Chandrasekaran Subramaniam - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Chandrasekaran Subramaniam |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 13-Jan-2013 |
பார்த்தவர்கள் | : 141 |
புள்ளி | : 9 |
அவள்
மண்ணில் நடக்கும்
தேவதை
திசைகள் அற்று
கிடக்கும் என் பூமிக்கு
திசை காட்டும் திசைக்கருவி
விண்ணுக்கும் மண்ணுக்கும்
உள்ள தூரத்தை
அவள் நினைவுகளால் நிரப்பும்
காதல் விஞ்ஞானி
வான்துளி வீழ்ந்து மடைபெருகுவதை
அயிந்துவயது ஆண்பிள்ளை காணலியே !
கொசுவணம் பின் சொருகி,முன் மூடும்
மத்தளநடை பெண்பிள்ளை காணலியே !
சுத்தம் எனச் சொல்லி சக்கையைத் தின்று
உரல்போல் பெருக்கா வேய்தோள் காணலியே !
நீரைக் காசாக்கி, காசை நீராக்கி பேராசை
மனிதன் யாக்கைக் காக்க ஞானம் கெட்டு
மண்ணை மாசாக்குதல் யாது முறை?
மக்களாட்சி மலர்ந்து பாலாறு தேனாறு
ஓடவேண்டா. நாரை வாழ, தேரை ஓட
புதுப்புனல் ஆறுஒன்றை ஓட வைக்க முடியுமா?
இலைக்கும் கைக்கும் போட்டு பயன் இல்லையாக
வாழ்வு கொஞ்சம் மலர தாமரைமலருக்காவது
வாக்கு அளித்து அவர்தம் வேடிக்கை பார்க்கும்
அளவு அரசியியலில் இறுதிஞானம் வந்ததடா
அவர் இருப்
குளிர்ந்த நீரைக் கொதிக்க வைத்துக் குடிக்கும்
ஆறறிவு மனிதா, அழுக்குத் தண்ணீரில்
ஆக்ஸ்சிஜன்எடுத்து அழகாய்வாழும் அயிரை
மீனுக்கு என்றும் நீ பெரியவன் இல்லை.
குட்டிவீட்டைக் கட்டிமுடிக்க எட்டுமாதம் எட்டு
பேர்வேலை பார்த்தும் பட்டி பார்க்காததால்
சுட்டிக்காட்ட முடியா நேர்த்தியும் பூர்த்தியும் அந்த
சிட்டுக்குருவியின் கூட்டுக்கு நிகராகுமோ ?
சோழா...... சோழா அன்று நீ விதைத்த
செந்நெல்லும் நீரின்றிப் பாழாய் !
சோழா...... சோழா அன்று நீ உரைத்த
வென்னாற்றுத தமிழ்வீரம் பாழாய் !
சோழா........ சோழா அன்று நீ வார்த்த
செப்புச்சிலை மெருகின்றிப் பாழாய் !
சோழா......... சோழா அன்று நீ வடித்த
கட்டிடக்கலை வளர்ப்பின்றி பாழாய் !
சோழா....... சோழா அன்று நீ வளர்த்த
தமிழ்மொழி பேசதிறன் இன்று பாழாய்!
சோழா...... சோழா அன்று நீ வணங்கிய
காவிரி தடுத்து விளைவளம் பாழாய் !
சோழா..........சோழா அன்று நீ தொடுத்த
கடல்போர் இன்றுபுலம் பெயரப் பாழாய்!
சோழா.......... சோழா அன்று நீ எடுத்த
உடல்நலக் காப்புமுறை இன்று பாழாய் !
சோழா............சோழா அன்
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
எத்தனை குப்பைதான் சேரட்டுமே ..
தன் கழிவுனாலே தான் பொது
அழிவு என்பதை
பகுத்தறிவு மனிதன் யோசிக்கட்டுமே
வேதியப்பொருள்கள் கலந்து விட்டால்
மருந்துக் கழிவுகள் கலந்துவிட்டால்
கடவுளும் உன்னைக்
கைதூக்க வர மாட்டான்
கலி முடிவை அவன்
கடை நெகிழிப்பையில்
தொடங்கிவிட்டான்
தாகம் என்பதை மறந்துவிடு
தண்ணீர் இல்லை இறந்துவிடு
ஆக்சிசன் என்பதை அளந்து எடு
அடுத்த வீட்டினில் கடன் வாங்கு .....
படித்த முட்டாள் பலகோடி இங்கு
குடிக்கும் ஞானி பலகோடி
துடிக்கின்ற பறவைக்கு பழம் எங்கே ?
வெடிக்கும் நிலத்துக்கு நீர் எங்கே ?
இருக்கிற வரைக்கும் வாழ்ந்துவிட்டு
பொங்கட்டும்... பொங்கட்டும்..... தலைக் காவிரி பொங்கட்டும்...
காவிரி பொங்க மறுத்தால் கர்நாடக அரசை உச்ச நீதி மன்றம்
பொங்கட்டும்..அதுவரை இங்கு பச்சைத்தமிழன் வயிறு காயட்டும்..
பொங்கட்டும்.. காவிரி விவசாய பூமியெல்லாம் வெயிலில் பொங்கி
எலும்பும் தோலுமாய் வெடித்துக் காய்ந்து முதுமை ரேகை தங்கட்டும்.
உழவனுக்கு உயிர் வாழும் உரிமையாவது இந்த உலகம் தரட்டும்....
பொங்கட்டும்.. வெளிச்சம் பொங்கட்டும்.. மின்சாரம் இல்லா ஊரில்
பகலவன் வெளிச்சாமாவது தங்கட்டும்..இங்கே இயந்திரங்கள் ஓடாமல்
வெறும் இரும்பைப் பார்த்தே தொழிலாளர் இதயம்,இரத்தம் ஓடாமல் ஓடட்டும்..
சிறு தொழிலாளர், வேளாளர்,குறுந்தொழில் முனைவோர் கண்