ஆனந்த ஸ்ரீ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆனந்த ஸ்ரீ
இடம்:  கரூர்
பிறந்த தேதி :  25-Oct-1983
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-Jun-2013
பார்த்தவர்கள்:  909
புள்ளி:  114

என்னைப் பற்றி...

கவிதைகள் படிக்க எழுதிப் பழகப் பிடிக்கும்.
வழி காட்டும் நல்லோரை மதிக்கப் பிடிக்கும்.
இனி உங்கள் வழி என் வழி..!

என் படைப்புகள்
ஆனந்த ஸ்ரீ செய்திகள்
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பை (public) முத்துகிருஷ்ணன்-ராமச்சந்திரன் மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Apr-2015 11:56 pm

கவிதை சொல்லும் கதைகள் -3
------------------------------------------------- ------ -----------------------------

“தம்பி..வணக்கம்..! டைரக்டர் சார் இருக்காரா..?” மையமாகக் குளிரூட்டப்பட்ட அந்த அறையின் ஏ.சி.வீணாகிவிடக் கூடாது என்று அளவாய்த் திறந்த கதவின் முன் கைகூப்பியபடி நின்றுகொண்டிருந்தார் வெங்காய மண்டி வெங்கடேசன். எங்களுக்கெல்லாம் வி.எம்.வி. அவருடைய இடதுபுற கக்கத்தில் அமர்ந்திருந்த கைப்பையின் கனம் அதிகமாக இருந்திருக்க வேண்டும்.குவித்த கை இறக்கியவுடன்,வலது கையால் அதனை இறுகப் பிடித்துக் கொண்டார்.

“சார்..இப்ப வந்துருவாரு..உள்ள வந்து உக்காருங்க..!” என்றான் ப.ரத்தினகுமார். எதிர்காலத்தில் ப

மேலும்

எனக்குத் தெரிந்து கதை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். பொள்ளாச்சி அபி என்ற பெயரை நிறைய இடங்களில் கேள்விப்பட்ட நினைவு. உங்களின் எழுத்தை இன்றுதான் வாசிக்கிறேன். ஒரு நல்ல வணிகப் படைப்புக்குரிய அம்சங்கள் நிறைய இருந்தாலும்,பரத்தின் மனப்பதிவு செயற்கையாக-கவிதையிலிருந்து அப்படியே எடுத்தது என்று எண்ண வைக்கிறது. தாகு அவர்களின் கவிதையும் பரவாயில்லை. இன்னமும் முயற்சியுங்கள். 26-Aug-2016 5:34 am
அருமை.. வாழ்த்துக்கள். 02-Oct-2015 9:31 pm
மன்னிக்க கருத்து இடம் மாறி பதிந்திருக்கிறது இது தல புராணம் பற்றிய கிருத்திகா வின் கட்டுரைக்கு இட்ட கருத்து 12-Jun-2015 11:51 am
கட்டுரையே ஒரு கதைபோல்... அருமையான விமர்சனப் பார்வை ..இடையிடையே உம தனி முத்திரை ,. 12-Jun-2015 11:48 am
மனோ ரெட் அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Apr-2015 9:17 am

கருமை சூழ்
கார்மேகங்களுடன்
காரை வீட்டுக்கு
குடை பிடிப்பது போல,
படையெடுத்து வந்தது
பெருமழை...!!

இரவின்
இருள் தனிமையில்
சொட்டுச் சொட்டாய் விழுந்த
மழைத் துளியும்
மோகினிப் பேயின்
கால் கொலுசாய்
காதில் சினுங்கியது ...!

குளிரின் தனிமையில்
அணைப்பதற்கு
விளக்கைத் தவிர
யாதுமில்லை என்பதால்,
கையோடு கை தேய்த்த
வெப்பத்துடன்
வெக்கம் தான் மிச்சம் இருந்தது..!

சன்னல் வழி
கம்பிகளின் ஊடாக
எதிர் வீட்டு ஓட்டில் வழியும்
சொட்டு நீரை எண்ணும்
பழக்கம் இருப்பதால்,
சாரல் மழையின்
சொட்டு எண்ணிக்கை
விட்டதில் இருந்து தொடர்ந்தது..!!

காற்று வேகமானதில்
மழையின் முகம்,
திருவிழா கூட்டத்தினுள்

மேலும்

இதம் தரும் மழையில் இனிமையான கவி 04-May-2015 4:06 pm
மழையின் மௌனம் கலைத்து குளிரச் செய்து விட்டு போகிறது படைப்பு தம்பி... அந்த குளிர்ச்சியில் கும்மாளமிடுகிறது மனமும் இந்த கவிதையை படித்து விட்டதால்... தங்கள் தனி நடையில் சாரலாய் வந்து விட்டு போகிறது படைப்பு... மிக சிறப்பு தம்பி... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 30-Apr-2015 1:27 am
குளிரின் தனிமையில் அணைப்பதற்கு விளக்கைத் தவிர யாதுமில்லை என்பதால், கையோடு கை தேய்த்த வெப்பத்துடன் வெக்கம் தான் மிச்சம் இருந்தது..! நனைந்ததாய் உணர்கிறேன் ...சிறப்பு 29-Apr-2015 8:51 pm
காற்று வேகமானதில் மழையின் முகம், திருவிழா கூட்டத்தினுள் அலைக்கழிக்கப்படும் மழலையின் முகமாய் மாறிப் போனதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. !! ////////////////////////////////////////////////////////////அருமை தோழா............ 29-Apr-2015 12:59 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பை (public) ஜின்னா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
25-Apr-2015 1:45 am

நடுநிசியில் திடுக்கிட்டு
விழித்த நொடியில்
ஓடிக்கொண்டிருந்த
மின்விசிறி நின்றதும்
நிசப்தத்தில் சிலநொடி
நின்றது மனமும் ...

வெளிச்சத்தைத் தூண்ட
அருகினில் வைத்த
அலைபேசியைத் தேடி
அனிச்சை செயலாய்
துலாவுகிறது கை ...

இரவு சரியாக மூடப்படாத
குழாயிலிருந்து
சொட்டிக்கொண்டிருக்கும்
நீரின் சப்தம்
மனதுள் சலனத்தை எழுப்ப...

சரியாக தாழிடப்படாத
சன்னல்களின் திரைகள்
காற்றில் அசைகையில்
ஏதோவொரு புது கலக்கம்
என்னுள் திடும்மென எழ ...

கொசுவலைக்கு மேல்
யதேச்சையாய் விழுந்த
பல்லியின் நகர்தல்
பயத்தை மேலும் கூட்ட ...

மெல்லிய விசில் சப்தம்
அருகினில் வர வர
கடமை தவறா சகமனித

மேலும்

நன்றி நண்பரே வருகைக்கும் இனிய கருத்திற்கும் . 30-Apr-2015 8:10 am
நன்றி தம்பி மனோ , நலமா , கொஞ்சம் அலுவலக பணி , இரவு பேசுவோம் தம்பி , வருகைக்கும் , கருத்திற்கும் மிக்க நன்றிகள் . 30-Apr-2015 8:10 am
//இந்த கவிதை தங்கள் படைப்பில் எப்போதும் ஒரு சிறப்பான பட்டியலில் இடம் பிடித்து நிற்கும்... // தங்களின் தொடர் ஊக்கமும் , சிறந்த பின்னூட்டங்களும் என்றும் என்னை மிக கவனமுடன் கவி புனைய தூண்டிக்கொண்டிருக்கும் , வருகைக்கும் , வாழ்த்திற்கும் மிக்க நன்றிகள் நண்பர் ஜின்னா. 30-Apr-2015 8:08 am
அருமையான அழகியல் வரிகள் ! தொடருங்கள் தோழா ! 28-Apr-2015 4:35 pm
கட்டாரி அளித்த படைப்பை (public) பொள்ளாச்சி அபி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Apr-2015 8:49 pm

நியூட்டனோடு நீயும்
இருந்திருந்தால் மூன்றாம்
விதி இல்லாது
போயிருக்கலாம்...
நீ பார்த்துச் சிரிக்கும் போது
ஒன்றும் செய்ய இயலாது
போயிருந்த
என் எதிர்வினைகளைப் போல....

பிதாகொரஸ் தேற்றம்
ஞாபகத்தில் இல்லை....
மறக்கவே முடிவதில்லை...நீ
பிதாகொரஸ் தேற்றம்
சொன்னது....

மியூஸேசி... ஆஸ்ட்ரேசி..
என பூக்களின்
குடும்பத்தில் உன் பெயர்
ஏன் விடுபட்டது...?

இருகை வேழத்து...
இல்பொருள் உவமைக்கான
எ.கா சொல்லியிருக்க..
எனக்குத் தோன்றியது..
பூக்களின் நடுவில்
பூந்தோட்டம்...

நீ பிடித்திருந்த
சோதனைக் குழாயில்
உப்புக் கரைசல்
சர்க்கரைக் கரைசலாகி
விட்டிருந்தது...

உணவு இடைவே

மேலும்

சர்க்கரைக் கரைசலில் அசந்துவிட்டேன். சரித்திர வகுப்பில் பிரமித்து விட்டேன். பள்ளிக் கால நினைவுகளைக் கிளறிவிட்டது இந்தக் கவிதை. மிக மிக அருமை நண்பரே..!! 04-Jul-2015 12:12 am
அசத்தலான படைப்பு 05-May-2015 3:39 pm
டோடலி டேமேஜ்...... !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ஃபீலிங் அண்ட் திங்கிங் மை ப்ளஸ் டூ டைம் .............................. அருமை...!!! 05-May-2015 3:37 pm
திரும்பத் திரும்ப படித்து ரசித்தேன்...................................அசத்தல் நண்பரே!! 28-Apr-2015 8:09 pm
ஆனந்த ஸ்ரீ - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2015 10:58 am

கணுக்கால் புதைகிறது
சுடு மண்ணில்..!
முங்கிக் குளித்தது
மனக் கண்ணில்..

ஆற்றுநீரின் சப்தம்
காதில் நிறைந்தது ஒருகாலம்.!
மணல் லாரிகளின் சப்தம்
இப்போது அலங்கோலம்..!

பசித்தவன் வயிற்றுக்கு
அமிர்தமாய் இருந்தது ஆறு...
இந்த ஆற்றை திருடி
புசித்தது இப்போ யாரு..?

மேலும்

அருமையான படைப்பு ........ 20-Apr-2015 12:58 pm
இந்த ஆற்றை திருடி புசித்தது இப்போ யாரு..? அருமையான வரிகள் 20-Apr-2015 12:50 pm
ஆற்றாமையில் இந்த ஆறு,நினைவுகளில் நீர்.........வாழ்த்துகள் 20-Apr-2015 11:59 am
வலிமையான படைப்பு ..தொடருங்கள் . 20-Apr-2015 11:51 am
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) சரவணா மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Apr-2015 1:52 am

மரம்வெட்ட போன மறத்தமிழன் மேனி
மரமாகிச் சாயத் துடித்தோம் – சரமாரி
என்றே பொழிந்த எதிராளித் தோட்டா
சினம் கண் டெழுந்தோம் சிவந்து.

உயிரெடுக்குந் தெய்வ உருவெடுத்து விட்டோம்
கயிறாய் திரித்திடுவோம் தமிழன் உயிரை
பயிராய் அறுக்கும் பகைவன் திமிரை
தயிராய்க் கடைவோம் துணிந்து.

காட்டு மகமாயி காளி வழிகாட்ட
நாட்டில் நலிந்த தமிழரினி – கூட்டுக்
குயில்போல் குமுறும் நிலைமாற்றிக் காட்ட
எயிலாய் இருப்போம் இணைந்து.
(எயில் –அரண்)

படத்துக்கான கவிதை நன்றி வல்லமை
(வல்லமை இணைய இதழ் நடத்திய படக்கவிதை போட்டியில் வெற்றி பெற்றக் கவிதை )

மேலும்

மிக்க நன்றி . 23-Apr-2015 1:53 am
ஒற்றுமையோடு மறத்தமிழனாக இருந்தால்தான் பிரச்சினைகள் இல்லையே. பிரிவினைக்கு அடிகோலும் ஒற்றுமையில்லா மடத்தமிழனாக அல்லவா இருக்கிறார்கள். ஒற்றுமைக்காக காளியிடத்திலான உங்களின் வேண்டுதல் பலிக்கட்டும் மெய்யன் சார். வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துக்கள். 22-Apr-2015 7:56 pm
நன்றி 21-Apr-2015 1:48 am
நன்றி. 21-Apr-2015 1:47 am
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) Sujay Raghu மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
13-Apr-2015 3:24 pm

வணக்கம் தோழர்களே..!
யுகம் தாண்டும் சிறகுகள்..பகுதியில் நானும் எழுதுவதற்கு தோழர் கவித்தா சபாபதி வாய்ப்பு அளித்த போது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.மேலும் அழகான எல்லை மீறலில்..என்று அவர் குறிப்பிட்டிருந்தது கூடுதல் மகிழ்ச்சி. காரணம்,குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்குள் நின்று எழுதுவதென்ற இறுக்கம் தளர்ந்துவிட்டது.அதனால்,சுதந்திரமாகப் பேச எனக்யொரு வாய்ப்பு.

இயல்பாக எழுதத் துவங்கி,இக்கட்டுரை முடிவுற்றபோது,அதனை மூன்றுபாகங்களாகப் பதிவு செய்யவேண்டிய அளவில் இருந்தது.அதனால் என்ன..? எல்லைமீறல் என்பது இங்கு அனுமதிக்கப்பட்டு விட்டபடியால், நானும் எனது சுதந்திரத்தின் எல்லையை சற்று பரவலாக்கிக் கொண்டேன். 17,18,19

மேலும்

அருமை ....யுகங்களை தாண்டும் இப்படைப்பும் நம் தோழர்களின் கவியும் ...நன்றி அபி ஐயா...வாழ்த்துக்கள் தாகு ...வாழ்த்துக்கள் வெள்ளூர் ராஜா ... 20-Apr-2015 12:22 am
உங்கள் வரவும்,கருத்தும் எனக்கு மிக்க மகிழ்ச்சியளிக்கிறது..வாய்ப்பு இருக்கின்றபோதெல்லாம் எழுதவே விருப்பப் படுகிறேன் தோழமையே..! மீண்டும் பேசுவோம்.! 18-Apr-2015 9:47 pm
திரு.தாகு என்பவரின் கவிதைகளை இதுவரை நான் படித்ததில்லையே என்ற வருத்தம் இப்போதுதான் அதிகரிக்கிறது.ஆப்கோ ஹிந்தி மாலும் கவிதை ,வாசிக்க எளிமையான் வார்த்தைகளில் உள்ள வரிகள்,மனதை என்னவோ செய்கிறது. திரு.பொள்ளாச்சி அபி அவர்கள் இதனை எடுத்துக் காட்டிய விதம் அக்கவிதைக்கு மேலும் வலு சேர்த்துள்ளது. தொடர்ந்து இதுபோல நிறைய கட்டுரைகளை திரு.பொள்ளாச்சி அபி அய்யா எழுதவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.உங்களுக்கும்,திரு .தாகு அவர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.! 18-Apr-2015 10:49 am
மிக்க நன்றிகள் தோழரே..! "எத்தனையோ கவிதைகளை இனம் காட்டி யுள்ளமை குறித்து மகிழ்கிறேன் ,சிலவற்றை இனிமேல்தான் பார்க்கப் போகிறேன்..!"----- மிக நல்ல பணி..செய்யுங்கள்..தட்டிக் கொடுங்கள்..வாய்ப்பு இருக்கும்போதெல்லாம் நானும் உங்களுடன் வருகிறேன்..! உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..! 17-Apr-2015 10:41 am
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) pollachi abi மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Apr-2015 7:18 pm

"உன் பிடிவாதம்
எனக்கு பிடிக்கிறது
அதனால் தான்
இதயம் கிடந்து துடிக்கிறது.!" --என்பது மு.மேத்தாவின் வரிகள்.காதல் என்ற வார்த்தையே இன்றி நீளும் ஒரு காதல் கவிதை.

"நீ
நீயாகத்தான் இருக்கிறாய்.
நான்தான்
நானாக இல்லை.. " என்ற வரிகளும் காதல் குறித்த அவரது வரிகளே..!

"ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பார்த்துக் கொண்டே பிரிந்திருந்தோம்
சேர்த்து வைக்க காத்திருந்தோம் .! -- ---- நா.முத்துக்குமாரின் இந்த வரிகளும்,காதலின் வலியையும்,விருப்பத்தையும் அழகாகச் சொல்கிறது.

இதேபோல் “பூக்கள்” எனும் வரிசையில் தோழர் வெள்ளூர் ராஜா எழுதிய கவிதைகளைப் படித்தபோது காதலை, வரிகளில் சொல்லாமல் வாசிப்ப

மேலும்

"காலத்தோடு ஒட்டி இயங்கும் கவிஞராகவும் அவர் இருப்பதை நானும் முன்னமே உணர்ந்திருக்கிறேன்.."------- உண்மை..உண்மை..! தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..! 18-Apr-2015 10:17 pm
நண்பர் வெள்ளூர் ராஜா அவர்களின் பல கவிதைகளை நான் வாசித்து இருக்கிறேன்.அவரின் கவிதைகளுக்குள் அரசியல் உட்பட பல நுட்பங்கள் மறைந்து இருப்பதும், திரு.பொள்ளாச்சி அபி அவர்கள குறிப்பிட்டு இருப்பதுபோல காலத்தோடு ஒட்டி இயங்கும் கவிஞராகவும் அவர் இருப்பதை நானும் முன்னமே உணர்ந்திருக்கிறேன். எனது எண்ணங்களை அப்படியே பிரதி பலிக்கும் வகையில் இருக்கிறது இந்தக் கட்டுரை..மிக்க மகிழ்ச்சி. திரு.வெள்ளூர் ராஜாவிற்கு எனது வாழ்த்துகள்.! திரு.பொள்ளாச்சி அபி அவர்களுக்கும் எனது நன்றிகள்.! 18-Apr-2015 10:42 am
வணக்கம் அய்யா ! நேரமிருந்தால் என்னுடைய ''வினாக்காலம்''படைப்பிற்கு வாருங்கள் ! ------------------------ அன்புடன் --சுஜய் ரகு-- 17-Apr-2015 11:18 am
"நேரம் கிடைக்கும் பொது அவரின் பக்கம் நிறைய படிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்துகிறது தங்களின் கட்டுரை .."---- இதற்க்காகத்தானே ஆசைப் பட்டேன் குமரேசன் கிருஷ்ணா..! "எழுத்து மூலமாக கருத்துரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவது என்பது இலக்கியவாதிகளின் மாபெரும் ஆயுதம்.." வாசியுங்கள்..இன்னும் நிறைய வாசியுங்கள். ஏதேனும் ஒரு புத்தகம் படித்துவிட்டு, அதன் சாரத்தை ஒரு கவிதையாக்க முயற்சி செய்து பாருங்கள். அது வெற்றியடைந்தால் ஒரு மாபெரும் விஷயத்தை உங்கள் கவிதை தனக்குள் ஒளித்து வைத்து இருப்பதை நீங்கள் காண்பீர்கள்..! "தனக்குத் தெரிந்த ஒருவிஷயத்தை முப்பது மாதிரியாக மாற்றி,மாற்றி சொல்வதைவிட. முப்பது விஷயங்களை,முப்பது விதமாக சொல்லும் முயற்சியே படைப்பு..!" என்பதையும் சேர்த்து நாம் மனதில் கொள்வோம் தோழரே..! வாழ்த்துக்கள்..! உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் ..! அன்புடன் பொள்ளாச்சி அபி 17-Apr-2015 11:15 am
பொள்ளாச்சி அபி அளித்த படைப்பில் (public) suchindran மற்றும் 8 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Apr-2015 9:30 pm

“கிறுக்கல் வாழ்க்கையில்

று
க்
கி

எங்களின் விதிக்கோடுகளை
யார்தான்
ஓவியமாக்கப் போகிறீர்கள்..?”
-------

“ஒன்றே தெய்வம் என்றுரைக்கும்
உத்தமர்கள்..
தமக்குத் தொண்டு செய்கிற
சாம்பானை..
ஊர்க்குளத்தில் நீரெடுக்க
விடுவதில்லை
ஏன் எனில்
குலம்வேறு, குளம்வேறு..!”
-----

“அனுதினமும் பட்டினியால்
அல்லாடும் எங்களை
யாருக்கும் தெரிவதில்லை.
அரசியல்வாதியின் உண்ணாவிரதம்
நாட்டுக்கே தெரிந்துவிடுகிறது.!”

--------

“வரவு பிரேக்போட்டு
நிற்கும்போது
செலவு மட்டும்
ஆக்சிலேட்டரை
அழுத்தித் தொலைக்கிறது.?” - வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற இந்தக் கவிதைகள் கடந்த சில

மேலும்

மணம் வீசிப் பறக்கும் சிறகுகள் மனிதரையும் அடையாளம் காட்ட வல்லன. ராம் வசந்த், அபி சார் இருவர்க்கும் வாழ்த்துக்கள். 22-Apr-2015 4:39 pm
கவிதை /209114, கவிதை /209077 ------ இந்த இரண்டு இணைப்புகளையும் பாருங்கள் தோழரே..! சுசிந்திரனின் -சித்திரத்தின் விலை இரண்டு கண்கள் எனும் தலைப்பில் இரு பகுதிகள் உண்டு. வாசியுங்கள் -மீண்டும் பேசுவோம்..! - அன்புடன் பொள்ளாச்சி அபி 21-Apr-2015 11:17 pm
மலைகள் எப்போதும் தன்னையே குனிந்து பார்த்துக் கொண்டு தன்னுயரம் குறித்து பெருமை பீற்றித் திரிவதில்லை.. !... ........................நீங்கள் சொல்லியது உங்களுக்கும் பொருந்தும்.......மிக்க நன்றி......கருத்துக்கு பதில் அளித்தமைக்கு.......நீங்கள் குறிப்பிடும் அக்கட்டுரையை நான் இதுவரை பார்க்கவே இல்லையே.......தாங்கள் எழுதி உள்ளீர்கள் என்றால் நான் தன்யனானேன்.......மன்னிக்கவும்.....கொஞ்சம் விவரம் சொன்னால் அதைத் தேடுகிறேனே....... 21-Apr-2015 11:08 pm
"நேர்மையான விமர்சன பார்வை ...!" ------- ஆகா..இந்த ஒரு கருத்து, இதுவரை நான் தவறு எதுவும் செய்யவில்லை..என்று ஆறுதல் அளிக்கிறது தோழரே..! நன்றி..மிக்க நன்றி..! 21-Apr-2015 11:00 pm
ஆனந்த ஸ்ரீ - எண்ணம் (public)
27-Mar-2015 12:06 pm

1.படித்ததில் பிடித்தது..!
-----------------------------------
செஞ்சாந்தின் பின்னணி-யாழ்மொழி
----------------------------------------------------------
மூர்க்கத்தன ஆண்மையால்
முடக்கப்பட்ட பெண் சுதந்தரம் ..
ஆடை அலங்காரப் பேச்சால்
அலங்கரிகப்படுவது ஏனோ ?

துகிலுரியப்பட்ட பாஞ்சாலிகள்
சேலை கட்டியச் செய்திகளை
திரைக்குப் பின்னே மறைத்து
வைத்தது ஏனோ ?

கைம்மையான கன்ணகிகளின்
சேலையை விலக்கத் துடிக்கும்
செஞ்சாந்தின் பின்னணி விமர்சிக்கப்
படுவதில்லை ஏனோ ?

மழலையையும் மாய்த்துவிட்ட (...)

மேலும்

நன்றிகள் சகோதரி ஆனத ஸ்ரீ .... 27-Mar-2015 3:35 pm
ஆனந்த ஸ்ரீ - எண்ணம் (public)
27-Mar-2015 11:58 am

2.படித்ததில் பிடித்தது..
----------------------------------
தேர்வுக்கு வேண்டும் ஒரு தேர்வு
-------------- -------------- ------------------

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை தாங்கள் பணி யாற்றும் பள்ளிக்கு அனுப்பியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பப் பட்ட பிளஸ் 2 கணிதத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவி ஒருவர் (...)

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..! 31-Mar-2015 12:15 pm
நல்ல கருத்து மிக்க நன்றி..! 31-Mar-2015 12:15 pm
இதனை பற்றிய விழிப்புணர்வுகள், முதலில் அனைத்து பெற்றோர்களிடமும் ஏற்படவேண்டும்... 27-Mar-2015 5:47 pm
அடிப்படையிலே கல்வி கற்கும் முறையிலும் தேர்வு முறையிலும் மாற்றம் வரவேண்டும். மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து . அதில் கிடைக்கும் மதிப்பெண்களால் திறமைகள் நிருபீக்கப்படுவது கேலிகூத்தே. அதிலும் மதிப்பெண் பெற மாணவர்களை எந்திரமாக பயன்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள், சமூகத்தின் பார்வைக்காக முரட்டுத்தனமாக எப்படியும் வெல்லலாம் மனோபாவத்தில் காபி அடிக்கும் மாணவர்கள்.. இவர்களால் எதிர்கால உலகத்திற்கு என்ன பயன்.....? வினாக்கள் மட்டுமே எப்போதும் ஆக்ரோஷம் பாடும். விடைகள் மயானத்தில் உறங்கிக்கொண்டிருக்கும். 27-Mar-2015 4:08 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (73)

அமுதினி

அமுதினி

சிதம்பரம்-தமிழகம்
user photo

சஹானா தாஸ்

சஹானா தாஸ்

குமரி மாவட்டம்
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்

இவர் பின்தொடர்பவர்கள் (74)

இவரை பின்தொடர்பவர்கள் (73)

முனைவர் இர வினோத்கண்ணன்

முனைவர் இர வினோத்கண்ணன்

தஞ்சாவூர், தற்போது சீனாவி
Ezhil Rahav

Ezhil Rahav

Gobichettipalayam

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே