திருமதி கலைஞானகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  திருமதி கலைஞானகுமார்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  29-Jan-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Jul-2012
பார்த்தவர்கள்:  1060
புள்ளி:  206

என் படைப்புகள்
திருமதி கலைஞானகுமார் செய்திகள்
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பொள்ளாச்சி அபி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
04-May-2015 8:24 am

பாக்களிலிலே ரதியாகிப்
பிறந்தவளே மகளே...
பூக்களெலாம் தோற்கடித்துப்
பூத்தவளே மகளே...!

................... நீ ...................

பூ விரலால் பூமி தொட்டுத்
தவழ்ந்து வரும் போதும் – உன்
பொன் முகத்தால் நீ மலர்ந்து
புன்னகைக்கும் போதும்...

அன்பென்ற ஆறு பூத்து
அள்ளுதடி வெள்ளம் – என்
ஐம்புலனும் ஈறு தாண்டித்
தின்னுதடி வெல்லம் !
==
கீச்சு மொழிப் பேச்செடுத்துக்
கிறங்க வைக்கும் போதும்...
ஈச்சம் பழம் கொட்டுவதாய்
எச்சில் சொட்டும் போதும்...

மின்மினிகள் நெஞ்சுக்குள்ளே
நிரந்தரமாய் தங்கும் – என்
கண்மணியாள் கதைப் படித்தே
காலத்தினைத் தள்ளும் !
==
பஞ்சு விரல் நெஞ்சில் ஏறிக்

மேலும்

அருமை 07-Mar-2018 4:40 pm
அருமை 😊👍 24-Nov-2017 8:07 pm
தொடர்ந்து எழுதுங்கள் இலக்கியப் பயனத்தில் உச்சியைத் தொடுங்கள்... வாழ்த்துக்கள் நண்பரே.. அருமையான வரிகள் அல்ல வைரங்கள்.. 24-Nov-2017 6:04 pm
மிக அருமை தோழரே! 04-Apr-2016 8:54 am

கையைக் கட்டி
வாயைப் பொத்தி
கழுத்தை நெரித்தும்...
வல்லுறவுக்காய்
குறி நிமிர்த்தும்
வல்லூறுகள்....

செத்து மடியும்
தேகத்தை தேய்த்து
மோகத்தைப் பீய்ச்சி
முகர்ந்து மொய்க்கும்
விந்துக் கழிவுகள்....!

தங்கையைப் புணர்ந்து
வீடு கடக்கும்
புலாலுண்ணிகள்....

கனவுகளைச் சுமந்து
தெரு கடக்கும் தேவதைகளை
தினவுக்கு இரையாக்கும்
காட்டேரிகள்....

கழிவறை போன்றொரு
கருவறையில்....
கழிவொன்று. கசியவிட்ட
காமக் கழிவுகள்...!

யோனி வழி வெளிவந்த
மனித மிருகங்கள்....!

பெண்ணினமே....
கண்ணியமான
ஆணினமே....

சட்டம்
ஓர் இருட்டறை....
நீ வா
வெளிச்சத்திற்கு....!

தெருவுக்கு வா.

மேலும்

வெறியும் அடங்காது சிவா ! 20-May-2015 8:00 am
உண்மை தான் சார்....ரொம்ப அசிங்கமான ஒரு யுகம் நம்மோடு சுழன்றுக் கொண்டிருப்பது ! 20-May-2015 8:00 am
யாழ்பாணம் புங்குடுதீவில் நடந்த வன்புணர்வு படுகொலைப் பற்றி அறிவீர்களா ? 20-May-2015 7:58 am
பலரும் பார்க்க இவன்களையெல்லாம் வெட்ட வெளியில் வைத்து கொத்திக் கிழித்து கூறு போட்டுக் கொன்றாலும் பழி தீராது... 20-May-2015 1:40 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த போட்டியை (public) நெல்லை ஏஎஸ்மணி மற்றும் 6 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

வணக்கம் தோழர்களே....

மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 04-Feb-2015 9:35 am
அவ்வாறே இருக்கின்றன..ஏதேனும் பிழைகள் இருப்பின் தனிவிடுகை அனுப்புங்கள் தோழரே ! 31-Jan-2015 9:59 am
இன்று வெற்றிப்பெற்றோருக்கும்,நாளை வெற்றி பெற காத்திருப்போருக்கும் வாழ்த்துக்கள்... 31-Jan-2015 9:55 am
வணக்கம் தோழர்களே.... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.... இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் ! வெண்பா முறையில் ஓர் அழகான ஆக்கத்தினை எழுதி போட்டியில் பங்குபற்றிய இவரின் படைப்பில்(227963) சிற்சில இலக்கண மீறல்களால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டாலும் இவரது முயற்சியையும் ஆக்கதிறனையும் பாராட்டி “சிறப்பு ஆறுதல் பரிசு” வழங்குகின்றோம்..... அத்துடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களால் இவர் பாராடப்பட்டிருக்கிறார் என்பதுடன் “ஈரோடு தமிழன்பன்” விருதையும் பெறுகிறார் என்ற மிக அருமையான செய்தியினையும் பெருமையுடன் பகிர்கின்றோம்.... அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான =============திருமதி.“சியாமளா ராஜசேகர்” ============= சியாமளா அம்மாவிற்கு எம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும் மேலும் “சாதி ஒழி! மதம் அழி! சாதி!” என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான ஒரு படைப்பை(227301) எழுதி பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் மனம் கவர்ந்த ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவதோடு, யுகபாரதி விருதினையும் பெறுகிறார் சிரேஷ்ட படைப்பாளி =============திருவாளர். ஜின்னா அவர்கள் ! ============= திரு.ஜின்னா அவர்களை பாராட்டி கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம் ! இனி..மீதமிருப்பத்து....பொங்கல் கவிதைப் போட்டியின் ஜாம்பவான்களின் பட்டியல்.....இதோ ஒவ்வொரு தலைப்பிலும் பணப் பரிசுபெறும் படைப்பாளிகள்....! ============================ சாதி ஒழி! மதம் அழி! சாதி! • முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய் ============================ இப்படி நாம் காதலிப்போம் • முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498 ============================ நாளைய தமிழும் தமிழரும் • முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய் ============================ பரிசுபெறும் படைபாளிகள் அனைவரையும் பரிசளித்து, பாராட்டி கெளரவிக்கின்றோம். தொடர்ந்தும் மிக நல்ல படைப்புகளை எழுதி தான் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் ! இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், அனுசரணையாளர்கள் இன்னும் பல நன்றிக்குரியவர்களின் பட்டியலோடு நிறைவறிக்கையினை சுமந்துக் கொண்டு வருகின்றேன் மீண்டும் மாலையில்...! வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள்....களிப்புருங்கள் ! 31-Jan-2015 9:43 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த படைப்பை (public) பொள்ளாச்சி அபி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
13-Sep-2014 10:55 am

மகளென உறவொன்றுப் பெற்று – யான்
மகிழ்ச்சியின் உச்சத்தை தொட்டேன் !
அகமெல்லாம் ஆயிரம் கோடி – மின்னல்
அடிப்பதை உணர்வால் பார்க்கிறேன் !

பூக்களில் என்ன அழகிருக்கு ? – சொற்
பாக்களில் என்னடா அழகிருக்கு ?
தேவதை எந்தன் மடியிருக்க – அந்த
தேனிலும் எங்கடா இனிப்பிருக்கு ?

அகத்தின் ஆசையைப் பெருக்கி – இந்த
ஜகத்தினில் திமிராய் நடக்கிறேன் !
முகத்தினில் மீசையை முறுக்கி – நான்
சுகத்தினில் சுழன்றுத் துடிக்கிறேன் !

சொற்களைத் தேடி அலைகிறேன்- புதுச்
சொர்க்கத்தை நேரினில் காண்கிறேன் !
கற்பனைத் தாண்டிய அழகினில் – ஒரு
கவிதையை எழுதிப் பறக்கிறேன் !

தமிழன் பாரதி நினைவுதினம்- இவன்
தரணியில்

மேலும்

வாழ்த்துக்கள் அண்ணா......உலகின் பெருவலி தாங்கி – மகளெனும் உறவினை தந்த என்தேவி உடலுடன் உணர்வுள்ள வரைக்கும் – என் உயிரினில் நீ சமப்பாதி ! அருமையான வரிகள் அண்ணா...! 07-Oct-2014 1:15 pm
எங்கையோ பார்த்த முகமா இருக்கே....ஹஹஹாஹ் ! ப்ரியா நலமா ? 03-Oct-2014 11:48 pm
மிக்க நன்றி தோழரே ! 03-Oct-2014 11:47 pm
மிக்க நன்றி அஞ்சு....! 03-Oct-2014 11:47 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (121)

நெல்லை ஏஎஸ்மணி

நெல்லை ஏஎஸ்மணி

திருநெல்வேலி
நிலா

நிலா

சென்னை
கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
user photo

அழகர்சாமி சுப்ரமணியன் (அ.சு )

சிவகங்கை -இராமலிங்கபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (121)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா
Ramani

Ramani

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (121)

நானஅதிபன்

நானஅதிபன்

தஞ்சாவூர்
M . Nagarajan

M . Nagarajan

vallioor
மேலே