Anbudan anuruli - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Anbudan anuruli
இடம்:  Tamilnadu
பிறந்த தேதி :  26-Jan-1996
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  14-Jul-2020
பார்த்தவர்கள்:  3
புள்ளி:  0

என்னைப் பற்றி...

என் அழகான நேரத்தின் பொழுதுபோக்கு கவிதை எழுதுவது...

என் படைப்புகள்
Anbudan anuruli செய்திகள்
Anbudan anuruli - எண்ணம் (public)
14-Jul-2020 1:17 pm

"ஆசையோடு உன் வரவை எண்ணி"
   
    முகம் அறியாமலும்
    முகவரி தெரியாமலும்..
கற்பனையில் என் காதல்... 

"உன்னை பார்த்த கணம் 
               என் 
      அச்சம் மடம் நாணம் 
அனைத்தும் மறந்து போவேனடா!"

 "உனது கொஞ்சல் பார்வையில்    
                நான் 
பேச்சிழந்து போவேனடா!"

 "செல்ல தீண்டல்களில்    
           உன்னை 
கெஞ்ச வைத்து மிஞ்ச தான்
        வைப்பேனடா!

"என் அழகான முரடனே    
         உன் அதிகார மிரட்டலால் நான் மிரண்டுபோவேனடா!

"எனை அன்பாய் 
             காதலாய்         
             செல்லமாய் 
 காலமெல்லாம் ஆட்கொள்ள
       எப்போது வருவாயடா!

மேலும்

Anbudan anuruli - Anbudan anuruli அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2020 1:08 pm

       "வற்றாத நீரூற்றாய்  நம்                               காதல்"





 என் அன்பான முரடனே எனை  காலமெல்லாம் உன்னோடு  ஆட்கொள்ள      
                 எப்போது வருவாயடா... 


 காதலின் கட்டுப்பாடுகளை மறந்து மூச்சற்று நிற்கிறேன் உன்னாலே இப்போது இனி     
                 எப்போதும் .. 

 எனக்காக என்னோடு   நீ போதும்  நாமாக     
                   எப்போதும்.. 

உனை விட்டு அகலாமல் உன் கைக்குள்ளே உனது கட்டு பாட்டுக்குள் நான் வேண்டும் 
                    எப்போதும்... 

 ஆசையோடு உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 
                    எப்போதும்...

 உனை காணும் நேரம் அத்தனையும் நான் மறந்து வெட்கத்தில் தலை குனிந்து பேச்சிழந்து போகும் நேரம்
                     எப்போது....


 இலக்கணமாய் நானும்.. 
 இலக்கியமாய் நீயும்...
 பிழையே இல்லாத செந்தமிழாய் 
 பிரிக்க முடியாத தேன் தமிழாய் நாம்... 

நாவில் ருசித்து நாசி எங்கும் நுழைந்து 
உன் மடியினில் நான் கிடக்க 
மறுமொழி ஏதும் என்னிடம் இல்லை...

 பேச்சற்ற பேதையாய்  எண்ணிலடங்கா இனிய ஏகாந்தமாய் நானோ ... 

 எல்லாம் உன்னால்  தானடா.. 
 இப்படியும் நான் இல்லை
 இத்தனை காலமாய்....

 என்னையும் மறந்து நித்தமும் 
உன் நினைவில் உன்னை நினைத்து...
 கவிதை கிறுக்கிய 
எனக்கு  மொழியும்  மறந்து போனதடா... 
என் பேனாவும் பாதியில் நிற்கிறதடா... 
நீ வந்து முழுமையடைய செய்வாய்    
              எப்போது ....
 நம் காதல் வற்றாத நீரோடை போல முடிவே இல்லாத அழகான வாழ்க்கை  வாழ     
         வருவாய் 
          எப்போது.... 
   

மேலும்

Anbudan anuruli - எண்ணம் (public)
14-Jul-2020 1:08 pm

       "வற்றாத நீரூற்றாய்  நம்                               காதல்"





 என் அன்பான முரடனே எனை  காலமெல்லாம் உன்னோடு  ஆட்கொள்ள      
                 எப்போது வருவாயடா... 


 காதலின் கட்டுப்பாடுகளை மறந்து மூச்சற்று நிற்கிறேன் உன்னாலே இப்போது இனி     
                 எப்போதும் .. 

 எனக்காக என்னோடு   நீ போதும்  நாமாக     
                   எப்போதும்.. 

உனை விட்டு அகலாமல் உன் கைக்குள்ளே உனது கட்டு பாட்டுக்குள் நான் வேண்டும் 
                    எப்போதும்... 

 ஆசையோடு உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் 
                    எப்போதும்...

 உனை காணும் நேரம் அத்தனையும் நான் மறந்து வெட்கத்தில் தலை குனிந்து பேச்சிழந்து போகும் நேரம்
                     எப்போது....


 இலக்கணமாய் நானும்.. 
 இலக்கியமாய் நீயும்...
 பிழையே இல்லாத செந்தமிழாய் 
 பிரிக்க முடியாத தேன் தமிழாய் நாம்... 

நாவில் ருசித்து நாசி எங்கும் நுழைந்து 
உன் மடியினில் நான் கிடக்க 
மறுமொழி ஏதும் என்னிடம் இல்லை...

 பேச்சற்ற பேதையாய்  எண்ணிலடங்கா இனிய ஏகாந்தமாய் நானோ ... 

 எல்லாம் உன்னால்  தானடா.. 
 இப்படியும் நான் இல்லை
 இத்தனை காலமாய்....

 என்னையும் மறந்து நித்தமும் 
உன் நினைவில் உன்னை நினைத்து...
 கவிதை கிறுக்கிய 
எனக்கு  மொழியும்  மறந்து போனதடா... 
என் பேனாவும் பாதியில் நிற்கிறதடா... 
நீ வந்து முழுமையடைய செய்வாய்    
              எப்போது ....
 நம் காதல் வற்றாத நீரோடை போல முடிவே இல்லாத அழகான வாழ்க்கை  வாழ     
         வருவாய் 
          எப்போது.... 
   

மேலும்

கருத்துகள்

மேலே