சுடலைமணி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சுடலைமணி
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  07-May-1983
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Dec-2013
பார்த்தவர்கள்:  290
புள்ளி:  166

என்னைப் பற்றி...

தமிழனாய் பிறந்து, தமிழ்க்குடியனாய் வளர்ந்து, தமிழாய் வாழ்வதே ...
இப்பிறப்பின் யான் செய்த புண்ணியம்

- சு.சுடலைமணி

என் படைப்புகள்
சுடலைமணி செய்திகள்
சுடலைமணி - vaishu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Jul-2016 10:52 pm

வெகுநாட்களுக்கு பிறகு
எழுத அமர்கிறேன்..

நீ செந்தணலால்
பேசிய வார்த்தைகளின்
காயங்கள் ஆற
வடுக்கள் மட்டுமே

அதில் கண்ணீர்
கோடுகள் மட்டுமே
செல்லும் வழித்தடங்களாய்
மாறிவிட்டன..

மிச்சம் உள்ள வாழ்கை
எப்படியும் வாழ்ந்து தானே
ஆகவேண்டும்..

ம்ம்...

- வைஷ்ணவ தேவி

மேலும்

ம்ம்ம்ம்....வாழ்வதற்கு தான் வைஷு....!! 11-Nov-2016 2:52 pm
இரண்டு ஆண்டுகள் கழித்து நானும் எழுத வந்துள்ளேன் ... அருமை கவிதை ... 29-Aug-2016 6:57 pm
வாழ்க்கை வாழ்வதற்கே 01-Aug-2016 1:12 am
Bharathi அளித்த படைப்பில் (public) velayutham மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
10-Jul-2014 11:15 am

எனக்கே அறியாமல் என்னுள்
காதல் தீயை விதைத்தாய்..

உன்னை நான் காதலிப்பது தெரிந்தும்
தெரியாதது போல் நடிப்பது ஏனடா...

நீயோ எளிதாக சொல்லிவிட்டாய்
என்னை பற்றி யோசிக்காதே
என்னை தொடர்பு கொள்ளாதே
குறுஞ் செய்தியும் அனுப்பாதே -என்று.

இதயம் அந்த நொடி முதல்
உன்னை மட்டுமே நினைக்குறது ...

உன் நினைவுகள் ஒவ்வொன்றும்
என்னில் அழியாத
காயங்களை ஏற்படுத்துதடா....

அவ்வப்போது என்னோடு பேசி
உன் புன்னகையால் என்னை
மெய் மறக்க செய்வாய்..

மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்
உன் புன்னகையின் சத்தம்
உன் மௌனங்களின் வார்த்தைகள்

தனிமை என்னை கொல்லுதடா
உன் நினைவுகளால் ..

ஒரு முறையாவது சொல்

மேலும்

நல்ல சிந்தனை ....... 17-Jul-2014 10:42 pm
நன்றி தோழரே... 10-Jul-2014 2:35 pm
அருமை 10-Jul-2014 2:26 pm
கருத்திற்கு நன்றி தோழரே.. 10-Jul-2014 12:14 pm
தங்கம் அளித்த எண்ணத்தில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Jul-2014 2:37 pm

தமிழன் சாதித்த கட்டிடக்கலை! உங்கள் கையால் தொடலாம், உருட்டலாம், முழு உருளையையும் பிடிக்கலாம் ஆனால் வெளியே எடுக்க முடியாது. கோவில் என்பது வழிபாட்டிற்கான இடம் மட்டுமல்ல. அது ஒரு கலைக்கூடம்.

இடம்: திருவாசி, திருச்சி அருகில்

மேலும்

அருமையான தகவல் .... 04-Aug-2014 1:54 pm
உண்மைகளை எடுத்து உணர்த்திய நண்பருக்கு நன்றி 08-Jul-2014 10:28 pm
ஆம்! வழிபாட்டு தளங்களில், பல அற்புதங்களும், பிரமிப்பும் மறைதுகிடக்கிறது! ஏன்? புதயல்கல்கூட!... அழிக்காமல், உணர்வோம், அனுபவிப்போம், காப்போம்... 08-Jul-2014 10:23 pm
உண்மை...........அன்றைய மேன்மைகளை அழித்தது அவசரமும் பணமும்..................... 08-Jul-2014 4:44 pm
கி கவியரசன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jul-2014 9:08 am

இரண்டு ரூபாய்
மாத்திரே
இரண்டு ரூபாய்
மாத்திரே

நோய் வந்தவன்
வாங்குவானு
10 ருபாய்னு
ஏன் மாத்திரே
நீ ஏமாத்திரே. ......

முத்திரைய அழிச்சிபுட்டு
புதுசா நீ குத்துற
தினுசா நீ குத்துற

வியாதி போக தேடி
வந்தா
வைத்துல நீ குத்துற
நம்பிக்க வைத்ததுல நீ குத்துற

அத தின்னுபுட்டு எரியுதுடா
ஏழை உடம்பில் சித்திரை
இனி ஏது உடம்பு சித்திரை

கால்வலிக்கு தின்னாக்கா
எகுறுதடா சக்கரை
எறும்பு ஊற சக்கரை

இத எல்லாம் செஞ்சாலும்
வருதா உனக்கு
நித்திர
வருதா உனக்கு நித்திர

தப்பு தப்பு செஞ்சாலும்
எருமை போல நிக்குற
எதுஎதுவோ விக்குற

மேலும்

நல்வரவு 08-Jul-2014 4:05 pm
நன்றி நட்பே 08-Jul-2014 1:09 pm
நன்றி நட்பே 08-Jul-2014 1:09 pm
நன்றி நட்பே 08-Jul-2014 1:09 pm
சுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2014 1:04 pm

தமிழர் அடையாளம்
அனைத்தும் அழிந்து
கந்தல் கடைசியாய்
இருப்பது ஒன்றிரண்டு

அதையும் அழிக்க
இந்தியம் செய்யும்
மாபெரும் வஞ்சனை
சல்லிக்கட்டுக்குத் தடை.

மேலும்

சுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Feb-2014 5:59 pm

விழிகளில் உன் வடிவத்தை
நிற்கவைத்தாய் ...

முத்துக்களாய் உன் சிரிப்பை
உதிர்த்துவிட்டாய் ...

மனதினுள் உன் நினைவுகளை
மிதக்கவிட்டாய் ...

நினைவெல்லாம் உன் அசைவை
விதைத்துவிட்டாய் ...

காணாத விழிகள் காண
மறுத்துவிட்டாய் ...

கடைசியில் உன் முகவரிக்கு
அலையவிட்டாய் ...

- சு. சுடலைமணி.

மேலும்

கருத்திற்கு நன்றிகள் 13-Mar-2014 10:03 am
காதல் வரிகள் அழகுதோழரே! 04-Mar-2014 1:14 pm
கருத்திற்கு நன்றிகள் 28-Feb-2014 6:04 pm
நன்று 28-Feb-2014 6:02 pm
சுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 5:25 pm

முதன் முதலாய்
என் மகன்
பள்ளிக்குப் போகையில்
அறியோனாய் வரவேண்டி
வாழ்த்தி அனுப்பினோம் ...

அடுத்த ஆண்டு
அரசுப்பள்ளி வேண்டாவென்று
ஆங்கிலப் பள்ளியில்
விடுதியின் தங்கலில்
பயில வைத்தோம்...

வெள்ளாமையில் பாதி
அவன் படிப்புக்கும்
இருப்பதில் மீதி
அவன் விடுதிக்கும்
என்றே அனுப்பினோம்...

வறுமையில் நின்றாலும்
அவன் எழுதும்
மடலில் மகிழ்ந்தோம்.
ஆங்கிலம் பேசவும்
அவன் துவங்கிவிட்டான்...

ஒருபக்கம் பெருமை
மறுபக்கம் வெறுமை ...
அவனின் பேச்சு
ஆங்கிலத்தமிழ் மொழியானது ...
இடைவெளியும் மிகுதியானது.

பள்ளி முடித்தான்
நல்ல மதிப்பெண்கள்...
பெரிய கல்லூரி
உயர்ந்த படிப

மேலும்

கருத்திற்கு நன்றிகள். 27-Feb-2014 2:33 pm
கருத்திற்கு நன்றிகள். 27-Feb-2014 2:33 pm
அருமை 14-Feb-2014 5:28 pm
சிறப்பான கவிதை.... 14-Feb-2014 5:26 pm
சுடலைமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Jan-2014 6:01 pm

இயற்கைத் தாயே குடியை கொடுத்து
பலர் குடியை கெடுத்தாய்,

நினை விழந்து குடிக்க வைத்து
பல உறவைக் கெடுத்தாய்,
நிலை மறந்தே குடிக்க வைத்து
சிலர் உயிரைக் கொன்றாய்,

பொருள் விற்றே குடிக்க வைத்து
பெண்டீர் நல்வாழ்வைக் கெடுத்தாய்,
கடன் வாங்கி குடிக்க வைத்து
இளவிதவை பட்டத்தைக் கொடுத்தாய்,

இயற்கைத் தாயே குடியை கொடுத்து
பலர் குடியை கெடுத்தாய்,

- சு.சுடலைமணி

மேலும்

சரோ அவர்களே, சரியாக அலசி ஆராய வேண்டுகின்றேன், நான் அந்த சொற்களை நான் அங்கு பதியவில்லை மற்றும் நீக்கவும் இல்லை. நம்பிக்கையில்லை என்றால் பதிவு செய்த நேரம் மற்றும் பின்னூட்ட நேரம் சரி பார்க்கவும்.தாங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் என்று எண்ணுகின்றேன். 28-Jan-2014 3:23 pm
முருகன் தமிழ் கடவுள் என்ற வாசகம் உங்கள் கவிதையிலிருந்து நீக்கம் செய்திருக்கிறீர்கள் ! அதனால்தான் நான் உங்களிடம் றைவனுக்கும் இயற்கைக்கும் விளக்கம் கேட்டேன் . நீங்கள் பொஇசொல்ல்வது நாலாதல்ல .ok 28-Jan-2014 2:47 pm
எங்கு, எதை மாற்றினேன் ? எதற்காக ? பொருள் படவில்லை... எதையுமே மாற்றவில்லை... எப்படி மாற்ற முடியும். அதற்குத் தேவை ஏதும் இல்லை தோழியே... 28-Jan-2014 2:04 pm
நண்பா ! நம் கருத்துரை தொடங்கிய பின்னால் கவிதையில் திருத்தம் செய்திருக்கிறீர் ! சரிதானே ! முருகன் தமிழ் கடவுள் என்ற வாக்கியம் மாற்றப்பட்டுள்ளது ! சர்ச்சையின் முடிவில் மாற்றவெண்டியதை சர்ச்சை நடக்கும்போது மாற்றினால் எப்படி சர்ச்சை தொடருவது??? நன்றி தோழா ! உங்கள் திருத்தம் முரண்பாட்டை உனர்ந்ததுக்கு சமம் . 28-Jan-2014 12:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (138)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
user photo

வி.பூபாலன்

நாமக்கல்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
சித்ராதேவி

சித்ராதேவி

விருத்தாச்சலம்

இவர் பின்தொடர்பவர்கள் (139)

sa. ezhumalai

sa. ezhumalai

chennai
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (139)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
Alagar samy.M

Alagar samy.M

திருநெல்வேலி
செல்வா பாரதி

செல்வா பாரதி

விளாத்திகுளம்(பணி-சென்னை)
மேலே