Kalai Selvi - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : Kalai Selvi |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Apr-2013 |
பார்த்தவர்கள் | : 228 |
புள்ளி | : 31 |
அமில வார்த்தைகள் கொட்டினாய்
ஆடிப்போய் விட்டது மனம் தான்
வழிந்தோடுவது கண்ணீர்த்துளிகள் அல்ல
வேதனை வெந்நீர்த் துளிகள்
குள்ள நரி தோற்று போகும் - உன்
நய வஞ்சகத்தின் முன்
பள்ளித்தலம் வரத்தான் கைப்பற்றினேன் - என்னை
எள்ளி நகையாடி நோய் சீராட்ட
வைத்து விட்டாயே !
அள்ளி நீ தந்து விடவே வேண்டாம் - அன்பை
கிள்ளிக் கொடுத்தாளே - நான் இருப்பேன்
கொள்ளிக்காலம் வரை - நன்றியுடன்
வாய் துடுக்குக்காரியே
வஞ்சகமில்லா மனசுக்காரி
வீரத்தமிழச்சி
வீராப்பு செயலழகி
எள்ளுப்பூ நாசிக்காரி
எறும்பு சுறுசுறுப்புகாரி
என் அன்பு நேசக்காரி
எந்நாளும் நீ பாசக்காரி
வகை வகையாய் கதை சொல்வாய்
வருத்தங்களை தீர்த்து வைப்பாய்
வாடிய போது நீர் தெளித்தாய்
வாச மலர் பூக்க
வாக்குகள் பல திருத்தி
வழி நடத்தினாய் என்னை
என் லண்டன் சுகவாசியே !
குரங்கு பையா - உன்
கையில் காமிராவா?
குடைந்து குடைந்து
எதைத் தேடுகிறாய் ?
குருவை மிஞ்சிய சிஷ்யன் - நீ
அஞ்சனை மைந்தனின் வழித்தோன்றல்
ஆனைமுகனின் உற்றவனா ?
அழகழகாய் காட்சிப்படுத்து பதிவுகளை
ஆடிபோகட்டும் உன் குரு பதிவுகளை கண்டு !
பூக்கள் விடும் தூது வாசனை
விழிகள் விடும் தூது பார்வை
மேகம் விடும் தூது மழை
குழந்தை விடும் தூது அழுகை
இறைவன் விடும் தூது சோதனை