இராகலையரசி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராகலையரசி
இடம்:  கூடலூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Sep-2021
பார்த்தவர்கள்:  4
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை, ஹைக்கூrn,சிறுகதைகள"எழுதுவது,..இலக்கியத்தில் ஆர்வம்.ஆசிரியர்.

என் படைப்புகள்
இராகலையரசி செய்திகள்
இராகலையரசி - எண்ணம் (public)
30-Sep-2021 7:20 am

       கவிதை


ரத்த வாடை

நனைந்து போன பஞ்சுகள்

ஈரத்தை வாடை பிடிக்க

நெளிகிறது உடல்.


குருதி கொடை அளித்து

உயிர் பரப்பை பெருக்குகிறது

ரத்தவாடை.


அடிவயிறு இலக்கம் கொடுக்க

அயர்ந்து போன தசைகள்

ரத்தக் கசிவினை நிறுத்தாது

தொடர்கிறது பணியை!


கவனம் சிதறிய நேரத்தில்

ஆடையை நனைத்து விட்டு

ஆயாசமாய் இருந்து விடுகிறது

ரத்தவாடை


பெரும்பாடு தான் இந்த

பெரும்பாடு − பாடு

உரத்து சொல்கிறது

ரத்தவாடை.


பெருகும் ஊரணி

ஊர் வளர்த்து விட

பெருகும் ரத்தபெருக்கு

உயிர் வளர்த்து விடுகிறது.


யாரேனும் பார்க்கா நேரங்களில்

புறமுதுகு பார்க்க எத்தனிக்கும்

பெண்களின் உளவியலில்

வீசுகிறது ரத்தவாடை.


இதயம் நனைத்த கருணை

அன்பை பொழிகிறது.

உடலை நனைத்த ரத்தம்

ரத்தவாடை தருகிறது.


விளக்கி பேசா மௌனமாய்

எழுத்துகளில் அடைய விரும்பி

மனதை சொல்லி விட்டது

ரத்தவாடை


அடர் நிறத்து ஆடைகளில்

அழகாய் மறைத்துக் கொண்டு

 பேசும் பெண்களின்

ரத்தவாடை வலிமிகுந்தது.


உடலை கடந்து மற்றவர்

பார்த்து மோப்பம்

பிடித்து விட்டால்

கூசி நாணி நெளித்து

விக்கித்து போகிறாள். 


எதையும் கண்டு கொள்ளாது

ரத்த பெருக்கை

இனிதே செய்து முடித்து

ரத்தசோகை பரிசாக்கியது

ரத்தவாடை

மேலும்

கருத்துகள்

மேலே