கிருத்திவாசன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கிருத்திவாசன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 19-May-1966 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 31-Jan-2014 |
பார்த்தவர்கள் | : 74 |
புள்ளி | : 2 |
தானங்கள் பலவகை
என்றாலும்
தன்நலம் அற்ற தலைமுடி
தானம் புதியதுவே .!
பெண்ணினம் என்பதில்
பெருமை கொண்டேன்
இன்று
என்னினம் செய்த தானத்தினால் .
(பெண்கள் கிறிஸ்துவ கல்லூரி மாணவிகள் 200 பேர் புற்றுநோயால் பதிக்கப்பட்ட பெண்களுக்கு விக் செய்வதற்காக தங்கள் தலைமுடியை தானம் செய்துள்ளனர்)
இன்று நான் பிறந்தேன்
ஊரே உறங்கும் போதும் வைகறை விடியல் நோக்கி
விழிகள் உறங்கா நிலை கொண்டன.
மனைவி குழந்தைகளின் வாழ்த்தும்
தோழர்கள் கைபேசி அழைப்பும் எதிர் நோக்கி
உணர்வு தூங்க மறுத்தது.
புதிய துணிகள் அணிய உள்ளம் விறுவிறுத்தது.
எழுந்து தாகம் தணித்துப் பின் முந்தைய நாளின்
செய்தித் தாள் வாசிக்கையில் ஏழை நோயாளிக் குழந்தை விளம்பரம்
உதவி வேண்டி மனதை அறுத்தது.
கை தானே மடிக்கணினியைத் தட்டிப் பணப்பரிமாற்றம் செய்தது.
கணினி மூடிய மறு நொடி கண் மூடி உறக்கம் நிறைந்தது.
இன்று நான் மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்.
என்றென்றும்
கல்யாணிமணாளன்
இனிய தோழமைகளே ....
"மண் பயனுற வேண்டும்" குடும்பத்தின் மாலை வணக்கம் .அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் .
ஏற்கனவே எங்கள் கட்டுரை , எண்ணம் பதிவின் படி மிகுந்த மகிழ்ச்சியோடு இங்கே கவிதை போட்டியை அறிவிக்கிறோம் .
இந்த போட்டிக்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும் . உங்கள் பேராதரவு என்பது நிச்சயம் போட்டியில் நீங்கள் பங்கு பெறுதலே .நீங்கள் எழுதும் எழுத்துக்கள் இந்த மண்ணை பயன் பெற செய்ய வேண்டும் . நிச்சயம் செய்யும் . ஆகையால் அனைவரும் வாருங்கள் . எழுதுங்கள் .உங்கள் எழுத்து தளம் மற்றும் வெளி நட்பு வட்டத்துக்கும் தெரிவியுங்கள் .காரணம் மண் பயனுற வேண்டும் .
போட்டி தகவல்கள் .
1. மொத்தம் மூன்