ஆண்டன் பெனி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆண்டன் பெனி
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  26-Jul-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2012
பார்த்தவர்கள்:  2202
புள்ளி:  700

என்னைப் பற்றி...

நான் திருச்சியில் இருக்கிறேன் தொடர்புக்கு... antonbeni123@gmail .com
99430 88022

என் படைப்புகள்
ஆண்டன் பெனி செய்திகள்
ஆண்டன் பெனி - எண்ணம் (public)
18-Aug-2018 8:23 am

உன் மேல் பயணிக்கும் இரயில் வண்டி
***

இன்னும் சற்று நேரத்தில் 
இரயில் வண்டி புறப்பட்டுவிடும் அறிவிப்பில் 
சன்னல் கம்பிகள் நனையத் தொடங்கின 

உருவம் மறைந்த பின்
நீ இரயில் வண்டிக்கும்
நான் இரயில் நிலையத்திற்குமாகக்
கைகளை அசைக்கின்றோம்

அவையும் மறைந்த பின் கையிலிட்ட 
முத்தத்தின் பற்தடங்கள் இருக்கின்றன
இன்னும் சற்று நேரத்திற்கு

யாவற்றையும் இழந்த பின் 
கைப்பிடி முத்தம் எடுத்து 
உன்னைக் கொலு வைக்க 
இரயில் பெட்டிகளின் 
உள் அறை இளஞ்சிவப்பாகிறது

நிறம் உணர்ந்த சூரியனும் 
இளஞ்சிவப்பாகி 
இரயில் நிலையத்திற்கு நேராக
விழத் தொடங்கியது

உன்மேல் பயணிக்கும் இரயில் வண்டியில் 
இரவு முழுவதும்
இளஞ்சிவப்பாகக் கிடக்கிறேன்.

...ஆண்டன் பெனி

மேலும்

கவித்தாசபாபதி அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 13 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2016 12:06 am

“மௌனம் கசியும் பாறைகள்”
***************************************

அதிகாலைப் பனிமேடை
குருவிகளின் கூட்டிசையில்
கௌசல்யா சுப்ரபாதம்

*

பச்சைமலைக் காடு
காட்டையே கட்டியிழுக்கிறது
வனவாசியின் கூப்பிடுகுரல்

*

கள்மரத்துப் பானைகளில்
சொட்டுசொட்டாய் வடிகிறது
தோட்டக்காரனின் தாகம்

*

வலையில் சிக்காத கடல்மீன்கள்
சிக்கிவிடுகின்றன
அவர்கள் பாட்டில்

*

யுகங்கள் கடந்துபோய்விடவில்லை
நின்றயிடத்திலிருந்தே வாழ்த்தும்
அருவிகள்

*

மஞ்சள் குருதியில்
மினுங்கும் மேனி
பொன்அந்தி மாலை

*

ஓடைகள் நதிகளாவதை
மலைத்து ரசிக்கின்றன
கசியும் பாறைகள்

*

அமாவாசை

மேலும்

அமாவாசை இரவு எங்கு தவிக்கிறதோ பிள்ளை(யின்) நிலா .....அழகிய ஹைக்கூ வரிகளுடன்...இன்னும் படிக்கத் தூண்டும் தவிப்புடன்...அருமை 29-Mar-2016 11:14 am
அனைத்தும் மிக அருமை..! அழகு..! சிறப்பு..! 20-Mar-2016 7:12 pm
இனிமையான ஹைக்கூ வாழ்த்துக்கள் 06-Mar-2016 4:21 pm
நல்ல தேடல்கள்... இயற்கையோடு கொஞ்சம் உலவமுடிகிறது... குருவிகள் கூட்டிசையில் புதியசுரங்கள்.. என இருக்கலாமோ....சுப்ரபாதம் வேண்டாம் எனத்தோன்றுகிறது.. வனவாசியின் குரல்..அழகு சொட்டுசொட்டாய் தோட்டக்காரனின் தாகம் மனதுள்... கடல் மீன்கள், அருவி, கசியும் பாறைகள், நீந்தும் நதி, அழகு.. தவிக்கும் நிலா ...கங்கையின் தவிப்பு...நல்ல மீட்டல்... வாழ்த்துக்கள் நண்பரே.. 06-Mar-2016 1:09 pm
ஆண்டன் பெனி - முரளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
19-Feb-2016 10:19 am

俳句 - ஹைக்கூ  குறுங் கவிதைகள் விழா 

"நடமாடும் நதிகள்"

இன்று கவிதைப் பூங்காவில்  ஹைக்கு மலர் அலங்கார   உபயம்: 
திருமதி சோ.சாந்தி.    
கவிதை,  ரசிக்க, நேசிக்க   கீழே சொடுக்குக:

++++++++++++

நாளை நம்மை  ஹைக்கூ பூந்தோட்டத்திற்கு அழைத்துச் செல்பவர்: 

 திருமதி. உமை      

வாருங்கள் ஹைக்கூ சுவை அருந்த...

இத்தொடரில் பங்கேற்பவர்கள் பட்டியல்  ( முகப்புப் படம்*** /இதுவரை link/  இனிவருபவர்கள் / தேதி ) 
அன்புடன்
முரளி
(தொடர் ஒருங்கிணைப்பில்  உதவி ) 
பி.கு.:
வினாக்கள், விவரங்கள், விளக்கங்கள்

* முகப்புப் படம் தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் உடன் இந்த எண்ணத்தில் கருத்தில் தெரிவிக்கவும்
** வரிசை எண் 25, 34, 46 பெயர்கள் மாற்றம் கவனிக்கவும். (மாற்றம் செய்பவர்கள்:  25.பிரியா ஐசு , 34.நாராயணசாமி ராமசந்திரன், 46.நித்யஸ்ரீ  (புதிதாக இணைந்த மூவர்,  திரு ஜின்னாவிற்கு தனி விடுகையில், உறுதி செய்ய  வேண்டுகிறோம் )

மேலும்

நிலாகண்ணன் அளித்த படைப்பில் (public) Kalaracikan Kanna மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Feb-2016 5:53 am

ஒவ்வொரு பெண்ணும்
புரிந்துவைத்திருக்கிறாள்
புருவமத்தியில் ஒரு கைக்கூவை.

நல்ல கைக்கூ கிடைப்பது ஒரு வரம்.
என் தவம் இன்னும் முடியவில்லை

இதோ நதிக்கரையில்
நானும் என் கூழாங்கற்களும்..
________________________ 💐💐💐


தவிப்புக்குரலெழுப்பியபடி
தனித்துப்பறந்தது
நாரையொன்று நிலவொளியில்
_________________________

வழியனுப்பும் போதெல்லாம்
வலி தந்து நகர்கிறது
ஒரு பிரியமான சன்னல்.
_______________________

தும்பியின்
சிறகில் கண்டேன்
ஒரு ஜோடி வானம்.
_______________________

கைகட்டியிருந்தால்
சிலுவைகள்
இல்லை.
_____________________

நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு
இன்று பந்தியில் அச

மேலும்

அனைத்தும் மிகவும் அருமை. 29-Mar-2016 3:08 pm
ஹைக்கூ மிகவும் ரசித்தேன். வாழ்த்துக்கள் ! 29-Mar-2016 3:06 pm
எல்லா வரிகளும் ரசிக்க முடிகிறது. நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு இன்று பந்தியில் அசைபோடுகிறது பலநூறு வாய்களால்.....வெகு அருமை 29-Mar-2016 11:00 am
மொழியை காற்றில் வரைகிறது ஊமையின் விரல்கள்- அழகு நேற்றிரவு கட்டிக்கிடந்த ஆடு இன்று பந்தியில் அசைபோடுகிறது பலநூறு வாய்களால்- சிறப்பு பலூன் விற்பவன் குறட்டை விடுகிறான் கலர் கலராய்- அருமை அனைத்தும் மிக அருமை... வாழ்த்துக்கள்..! 20-Mar-2016 6:08 pm
உமை அளித்த படைப்பில் (public) jayarajarethinam மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Feb-2016 7:27 am

தனக்கெனத் தேர்ந்தெடுத்த பாதையில்
தனித்துவமான வாழ்வியல் தத்துவங்கள் கூறி
எழுத்துத் துளியின் இறுதிச் சொட்டு மை
இருக்கும்வரை தடங்கலின்றிப் பயணிக்கும்
இந்த நடமாடும் நதியின் முதுகில்
சில மிதவைகளாயும் ...
மடியில் சில கூழாங் கற்களாயும்..
அதன் போக்கை நிர்ணயிக்கும் பாதையில்..
அவ்வப் போது தோன்றிய எண்ணங்களை
ஹைக்கூ துளிகளாய் நகர விடுகிறேன்..
இவற்றில் கரையில் ஒதுங்குபவை சில..
கடலுடன் சங்கமிக்கும்
கடை நாழி வரை
நதி வழி தொடர்ந்து வருபவை சில
எனும் நம்பிக்கையுடன்....


****************************************
கல்லறைச் சிறை
கைதியாய் உடல்
ஆன்ம விடுதலை......................

மேலும்

அருமையான கருத்துக்களின் கலவை 12-May-2016 7:26 pm
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே.. 01-Apr-2016 7:57 pm
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே.. 01-Apr-2016 7:56 pm
தங்கள் வருகைக்கும் மேலான கருத்துப் பகிர்விற்கும் மிக்க நன்றி நட்பே.. 01-Apr-2016 7:56 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) கவிஜி மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2016 1:58 am

நடமாடும் நதிகள் - 16  
----------------------------------------  

மொட்டை மாடியில்
ஓய்வெடுக்கிறது
நிலா.

------------------------------------------------------------

வாழ வேண்டும்   
சாவைத் தேடுகிறான்   
சங்கூதுபவன்.

------------------------------------------------------------

சாலையோர நடை   
தலை உரசும் பறவை   
விழிக்கிறது மூடநம்பிக்கை.   

------------------------------------------------------------

ஓரமாய் ஒதுங்கும் வாகனம்   
முதுமை இளமையாய்   
மண் குதிரையில் சிறுவன்.
   
------------------------------------------------------------

நடமாடும் நதி   
மூழ்கியெழும் 

மேலும்

இனிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. 28-May-2016 8:06 pm
இனிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. 28-May-2016 8:06 pm
இனிய கருத்திற்கு மிக்க நன்றி அக்கா 28-May-2016 8:05 pm
இனிய கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே. 28-May-2016 8:04 pm
ஆண்டன் பெனி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2016 3:05 pm

தினமும் காதலோடே
வீதியில் இறங்குகிறேன்.
சற்று முன் கடந்த இரவிலும்
காதலுக்குள் அணுவணுவாக
நுழைய முற்பட்டபோது
தனிமையான நுழைவை
இனியும் சகிக்கமுடியாது என்று
காதலால் எச்சரித்துத் திருப்பப்பட்டேன்.
நண்பர்கள் எனக்கென்று தந்த
காதல் பயிலரங்கங்களிலும்
எனக்கான காதல் பற்றி எதுவும்
பேசவேயில்லை.
இரவல் கொடுத்த என் கவிதைகளில்
என் காதலின் பெயர்சேர்க்க
விட்டிருந்த இடங்களில்
வேறோர் பெயர் சேர்த்து
முன்மெழியப்பட்ட பின்
அதுவும் எனக்கில்லை என்றானது.
நினைவிலும்
நெஞ்சிலும்
நேசத்திலும்
சுவாசத்திலும்
எவரும் கொண்டாடும்
ஒரு காதலையே
நான் வைத்திருக்கிறேன்
எப்போது எதிர்ப்படுவாய் நீ?

…...ஆண்டன் ப

மேலும்

அருமை அண்ணா 13-Jun-2016 3:05 pm
ஆண்டன் பெனி - ஆண்டன் பெனி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2016 4:47 pm

எதிர் வீட்டு மாரியண்ணனின் ஆட்டை
அவர் மடியிலும், தோள்களிலுமே பார்த்திருக்கிறேன்,
ஊட்டி ஊட்டி அவர் வளர்த்தாலும்
எக்கி நின்று மேயும் அதன் சுபாவத்தில்
என் வீட்டுச் சந்தடி சோதித்து
வராந்தா செடிகளில் வந்து வாய்வைக்கும்,
அன்று என் அப்பாவின் கண்களுக்கு, ஆடும்
கையின் மரக்கட்டைக்கு, ஆட்டின் காலும்
வசமாக மாட்டிக்கொண்டதால்
பலமான காயமாகிவிட்டது
முந்தைய பிராது நிறைய இருந்ததால்,
மாரியண்ணன் ஆட்டைத்தான் கடிந்துகொண்டார்.
முன்தொகை கொடுத்து விலை பேசிப்போன
கறிக்கடை பாய் வந்த போது
கால்காயத்தைக் காரணம் காட்டி
முன்தொகையைக் கொடுத்து
வேறொரு நாள் வரச் சொல்லித் திருப்பிவிட்டார்
ஆட்டின் க

மேலும்

அருமை அருமை அண்ணா 13-Jun-2016 3:07 pm
கருணாநிதி அளித்த படைப்பை (public) ஜெய ராஜரெத்தினம் மற்றும் 8 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
10-Feb-2016 12:21 am

முன்னுரை:

தனித்தனியாய் நடமாடும்

ஹைக்கூகளை இணைத்தால்

பிறக்கும் ஒரு கதை!

..

பயனின்றி பாயும்

நதிகளை இணைத்தல்

நாட்டின் வளத்திற்கு விதை !

..

நதிகளின் கரைகளில் சற்றே உலவிட உங்களை அன்புடன் அழைத்திடும்

- கருணா

*******************

நடமாடும் நதிகள்!

*******************

கவிகின்றது இருள் !

கூடு திரும்பும் பறவைகள் -

மரத்தில் பாம்பு !
..

கள்ளுண்ட வண்டு!

காய்ந்த மாடு - நொறுங்குகின்றன

கண்ணாடி வளையல்கள் !

..

ஆதாமின் குற்றத்திற்கு

நாட்டாமை தீர்ப்பு - கடன்

வாங்கி கல்யாணம்!

..
வறண்ட பூமியில்

விதியின் யுத்தம் - கண்ணீரில்

மேலும்

அனைத்தும் அற்புதமான வரிகள். 29-Mar-2016 10:27 am
சிந்திக்க வைக்கும் வரிகள் ! 22-Mar-2016 2:08 pm
அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் ஐயா...! 20-Mar-2016 11:23 am
மிக்க நன்றி நண்பரே 16-Mar-2016 8:45 pm
ஆண்டன் பெனி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 4:47 pm

எதிர் வீட்டு மாரியண்ணனின் ஆட்டை
அவர் மடியிலும், தோள்களிலுமே பார்த்திருக்கிறேன்,
ஊட்டி ஊட்டி அவர் வளர்த்தாலும்
எக்கி நின்று மேயும் அதன் சுபாவத்தில்
என் வீட்டுச் சந்தடி சோதித்து
வராந்தா செடிகளில் வந்து வாய்வைக்கும்,
அன்று என் அப்பாவின் கண்களுக்கு, ஆடும்
கையின் மரக்கட்டைக்கு, ஆட்டின் காலும்
வசமாக மாட்டிக்கொண்டதால்
பலமான காயமாகிவிட்டது
முந்தைய பிராது நிறைய இருந்ததால்,
மாரியண்ணன் ஆட்டைத்தான் கடிந்துகொண்டார்.
முன்தொகை கொடுத்து விலை பேசிப்போன
கறிக்கடை பாய் வந்த போது
கால்காயத்தைக் காரணம் காட்டி
முன்தொகையைக் கொடுத்து
வேறொரு நாள் வரச் சொல்லித் திருப்பிவிட்டார்
ஆட்டின் க

மேலும்

அருமை அருமை அண்ணா 13-Jun-2016 3:07 pm
ஆண்டன் பெனி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2016 12:28 am

நடமாடும் நதிகள்.....பகுதி 2
>>>>>>>>>

முன்னுரை:
"நடமாடும் நதியொன்றை
கைகளில் அள்ளினேன்
விரலுக்கொன்றாய் நதிகள்"

.......அப்படி அள்ளியதில் கிடைத்த,
என் பத்து விரல்களின் வழியே பாயும் நதிகளைத்தான் காட்சிப் பிழைகள் (இன்றி/உடன்)

திசைக்கொன்றாய் கீழே வெவ்வேறு பெயர்களில் உலவ விட்டிருக்கிறேன்....
வாருங்கள் நதியாடுவோம்.....

1.கோனாகி
~~~~~~~~~~
இன்னுமா கண்டறியவில்லை
மந்தையில் தொலைந்த என்னை
எக் கடவுளும்.
*********

2. கருவாகி
~~~~~~~~~~
அப்பா அம்மாவுக்கான எழுத்தில்
வைக்க முடியவில்லை
ஒரேயொரு முற்றுப்புள்ளி....
******

3.ஊனாகி
~~~~~~~~~~
நூறு முத்தங்கள் தரு

மேலும்

வாழ்ந்த அதிக நாட்களுக்கு கூடுதலாக வேகிறது முத்திய ஆடு......என்ன சொல்ல? இயல்பாய் இத்தனை எளிமையாய்...அருமையான ஹைக்கூ வரிகள். 28-Mar-2016 11:24 pm
அனைத்து வரிகளும் அருமை. குறிப்பாக... இப்போதெல்லாம் கருத்தில் முரண்படுகிறான் நண்பன் என்னைச் சந்தேகிக்கிறேன் நான். 22-Mar-2016 2:03 pm
அனைத்தும் அருமை...! மரம் நடுதல் தவிர்ப்போர் மரம் வெட்டுதல் பழகலாமே சீமைக்கருவேல். - மிக அருமை வேரினை கருகவும், அழுகவும் வைக்கிறது வேளாண்மைக்குப் பெய்யாத மழை. - மிக சிறப்பு 20-Mar-2016 11:14 am
மொத்தமும் சிறப்பு. இருந்தாலும் வானாகி, மண்ணாகி இரண்டும் எனக்குள் ஆழப்பதிந்து நிற்கிறது. ஹைக்கூ தந்த தங்களுக்கு நன்றி. 27-Feb-2016 5:18 pm
ஜி ராஜன் அளித்த எண்ணத்தை (public) உதயகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-Feb-2016 7:50 pm

                                                                           படித்ததில் பிடித்தது 

 நண்பர் ஜின்னாவின்முயற்சியில் ஒரு ஹைக்கூ தொடர் நமது தளத்தில் உலா வருவது குறித்து அனைத்து எழுத்துநண்பர்களும் ஆவலாக உள்ளார்கள். வலைத் தளத்தில் நான் வாசித்த எழுத்தாளர் அமரர் சுஜாதா அவர்களின் ஹைக்கூ பற்றிய சில எண்ணங்களை கீழே கொடுக்கிறேன்
.************************************ **************************************************** ********************************************ஒரு ஹைக்கூ எழுதும்போது, "எனக்கு ஒருஅனுபவம் ஏற்பட்டது, அதை உன்னுடன் பகிர்த்துகொள்ள விரும்புகிறேன். அந்த அனுபவத்தை, என்னில் ஏற்படுத்தியசம்பவத்தை உனக்கு சொல்கிறேன். அதே மாதிரி அனுபவம் அல்லது உணர்ச்சி உனக்குஏற்படுகிறதா பார்" என்று சொல்கிறோம்.

அனுபவம் அல்லது உணர்ச்சி கடத்தல் ஹைக்கூ..ஒரு சில வார்த்தைகள்மூலம்,

 
நள்ளிரவில் 
தூரத்தில் ஒரு கதவு
இழுத்து சார்த்தப்பட்டது. 

உடனே பார்க்கும்போது இந்த மூன்று வரிகள் ஒரு நிகழ்ச்சியைவிவரிக்கும் வெறும் வரிகள்தாம். ஆனால் சற்றே சிந்திக்கையில் இதன் பரிமாணங்கள்விரிவதை கவனிக்க முடியும். நள்ளிரவு இந்த வரிகளை எழுதியவன் விழித்திருக்கவேண்டும். அவன் தனிமை வெளிப்படுகிறது. அவனுக்கு ஏன் தூக்கம் வரவில்லை? கவலையா? தனிமையா? உடல் நலமில்லையா? எங்கே இவன்விழித்திருக்கிறான்? நகரத்திலா, கிராமத்திலா? நகரத்தில் இருக்க முடியாது,அத்தனை நிசப்தம் நகரத்தில் எது? தூரத்தில் கதவுசாத்தப்படும் சப்தம் கேட்க முடிகின்ற நிசப்தம்,அந்த சப்தத்தின் அர்த்தம் என்ன? அந்த வேலைக்குவீட்டுக்கு வந்தது யார்? ஒரு தகப்பனா, ஒரு மனைவியா, ஒரு மகனா, வயசுக்கு வந்த பெண்ணை?அல்லது யாராவது கோபத்தில் வீட்டை விட்டு வெளியேசெல்கிறார்களா?

மூன்றே மூன்று வரிகள். அவை ஏற்படுத்தும் சலனங்கள் எத்தனைபாருங்கள். உங்கள் சிந்தனை என்னும் ஜலப்பரப்பில்  எறியப்படும் சிறியகல் ஹைக்கூ. 
*********************************** ********************************************* *******************
ஹைக்கூ கவிதை எழுதுபவருக்கும் வாசிப்பவருக்குமிடையில் ஒரு எண்ணப்பரிமாற்றத்துக்கு வழி வகுக்கும். வரப் போகும் ஹைக்கூ தொடரில் எழுதப் போகும் நண்பர்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

# ஜி ராஜன் 

மேலும்

நன்றி உதயா..நமக்குள் ஹைக்கூ பற்றிய எண்ணப் பரிமாற்றங்கள் ஏற்பட நான் பதித்த இந்த எண்ணம் ஏதுவாக இருந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி. தொடரில் நீங்களும் பங்கெடுப்பீர்கள் அல்லவா.. 04-Feb-2016 9:21 pm
" ஒரு ஹைக்கூ வை எப்படி வாசிக்க வேண்டும் என்பது கூட , ஹைக்கு எழுதுபவர்களுக்கு தெரியவில்லை " என்ற தோழர் ஜின்னா தனது எண்ணப் பகுதியில் பத்திருந்தார் என்பது தான் உண்மை ... தமிழியில் எவ்வாறு தமிழ் சங்க வைத்து வளர்க்கப்பட்டதோ அது போல ஜப்பானிலும் ஹைக்கூ சங்கம் வைத்து வளர்க்கப்பட்டுள்ளது என்பது உண்மை . கிட்ட தட்ட ஒவ்வொரு சில கால வருடத்திற்கு , ஒவ்வொரு விதிமுறைகள் கையாளப்பட்டுள்ளது என்பதும் உண்மை . கையாளப்படும் விதிமுறைகள் வாசகர்களை கவராததால் , 5 முறைகள் ஹைக்கூ விற்கு விதி முறைகள் மாற்றப்பட்டுள்ளது .. 6 வது முறையாக மாற்றப்பட்டும் இதுவை பின்பற்று விதிமுறைதான் 5,7,5 ஆகா மொத்தம் 17 சீர்கள் வருதாகும் . ஆனால் இந்த விதிமுறை தமிழ்நாடு உட்பட இந்தியாவில் எங்கும் பயன் படுத்த வில்லை என்பது உண்மை .. இதை தவிர்த்து ஹைக்கூ எப்படி எழுத வேண்டும் என்பதை தோழர் ஜின்னாவின் எண்ணம் தெளிவாக சொல்கிறது ... ஹைக்கூ என்பது குளத்தில் விட்டெறியப்படும் கல்... அவ்வளவு தான் ... மேலும் ஹைகுவியை எழும் மற்றும் பார்க்கும் கோணம் .... மனைவி துணிகளைச் சலவை செய்துகொண்டிருந்தாள். என்னிடம் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை துணி துவைக்கும் இடத்திற்குச் சென்று சோப்புக் குமிழிகளால் ஆன நுரைகளை எடுத்து விளையாடிக் கொண்டிருந்தான். நான் மனைவி துணி துவைப்பதை ரசிப்பதை விட்டுவிட்டு குழந்தையின் விளையாட்டை ரசிக்கத் துவங்கினேன். மனைவி குழந்தைக்கு சோப்பினால் உண்டாக்கப்பட்ட பெரிய நுரைக் குமிழிகளை உண்டாக்கிக் கொடுத்துக் கொண்டிருக்க குழந்தை அதை வைத்து விளையாடியும் குமிழி உடையும்போது அழுது புதியதாக வேறொரு குமிழியை வாங்கிக் கொண்டு விளையாடுவதாகவும் இருந்தான். அவனே குமிழியை உண்டாக்கவும் கற்றுக் கொண்டான். ஒரு ஹைக்கூ தோன்றியது: உண்டாக்கி உடைத்து அழுது மகிழ்ச்சியடையும் சலவைக்குமிழியுடன் குழந்தை (1) குழந்தை விளையாடும் குமிழிகளை உற்று நோக்கும்போது அக்குமிழியில் உலகமே தெரியத்தொடங்கியதாக உணர்ந்தேன். சிறு புல்லின் மேல் படியும் பனித்துளியில் எவ்வாறு நீண்ட பனை மரம்/ தென்னை மரம் தெரிகிறதோ அதுபோலவே சோப்பு நுரைக் குமிழியில் மேகம் முதற்கொண்டு பலதும் தெரியத்துவங்குவதைக் காண முடிந்தது. குழந்தை குமிழியை உடைக்கிறான். குமிழி உலகமாகக் காட்சியளிக்கிறது. இப்படி ஒரு ஹைக்கூ தோன்றியது: உலகை உடைத்து விளையாடும் குழந்தை சலவைக் குமிழி (2) உலகம் ஏதோ ஒன்றின் காரணமாகத் தோன்றி வளர்ந்திருக்கக்கூடும் சோப்புக் குமிழி வளர்வதுபோல. தோன்றிய உலகம் அழியவும் கூடும் என்று சிந்தை விரிய ஒரு ஹைக்கூ: வளர்ந்த உலகம் உடைந்துபோகும் சலவைக்குமிழியாய் (3) சலவைக் குமிழியை உண்டாக்கியதால் உடைந்தே தீரும். அதன் அழிவுக்கு குழந்தைக் காரணமாக இருக்கிறது. உலக அழிவோடு அதை ஒப்பிட ஒரு ஹைக்கூ: உலகம் அழியும் உண்டாக்கியதால் அணுகுண்டுகள், அணு உலைகள் (4) குழந்தை ஆசையாசையாய் குமிழியை உண்டாக்குகிறது. அதை நினைத்து பெரிய கனவு காண்கிறது. கனவு நிஜமாகாமல் குமிழி உடைகிறது. இதை வாழ்க்கையோடு ஒப்பிட ஒரு ஹைக்கூ: சேர்த்த ஆசைகள் சிதறுதேங்காயாகிவிட்டது மரணம் (5) இதில், நம் வாழ்க்கையில் எவ்வளவோ ஆசைகளைச் சுமந்து இப்படியெல்லா மோ வாழ வேண்டும் என நினைக்கிறோம். ஆனால் அவ்வாறு வாழ முடிவதில்லை. மரணம் என்பது சாவை மட்டுமே குறிக்காது. அது நிறைவேறாத ஆசைகளையும் குறிக்கும். மரணம் என்பது மேற்கண்ட ஹைக்கூவில் குறியீடு. வாசகன் நினைக்கும் பல பொருளையும் அது குறிக்கும். குழந்தை உண்டாக்கும் குமிழியைப் பார்க்கிறேன். உலகத்தோற்றம் நினைவுக்கு வருகிறது. பைபிள் கருத்தையும் இணைத்துக்கொள்ள ஒரு ஹைக்கூ இப்படி பிறக்கிறது: மண்ணினால் உருவம் மூச்சடைத்ததால் மரணம் குமிழி உண்டாகி உடையும் (6) ஹைக்கூ .... பறந்து விரிந்த ஆழமான அழுத்தமான கருத்தை 3 வரிகளில் சொல்வதாகும் ..... 04-Feb-2016 9:07 pm
இந்த காலத்தில் , பல விஷயங்களைப் போலவே , " நமக்கு நாமே " சில விதிகளை வகுக்க வேண்டியுள்ளது . சிலவற்றில் அறிஞர்கள் கருத்தே மாறுபடுகிறது . சில நேரங்களில் அறிஞர்கள் அங்கீகரிப்பதை மக்களில் ஒரு பகுதியினர் ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர். உதாரணத்திற்கு , தமிழர் புத்தாண்டு என்பது தை மாத முதல் நாள் , பொங்கல் திருநாளன்று தான் என்று மெஜாரிட்டி கூறினாலும் சிலர் ஏற்கவில்லை ..இன்னும் சித்திரை முதல் நாளன்று வாதிடுகிறார்கள் ....அதில் அரசியல் வேறு கலந்து உள்ளது . ஆயினும் உங்கள் அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றி ராஜன் சார். 04-Feb-2016 8:50 pm
நன்றி பழனி குமார் ! கஜல் போல ஹைக்கூ வகைமையும் பலரும் பலவிதத்தில் புரிந்து கொள்ளப் பட்டிருக்கிறது. சரியாகவோ..இல்லை தவறாகவோ..இப்போது நான் வாசித்த ஒரு கட்டுரையின் ஒரு சில வரிகளை கீழே கொடுக்கிறேன்: ‘ஹைக்கூ’ ஜப்பானிய மொழிக் கவிதை. 3 அடிகள் கொண்டது. மூன்று அடிகள் கொண்ட ஜப்பானிய ஹைக்கூ ஐந்து, ஏழு, ஐந்து சீர்களைக் கொண்டு 17 சீர்களில் ஹைக்கூ படைக்கப்படும் (தமிழுக்கு இந்த சீர் எண்ணிக்கை தேவையில்லை). ஜென் தத்துவத்தோடு இயற்கை மற்றும் மெய்யியலோடு தொடர்பு கொண்டது. கவித்துவம் கொண்டது. இந்தியாவின் (தமிழ்நாடு உள்பட) சூழலுக்கு ஜப்பானிய ஹைக்கூவின் உள்ளடக்கக் கோட்பாடு பொருந்தி வராது என்ற போதிலும் எப்படியோ இந்தியாவில் (தமிழ்நாடு உள்பட) ஓர் இலக்கிய வடிவமாக / கவிதையாக இடம் பிடித்துவிட்டது. பெரும்பான்மையாக தமிழ்நாட்டு ஹைக்கூ 3 அடிகள் கொண்டு எழுதப்படுகிறது. அவ்வாறு 3 அடிகள் கொண்டு எழுதப்படுவதை தமிழ் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு ‘ஹைக்கூ’ வடிவமாகவும் அங்கீகரித்துள்ளார்கள். 04-Feb-2016 8:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (115)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
வித்யா

வித்யா

சென்னை
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
அர்த்தனன்

அர்த்தனன்

ஸ்ரீலங்கா.வவுனியா

இவர் பின்தொடர்பவர்கள் (116)

Ramani

Ramani

Trichy
நிலாசூரியன்

நிலாசூரியன்

(தமிழ்நாடு)

இவரை பின்தொடர்பவர்கள் (116)

user photo

நலிகா

நலிகா

பெரம்பலூர்
பழனி குமார்

பழனி குமார்

சென்னை

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே