வ சிவா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வ சிவா
இடம்:  சங்கரன்கோவில்
பிறந்த தேதி :  20-May-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  22-Feb-2012
பார்த்தவர்கள்:  666
புள்ளி:  41

என் படைப்புகள்
வ சிவா செய்திகள்
வ சிவா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2020 10:28 am

புன்னகைக்கு புள்ளியிட்டால்
எழுத்தில் இவள்
பூக்கோலமாய்ச் சிரிப்பாள் !

புள்ளியிட்ட கோலத்தை புன்னகையுடன் இவள்
மார்கழி வீதியில் வரைந்தால்
மனிதரும் பனித்தென்றலும் இருகோலத்தையும் நின்று பார்க்கும் !

மேலும்

அருமை அழகிய கருத்து மிக்க நன்றி கவிப்பிரிய சிவாவ 01-May-2020 9:04 am
அருமையான பதிவு ! நீங்கள் புள்ளியிட்ட வரிகளில் காதல் மின்னிற்று. . 01-May-2020 8:59 am
தம்பி கவின்சாரலருக்கு வணக்கம் உங்கள் கோலம் அற்புதம்(பாடலைசொன்னேன்) பார்த்து ரசிக்கலாம் பத்தெனினும் பார்வையை யீர்க்mகும் அழகுக்கோ லம் 30-Apr-2020 10:57 am
வ சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
01-May-2020 8:47 am

முகம் அறியா நட்பு முடிவில்லா அழைப்புகளானது , உன் ஒற்றை வரி தெளிவுரையால்!

விட்டுக் கொடுத்து போகவும் தட்டிக்கொடுத்து நகரவும் கற்றுக்கொடுத்த கவரி நீ!

விரிவிழி பார்வைகள் போதும் நீ மொழிபெயர்க்க! கையடக்க காதல் பற்றி கொள்க இருவரின் கண்களில்!

விமர்சனங்கள் நின் கருணை, விழி பிதுங்கி நின்றால் தாங்காது தாயுள்ளம் போதும் நீ பொழிமழை அன்பே!

மேலும்

மஅனிற்றா ஜான்சி அளித்த படைப்பில் (public) shakshi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
18-Nov-2016 12:06 pm

காதலை நேரில் சொல்லும் தைரியம் யாருக்குண்டு?

கடிதம் மூலமும், கைபேசி குறுஞ்செய்தி மூலமும்தானே

காதல் அழைப்புகளும், காதலிக்க அழைப்புகளும் பறக்கும்...

பலவற்றிற்கு ஒத்திகை பார்த்திருப்போம்,

காதலை சொல்வதில் மட்டும் நேரடியாக அரங்கேற்றம் தான்,

ஏனென்றால் எப்படி சொல்வதென்றே புரியாது, தெரியாது...

நானும் என் காதலை சொல்ல கையாண்ட முறை "குறுஞ்செய்தி தகவல் பரிமாற்றம்".

அந்தச் செய்தி காற்றில் அலைகளைத் தடவி என்னவனின் கைபேசியை வருடியது,

என் காதலன் அனுபவிக்கும் முன் காற்று அனுபவித்தது என் காதலை.

எங்களுக்குள் காதல் மொட்டு விரிந்து, மலர்ந்து, மனம் பரப்பிக் கொண்டிருந்தது,

திடீரென்று ஒரு

மேலும்

ஆம்! காற்றிலே கலந்தாலும் என்னவனின் மூச்சுக்காற்றாய் உள்நுழைந்திருக்கும்...! கருத்தளித்தமைக்கு நன்றி தோழரே...! 21-Nov-2016 12:37 pm
நீங்களுமா? குறுஞ்செய்தி இல்லை என்றால் பல காதல் காற்றிலே கலந்திருக்கும் என நினைக்கிறேன். . 19-Nov-2016 11:29 pm
காதல் வந்ததும் வெட்கமதை அணிந்துகொண்டால் விழி மொழி ஏது? கருத்தளித்தமைக்கு நன்றி தோழி...! 18-Nov-2016 7:15 pm
காதலை சொல்லிட கவி மொழிகள் தேவையில்லை....விழி மொழியொன்றே போதுமே....அழகான வரிகள்....இன்னும் எழுதுங்கள் வாழ்த்துகள்..... 18-Nov-2016 7:03 pm
வ சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 10:42 am

காதலில் கருவுற்று காத்திருப்பில் பிறக்கின்றன கவிதைகள். . .

மேலும்

மரணம் வரை கவிதையின் காதல் 18-Nov-2016 4:45 pm
வ சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Nov-2016 10:39 am

என்னை நோக்கி வசிய ஒளி வீசும் அந்த நிலவுக்கு தெரியாது நான் ஏற்கனவே மின்மினி மீது காதல்_கொண்டவன் என்று. . . .

மேலும்

நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Nov-2016 4:37 pm
வ சிவா - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2015 1:17 pm

வசதியாகத்தான் இருக்கிறது மகனே…
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்

மேலும்

வலி மிகு வரிகள் .. 08-Feb-2015 2:03 pm
வ சிவா அளித்த படைப்பில் (public) karguvelatha மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jan-2015 12:45 am

நாம என்னைக்கு பயப்படவே கூடாதுனு நினைச்சுக்கிட்டே பாத்ரூம் போறமோ அன்னைக்குதான். . . .

நாம காலை கொண்டு போய் கரக்டா தவளை மேலயே வைப்போம். .

"லைட்டா பதட்டமாதான் இருக்கும்."

அப்புறம் சுதாரிச்சுக்கிட்டு உள்ள போனா தூரத்துல ஒரு நாய் "ஊஊஊஊஊனூ . . . . . " கத்தும்!!!

சரின்னு கதவை பூட்டுவிங்க "கரண்ட்டும்" போய்ரும். . .

அப்போ கேட்கும் பாருங்க சொட்டு சொட்டுனு பாத்தா "டேப்" சரியா மூடிருக்மாட்டோம். . .

அத சரியா மூட உள்ள போவிங்க பக்கத்து "சர்ச்ல" பெல் அடிக்கும் நேரம் 12 மணி அப்படினு . . . .

கொஞ்சம் பயமாதான் இருக்கும் என்ன பன்னுறது விடிஞ்சா "செவ்வாய் கிழமையாச்சே. . ."

நம்ம நிழல்கூட அநிய

மேலும்

மிக்க நன்றி நண்பா. . . . 07-Jan-2015 9:55 pm
அழகான படைப்பு .. வாழ்த்துக்கள் ... 06-Jan-2015 2:07 pm
பொழுது பார்த்து வருவதில்லை பயம்....! உண்மைதான்....! நன்றி தோழரே....! 06-Jan-2015 8:04 am
போகலாம் நட்பு நாகூர்கவி அவர்களே சந்தர்ப்பங்களும் எண்ணங்களும் பயமுறுத்த காத்திருக்கும் அல்லவா? 06-Jan-2015 8:01 am
வ சிவா - அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Dec-2014 1:58 pm

வேலை உள்ள பட்டதாரி - சித்ரா

எனக்கொரு எண்ணம் இல்லை சந்தேகம் என்று கூட சொல்லலாம்.
இதை ஒரு நீண்ட கேள்வியாக பாவித்து தங்கள் பதில்களை கருத்துக்களாக பதிவு செய்யலாம்.

படிப்பில் எத்தனையோ ரகம் இருந்தும், ஏன் பெரும்பாலோனோர் பொறியியல் துறையையே தேர்வு செய்கின்றனர்?

படிக்கும் போதே வேலை கிடைத்து விடும் என்ற நோக்கத்திலா?
சம்பளம் அதிகம் என்ற நோக்கத்திலா?
வெளிநாடு செல்ல வேண்டும் என்ற ஆசையிலா?
அனைவருமே பொறியியல் படிக்கிறார்கள், அதனால் என் மகனோ/ மகளோ அதை படித்தால், வேலையும், கை நிறைய சம்பளமும் கிடை (...)

மேலும்

சரியான புரிதல் தோழரே.. நீங்கள் சொல்லுவது உண்மைதான்.. குலத்தொழிலை கௌரவதிற்காகவாவது பணம் கொட்டி படிக்க வைத்து விடுகின்றனர்,, கருத்திற்கு நன்றிகள் தோழரே.. 06-Dec-2014 9:36 pm
குலக்கல்வி ஒழிந்துவிட்டது என்று யார் சொன்னார், தொழிலாளி மகன் தொழிலாளியாவதில்லை என்றாலும், ஒரு டாக்டரின் மகன் அதிக பொருட்செலவில் டாக்டராகி, பின் ஆயிரம் கொலை செய்தேனும் அரை டாக்டராவதை பார்கிறோமே. படிப்பு "இன்டலிஜென்ஸ்" பொறுத்ததில்லை இப்போது, அது ஒரு "இன்வெஸ்ட்மென்ட்". மாற்றனும் தான் ஆனால் அஸ்திவாரத்தை கோணலாக வைத்துக்கொண்டு, கட்டிடத்தை எத்தினை முறைதான் அழகு படுத்துவது. 06-Dec-2014 9:02 pm
அனைவருக்கும் குறைந்த பட்சம் ஐந்து துறைப்பற்றியாவது தெரிந்து இருக்க வேண்டும் நட்பே.. தெரிந்து கொள்வதில் கூட ஆர்வம் மிகக் குறைவாகவே உள்ளது..நேரம் ஒதுக்கிப் படித்து, தங்கள் கருத்தையும் பதிந்ததற்கு என் மன்மார்ந்த நன்றிகள்.. 06-Dec-2014 1:38 pm
சிறப்பான பதிவு .... ஒரே பாதையில் செல்பவருக்கு வழி காட்டும் பதிவாய்... நிறைய பாதை பற்றி அறியாமலே சிலர் படிப்பை முடிக்கின்றனர் .... 06-Dec-2014 11:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

ஜெயசிங்

ஜெயசிங்

மணலிக்கரை
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
மஅனிற்றா ஜான்சி

மஅனிற்றா ஜான்சி

எட்டயபுரம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (20)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (20)

Rajankhan

Rajankhan

வேடந்தாங்கல்
பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
நித்யாதேவி

நித்யாதேவி

திண்டுக்கல்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே