அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொல்காப்பியம் என்பது எழுத்திலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட இலக்கணம். அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது. எழுத்தில் உள்ள 'காற்று' என்பது, பேச்சில் 'காத்து' ஆகிறது. அது முயற்சிச் சிக்கனத்தால் ஏற்பட்டது. இலக்கண வரம்பு மீறல் பேச்சு வழக்கில் இயல்பானதொன்று. வந்துகொண்டிருந்தான் என்று எழுதும் நாம், பேசும்போது, 'வந்துகிட்டிருக்கான்' என்கிறோம். அதை இலக்கண வழுவமைதி என்று சொல்லக்கூடாது. அறியாமையால் நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லை! புற்றரை என்பதை புற்தரை என்றும் , முட்செடியை முள்செடி என்றும் எழுதி அதற்கு அமைதி சொல்லத் தொடங்கிவிட்டோம். பிழைநீக்கி நல்ல தமிழில் எழுதப் பெருமுயற்சி தேவையில்லை. இலக்கணத்தை முறையாகப் பயின்றாலே போதும். தமிழ் அறிந்த நல்லோர் அதற்கு வழிகாட்டி உதவுதல் நன்று. அன்புடன். 19-Jul-2017 10:24 am
வயல் +காடு = வயற்காடு
கொச்சை யில் வயக்காடு ஆனது
புயல் +காற்று =புயற்காற்று
முயல் + கொம்பு =முயற் கொம்பு
கயல் +கண்ணி = கயற்கண்ணி
அம் எனும் அடைமொழி சேர்த்தால்
அம் + கயல் +கண்ணி =அங்கயற் கண்ணி
அம் கயல் கண்ணி என்று எழுதுகிறோமா ? பேச்சில் சொல்கிறோமா ? இல்லை .
எழுத்திலும் பேச்சிலும் அவள் அங்கயற் கண்ணியே ! இல்லை .
தொல்காப்பியன் இலக்கணமும் சங்கத் தமிழ் இலக்கியமும் ஒரு சேர வளர்க்கும்
தென் மதுரை செந்தமிழ்ச் செல்வி அல்லவோ அவள் !
17-Jul-2017 9:15 am
அருமை
கற்றார் என்ற சொல்லுக்கு கல் தான் மூலம்
கற்றார் கல்லாதார் என்கிறோம்
வேறு வழியில் கற்றவர் கற்காதவர் என்றும் சொல்கிறோம்
கல்பனா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தன கற்பனா கற்பனை என்ற சொற்கள்
அது ஒரே சொல் கல்பனா கல்பனை என்று சொல்லலாமே ! 17-Jul-2017 8:48 am
௧)அங்கத்தினர்-
௨)அர்த்தம்
௩)அலங்காரம்
௪)ஆரம்பம்
௫)விஞ்ஞானம்
௬)தீபம்
௭)கும்பாபிக்ஷேகம்
௮)சாவி
௯)சரித்திரம்
௧௦)சபதம்
௧௧)சாதம்
௧௨)பௌத்திரி
இவை அனைத்திற்கும் பொருத்தமான தமிழ் சொற்கள் என்ன ?
அடிப்படையில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். தொல்காப்பியம் என்பது எழுத்திலக்கணத்திற்கு உருவாக்கப்பட்ட இலக்கணம். அதில் வரையறுக்கப்படும் இலக்கண வரம்புகள் எழுத்து வழக்கை நெறிப்படுத்துவதற்கே. உலக வழக்கான, பேச்சுத்தமிழை இலக்கண வழக்கோடு பொருத்திப்பார்க்கக்கூடாது. எழுத்தில் உள்ள 'காற்று' என்பது, பேச்சில் 'காத்து' ஆகிறது. அது முயற்சிச் சிக்கனத்தால் ஏற்பட்டது. இலக்கண வரம்பு மீறல் பேச்சு வழக்கில் இயல்பானதொன்று. வந்துகொண்டிருந்தான் என்று எழுதும் நாம், பேசும்போது, 'வந்துகிட்டிருக்கான்' என்கிறோம். அதை இலக்கண வழுவமைதி என்று சொல்லக்கூடாது. அறியாமையால் நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லையே இல்லை! புற்றரை என்பதை புற்தரை என்றும் , முட்செடியை முள்செடி என்றும் எழுதி அதற்கு அமைதி சொல்லத் தொடங்கிவிட்டோம். பிழைநீக்கி நல்ல தமிழில் எழுதப் பெருமுயற்சி தேவையில்லை. இலக்கணத்தை முறையாகப் பயின்றாலே போதும். தமிழ் அறிந்த நல்லோர் அதற்கு வழிகாட்டி உதவுதல் நன்று. அன்புடன். 19-Jul-2017 10:24 am
வயல் +காடு = வயற்காடு
கொச்சை யில் வயக்காடு ஆனது
புயல் +காற்று =புயற்காற்று
முயல் + கொம்பு =முயற் கொம்பு
கயல் +கண்ணி = கயற்கண்ணி
அம் எனும் அடைமொழி சேர்த்தால்
அம் + கயல் +கண்ணி =அங்கயற் கண்ணி
அம் கயல் கண்ணி என்று எழுதுகிறோமா ? பேச்சில் சொல்கிறோமா ? இல்லை .
எழுத்திலும் பேச்சிலும் அவள் அங்கயற் கண்ணியே ! இல்லை .
தொல்காப்பியன் இலக்கணமும் சங்கத் தமிழ் இலக்கியமும் ஒரு சேர வளர்க்கும்
தென் மதுரை செந்தமிழ்ச் செல்வி அல்லவோ அவள் !
17-Jul-2017 9:15 am
அருமை
கற்றார் என்ற சொல்லுக்கு கல் தான் மூலம்
கற்றார் கல்லாதார் என்கிறோம்
வேறு வழியில் கற்றவர் கற்காதவர் என்றும் சொல்கிறோம்
கல்பனா என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தன கற்பனா கற்பனை என்ற சொற்கள்
அது ஒரே சொல் கல்பனா கல்பனை என்று சொல்லலாமே ! 17-Jul-2017 8:48 am
உலக அளவில் தற்கொலைகள் அதிகம் நடப்பதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டது. இதற்கு முக்கியமான காரணம் என்ன? இது பற்றிய உங்களின் கருத்து?
நல்ல அறிவுரை கவிதை.... காதல் கவிதைகளை விட இது போன்று தன்னம்பிக்கை வரிகளை வாசிக்கவே மனம் நாடுகிறது... தொடருங்கள் உங்கள் கவி பயணத்தை விதையுங்கள் கவி மூலம் நற்கருத்தை ....... 20-Jun-2017 7:33 pm
தமிழ்தான் தன் உயிர், அதுவே இன்பத் தமிழ், அதுவே தனது சந்தோசம் என தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்து வந்தனர் பண்டைய அரசர்களும் அறிஞர்களும்.அப்படி இருக்க இன்று ( பலரிடம் )ஏன் நம் தமிழர்களிடம் விரும்பத்தகாத மொழியாக தமிழ் மாறியது.
தமிழின் வீழ்ச்சி எக்காலத்திலிருந்து ஆரம்பிக்கிறது?அதற்கான காரணம் யாது?
( தமிழ் சம்மந்தமாக கேள்வி தொடுத்தால் மிகக் குறைவானவர்களே பதிலளிக்கின்றனர் )
தமிழ்போல் இனிய மொழியில்லை;
தரணியில் அதற்கு நிகரில்லை;
விழிபோல் மொழி காக்காவிடில்
எழுச்சி என்பது தமிழுனுக்கில்லை!!!!
சூடுசுரணை அற்ற தமிழன்!!!
சொந்தப்புத்தி இல்லாத் தமிழன்!!!! 03-Jul-2014 7:15 am
எங்கள் ஊரில் இப்படிச் சொல்வார்கள், தாய் மொழியைப் பழித்தால் தாயை பழிப்பது போல் என்பார்கள்!
தாய் மொழி பேசப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும்!வேற்று மொழிகள் எப்படித்தான் பேசினாலும் அது நமக்கு அந்நிய மொழிகளே!
நன்றி! 01-Jul-2014 5:34 pm
வௌ்ளையன் ஒழிக என்று சொன்னதும் சுதந்திர தாகம் கொண்டதும் நம்மை நாமே ஆட்சி செயவதும் எம் தாய் நாடு ,தாய் மொழி என்பன வளம்பெற வேண்டும் என்பதற்காகவும்தானே! இந்தியா சுதந்திரம் பெற்று 67 வருடங்கள் சென்றும் இந்நிலை இன்னும் மாறவில்லையே! மாறத்தேவையில்லை என நினைக்கிறதா அரசு?
கருத்துக்கு நன்றி ஐயா!
வாழ்க தமிழ்!! 01-Jul-2014 5:28 pm