Athithya - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Athithya |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Jun-2019 |
பார்த்தவர்கள் | : 56 |
புள்ளி | : 5 |
கணவினில் தெளித்த அமுதடி நீ
காற்றினில் உதித்த கீதமடி நீ
தெளிந்த எனை மதி மயக்கி
கடத்தி சென்றவளும் நீயடி
மயங்கி கிடக்கிறேன்
கரிசனம் காட்டாயோ
என் காரியத்தரசியே....
புலராத பொழுதில்
இமைக்கின்ற விண்மீன்களாய்
துளிர் விட்டதோர் காதல்..
நத்தனம் ஆடும்
நங்கை அவள் கூந்தளுடன்
ஆயிரம் மொழி பேசி
நளினத்துடன் நாணமும்
சேர வைத்துவிட்ட
காவியம் தான் என்ன?
காலம் பல மாறினாலும்....
சீற்றம் கொண்ட சொல்லின்
தாக்கம் இன்னும் தீரவில்லை..
உன் விழி இரண்டில் அணல் வீச
நீ கொட்டும் கோபத் தனலால்
மூர்ச்சையாகி நின்றேனடி....
வஞ்சனை செய்து நிந்தித்ததாலோ
உன் விழி காணமாட்டாமல்
தரை சாய்த்து வீழ்ந்தேனடி...
எனை மன்னிப்பாயா என் கண்மணியே?
எட்டுத்திக்கும் கவிபாட
காட்சிப் பிழையென
வர்ணம் பூசி..
வேள்வியில் சுட்டெரித்த
சூரியனாய்
சற்றும் சளைக்காமல்
சாகசம் புறிய
வந்தவனை
உன் காந்தக் கண்களால்
மூர்ச்சையாகி
விழ வைத்தாயடி
காரியத்தரசியே...