிக்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  20-Jul-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Oct-2013
பார்த்தவர்கள்:  190
புள்ளி:  15

என் படைப்புகள்
ஆக்னல் பிரடரிக் செய்திகள்
ஆக்னல் பிரடரிக் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Mar-2015 12:30 am

கொட்டும் பனித்துளிகள் கொஞ்சம்
கொஞ்சமாய் இருளைக் கரைக்க முயல ,
மஞ்சள் வானில் மெல்லச் சூரியனைப் பெற்றெடுக்கும் மேகங்கள் !
சற்று முன் பிறந்த மழலைச் சூரியன் ,தாய் மடியில் மெல்லக்
கண்திறந்து,
ஆழிதனில் முகம் பார்த்து,
ஆனந்தமாய்த் தன் கரங்கள் நீட்டி கடல்தனை அள்ளத் துடிக்கும் !
கதிர்க் கரங்கள் ஆழியைத் தழுவ ,
உல்லாசமாய் அலைவீசி மழலையைக் கொஞ்சும் நீலக்கடல் !
பறவைகள் ஒன்றாய் கீதம் இசைக்க ,
மலர்கள் பல வாசம் தெளிக்க ,
இன்பமாய் விடியும் "இனிய விடியல்" .... !

மேலும்

அழகு ! நல்ல கற்பனை ! 22-Mar-2015 1:01 pm
அழகு 22-Mar-2015 12:51 am
ஆஹா எப்படி நண்பா வருடலை செய்தீர் மனம் தொட்ட கவி தொடருங்கள் வாழ்த்துக்கள் 22-Mar-2015 12:35 am
அருமையான கற்பனை, படத்திற்கு ஏற்றாற்போல் படைப்பு சிறப்பு 22-Mar-2015 12:32 am
ஆக்னல் பிரடரிக் - ஆக்னல் பிரடரிக் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-Mar-2015 1:21 am

இதழ்கள் விரிக்கும் சிவப்புக் கம்பளம் ,
கவலை கரைக்கும் மாய மந்திரம் !
புன்னகை ,
இதழ்கள் பாடும் ஒரு வரிக்கவிதை !
திரவியம் தேடும் மனிதன் காலப்போக்கில் தொலைத்துவிட்ட ஈடிலா பொக்கிஷம் !
எல்லாம் டிஜிட்டல் மயமான பின் , புன்னகை மட்டும் மிச்சமேன்,
இதோ டிஜிட்டல் வடிவில் புன்னகைக்க தொடங்கிவிட்டான் smiley -ஆக !
புன்னகை என்பதை புகைப்படங்களுக்குத் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம் ,
ரசனை மறந்து , இருக்கக் கட்டிய இதழ்களோடு
எந்திரம் போல் அலைய பழகிவிட்டோம் ,!
சிந்திக்க மறுக்கும் மனம் ,சிரிக்க மறுக்கும் குணம் ,
மலர மறுக்கும் இதழ்களால் ,
மருந்தாகிப் போன புன்னகை ,, !

மேலும்

நன்றி தோழரே ! 18-Mar-2015 9:04 am
புன்னகை என்பதை புகைப்படங்களுக்குத் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம் ,...~~. அருமை வரிகள் 18-Mar-2015 5:49 am
ஆக்னல் பிரடரிக் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2015 1:21 am

இதழ்கள் விரிக்கும் சிவப்புக் கம்பளம் ,
கவலை கரைக்கும் மாய மந்திரம் !
புன்னகை ,
இதழ்கள் பாடும் ஒரு வரிக்கவிதை !
திரவியம் தேடும் மனிதன் காலப்போக்கில் தொலைத்துவிட்ட ஈடிலா பொக்கிஷம் !
எல்லாம் டிஜிட்டல் மயமான பின் , புன்னகை மட்டும் மிச்சமேன்,
இதோ டிஜிட்டல் வடிவில் புன்னகைக்க தொடங்கிவிட்டான் smiley -ஆக !
புன்னகை என்பதை புகைப்படங்களுக்குத் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம் ,
ரசனை மறந்து , இருக்கக் கட்டிய இதழ்களோடு
எந்திரம் போல் அலைய பழகிவிட்டோம் ,!
சிந்திக்க மறுக்கும் மனம் ,சிரிக்க மறுக்கும் குணம் ,
மலர மறுக்கும் இதழ்களால் ,
மருந்தாகிப் போன புன்னகை ,, !

மேலும்

நன்றி தோழரே ! 18-Mar-2015 9:04 am
புன்னகை என்பதை புகைப்படங்களுக்குத் தான் என்று ஒதுக்கி வைத்துவிட்டோம் ,...~~. அருமை வரிகள் 18-Mar-2015 5:49 am
ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2014 7:32 am

கல்வி அதன் தேவை அறிந்த
மேன்மக்கள் பயன் அறியா - புழுவாம்
இன்ன வேண்டுமென கூற யியலா
அறிவு தேடுவதோ ஆங்கிலத்தை !

யாது மாகி இருப்பவன் அறிந்த
ஆங்கில மற்று வேறொன்றும் - அறியா
பேதை யிவன் இம்மோகம் விடுத்து
அறிய வேண்டும் தாய்மொழி !

மேலும்

சில மொழியால்! பல மொழிகள் அழிந்து போயின வரலாற்றிலிருந்து அங்கே இலக்கண இலக்கிய அச்சுக்களின் குறைவினால் !! நம் தாய் மொழி இக்குறைவை எட்டவில்லை என்றே கருதுகிறேன்!!! 18-Jan-2014 12:34 pm
தாய் மொழி பேசி வீழ்ந்த நாடும் இல்லை ! தாய் மொழி பேசாமல் வாழ்ந்த நாடும் இல்லை ! 18-Jan-2014 12:24 pm
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழி ... 18-Jan-2014 12:13 pm
@பாவூர்பாண்டி:) சிறப்பு தோழா. 18-Jan-2014 12:01 pm
செல்லம்மா பாரதி அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Jan-2014 12:02 pm

தை மாசம் வந்துருச்சு
தை பொங்கலும் தான் வந்துருச்சு!
இந்த கரிசக்காட்டு உழவன் வாழ்கையில
மகிழ்ச்சி மட்டும் எட்டிப்பாக்கவில்ல!

கந்து வட்டிக் கடன் வாங்கி
நிலத்தைத் தான் உழுது வச்சான்!
சந்தையில விதை நெல் வாங்கி
உழுத நிலத்துல விதைச்சு வச்சான்!

இராப்பகலா வியர்வை சிந்தி
நாலு மூட்டை விளையவச்சான்!
அவன் உயிரா விளஞ்சதுக்கு
எவனோ பெரு வணிகன் விலையவச்சான்!

ஊருக்கே படி அளந்தான்
விளஞ்சதையெல்லாம் அளந்தான்!
ஆனா மூனுல இரு வேள உணவாக
இவனுக்கு ஈரத்துணி ஒரு முழம் தான்!

தை மாசம் வந்துருச்சு
தை பொங்கலும் தான் வந்துருச்சு!
இந்த கரிசக்காட்டு உழவன் வாழ்கையில
மகிழ்ச்சி மட்டும் எட்டிப்பா

மேலும்

அருமை தோழமையே! 20-Jan-2014 2:34 pm
@! செல்லம்மா பாரதி:) அருமை படைப்பு தோழா..!!! 18-Jan-2014 12:24 pm
தங்கள் கருத்துக்கு எனது மரியாதை கலந்த நன்றிகள் சரா!!!:-) 17-Jan-2014 7:12 am
மிக அருமையான படைப்பு தங்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துகள் 17-Jan-2014 7:09 am
பழனி குமார் அளித்த படைப்பில் (public) sahanadhas மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2013 3:02 pm

மழலையின் வாட்டம்
மனதை வாட்டுகிறது !
பிஞ்சு விழிகளில் வழிகிறது
பசிக் கொடுமையின் வருத்தம் !

வரிசையில் நிற்கிறது
வாரிசும் படைத்தவரும் !
உயிராய் பிறந்தவர் உலகினில்
உணவும் வேண்டாமா உய்த்திட !

கொடுமையிலும் கொடுமை
வறுமையில் வாழ்வது அன்றோ !
உண்டிட வழியில்லை எனில்
உயிராய் பிறந்தும் பயன் என்ன !

மனிதரில் ஏன்தான் பிரிவினை
ஏழை பணக்காரன் எனும் இருகூறு !
பிறந்திடும் முறையும் ஒன்றுதானே
பிறந்தபின் ஏன்தான் இந்த வேறுபாடு !

பசிப்பிணியைப் போக்கிட
மருந்தொன்றும் இல்லையே !
படித்தவர் கோடிகள் ஆனாலும்
மருத்துவர் ஒருவரும் இல்லையே !

வேண்டுகிறேன் உங்களிடம்
உதவிடுங்கள் முடிந்தவரை !

மேலும்

மிக்க நன்றி சபிஉல்லா 18-Mar-2015 9:08 am
அருமையான கருத்து சார் 18-Mar-2015 7:41 am
உங்களின் மனம் போலவே அனைத்து உள்ளங்களும் இருக்க வேண்டும் தோழி. மிக்க நன்றி மகேஸ்வரி 10-Jan-2014 8:47 am
அப்படியே ஆகட்டும் நண்பரே, தங்களின் ஆதங்கம் வீண் போகாது. நல்ல மனங்கள் பல உண்டு பாரினிலே... 10-Jan-2014 8:12 am
ஆக்னல் பிரடரிக் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2013 12:22 am

. .வலிகளைச் சுமந்து சுமந்து கல்லாகிப் போன என் இதயம். !
மரத்துப்போன என் மனம் ! முள்ளாகிப்போன என் பார்வை !
எப்பொழுதும் சூடாக விழும் என் வார்த்தைகள் !
மறந்தும் எனை மதிக்காத என் மதி !
இவையனைத்தும் சட்டென மாறிப்போனது !
காரணம் புரியாமல் தேடிக்கொண்டிருந்தேன் ! கிடைத்துவிட்டது ..காரணம் “நீ” !
கல்லாகிப்போன என் இதயத்தின் மீது சலசலவென நதியாகி நீயோட
கல்லும் கரைந்து இலகிப்போனது , மரத்த என் மனமும் மலர்ந்துபோனது !
முள்ளாகிப்போன என் பார்வையின் மீது பூவாகவே நீயும் பூத்துவிட ,எனை மதிக்காத என் மதியும் நொடிப்பொழுதில் எனை உபசரித்தது, என் புன்னகை கேட்டு நச்சரித்தது !
எப்பொழுதும் சூடாக விழும் என் வார்த்தைகள

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (73)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

Samraj T

Bangalore

இவர் பின்தொடர்பவர்கள் (73)

user photo

சுந்தரமூர்த்தி

ஸ்ரீவில்லிபுத்தூர்
கமலக்கண்ணன்

கமலக்கண்ணன்

திருச்செங்கோடு
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (73)

Arulrathan

Arulrathan

மட்டக்களப்பு
செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
மேலே