Mangani santosh - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Mangani santosh |
இடம் | : bangalore |
பிறந்த தேதி | : 24-Jun-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 29-Aug-2019 |
பார்த்தவர்கள் | : 73 |
புள்ளி | : 7 |
ஒரு நாள்
உலகம் குறுகியே
சிறியதானது….
இயற்கை அழகினில்
இமைகள் மயங்கியே
வலிமையானது….
சாதிகள் ஒன்றில்லா
சமத்துவ சமுதாயம்
உருவானது…..
சலங்கைகள் கட்டி ஆண்ட
அரசியல் ஆட்சிகள்
முடிவானது….
ஆன்ட்ராய்டு போனுகள்
அலுப்பைத் தந்தே
அழிந்து போனது….
அன்போடு சேர்ந்து பேச
அன்று முதல் நேரங்கள்
அதிகமானது…
ஊழலும் லஞ்சமும்
ஓடி ஒழிந்த தடமின்றி
மறைந்து போனது….
நேர்மையும் கருணையும்
ஒவ்வொரு மனதிலும்
குடி புகுந்தது….
பாலியல் தொல்லையில்
பயந்து வாழ்ந்த நாட்களெல்லாம்
தொலைந்து போனது….
பாசமும் நேசமும்
பன்மடங்குப் பெருகிப் போய்
பாதுகாப்பாய் காத்து நின்றது….
விவசாய விளைநிலங்கள்
பசுமை தந்தே பி
உறங்காத உள்ளமே உனக்காக கூறுகிறேன்
விழி மீது கோபமா இல்லை இமை மூட சோகமா…?
நேற்று இழந்ததையெல்லாம் இன்றே மறந்துவிடு
நாளை புதிதாய் நீ பிறந்திடலாம்……………
ஏமாற்றத்தை எண்ணி ஏக்கம் கொள்ளாதே
அதுதான் உன்னை ஏற்றிவிடும்
ஏணிப்படி என எண்ணிக்கொள்…..
தோல்வியைக் கண்டு துவண்டு போகாதே
அதுதான் உன்னை உயரத் தூண்டும்
தூண்டுகோள் என ஏற்றுக்கொள்………….
தூக்கி எறிந்து விடு உன் துயரங்களை
துள்ளி எழுந்து வா தொடலாம் சிகரங்களை…………….
உன்னை உன்னால் மாற்ற முடியுமெனில்
உலகில் எவரால் உன்னை வீழ்த்த முடியும்…..!
வீழ்ந்தோமே என விரக்தி அடையாதே….
விழத் தொடங்கியதால் தான்
எழக் கற்றுக்கொண்டிருக்கிறாய்……….
காயமில்லா நெஞ்சங
குழந்தை கவிதை| கர்ப்பிணி தாயின் கவிதை
என் உயிர் விதைக்காக
முதல் மாதத்தில்,
மூச்சு வாங்க வைத்தாய்
உன் உருவாக்கத்தின் அறிகுறியை
உமட்டலாக…!
இரண்டாவது மாதத்தில்..,
என் இதயத் துடிப்பைப் பகிர்ந்து
தொப்புள்கொடி விதையாய் துளிர்த்தாய்
தொட்டுப் பார்க்கும் ஆசை விதைத்தாய்..,
மூன்றாவது மாதத்தில்,
முற்றுப்புள்ளி வைத்தாய்
மசக்கையின் மயக்கத்திற்கு,
முகம் மலர வைத்தாய்
மழலை உன் வருகைக்கு..,
நான்காவது மாதத்தில்,
நான் உணரத் துடித்தாய்
நதிநீரின் சிதறலாய்,
நள்ளிரவு இடிகளாய்..,
நட்சத்திர மிளிரலாய்..,
ஐந்தாவது மாதத்தில்,
அரும்புகளின் ஆட்டமாய்,
அருவிகளின் ஓட்டமாய்,
அன்னை மடி அரங்
சாதிக்கப் பிறந்தோம்
சாதிக்காய் பிறக்கவில்லை
மனிதா…!
பிறந்தவுடன் அமிர்தமெனும்
தாய்ப்பால் உண்டாய்….
பிரிவு என்ற சாதிப்பாலை
அருந்தாதிருந்தாதிருந்தாய்…..
வளர்ந்துவரும் நாட்களிலே
வன்மம் கண்டாய்…
மேல்சாதி கீழ்சாதி
கர்வம் கொண்டாய்….
சாதியாய் வீதியைப்
பிரித்து வைத்தாய்…
மக்கள் வேலியாய்
சாதியையே காவல் வைத்தாய்….
கோழையாய் வாழ்வதற்கே
சாதிக் கொடி பிடித்தாய்…
கொத்தும் பாம்பின் விஷத்தைவிட
கொடிய விஷம் பரப்பி வைத்தாய்….
மதத்திற்காய் சண்டையிட்டு
மனிதரைப் பிரித்து வைத்தாய்….
சாதிக்காய் சண்டையிட்டு
சாலைகளை ஒதுக்கி வைத்தாய்….
தெருவுக்கோர் சிலை வைத்து
சாதனைத் தலைவர்களை
சாதியத
பிடிக்கும்….!
ஆந்தி மாலை வண்ணத்தை
அரைத்துப் பூசி செய்த
முகம் என்பார்
அது பிடிக்கும்….
நித்தம் நித்தம்
நிலவைக் காட்டி
மிண்ணும் ஒளி
பெண்மை என்பார்
அது பிடிக்கும்…
கண்கள் இரண்டும்
கவிதை பேசுதென்பார்,
இமைகள் இரண்டும்
வீணை மீட்டுதென்பார்
அது பிடிக்கும்..
குயில் போன்ற குரலால்
கரைந்த கற்கண்டாய்
உறைந்தேன் என்பார்,
சிதறிய பனிமழை
சிரிப்பினில் பார்த்தேன் என்பார்
அது பிடிக்கும்…
நீள அருவிகள்
நகர்ந்து போவதாய்
நடை என்பார் அது பிடிக்கும்….
குங்குமத் திலகமிட்டு
கூந்தலிலே மல்லிகைச் சூடி
பட்டுப் புடவையில்
பவனி வர
மகாலட்சுமியை நேரில்
கண்டேன் என்பார்
அது பிடிக்கும்…
மனிதா….!
பஞ்சபூதங்களில் ஒருவன் நான்..
பஞ்சமில்லா நீரை வாரித்தந்தவன்..
கருவிலே பனிக்குடத்தால்
உன்னைப் பாதுகாத்தவன்….
தெருவிலே தேடிவந்து
உன் தாகம் தீர்த்தவன்…
நீ வாழ நான் உனக்கு
தியாகம் செய்தேன்….
நான் வாழ நீ எனக்கு
துரோகம் செய்தாய்….
நான் செல்லும் இடங்களெல்லாம்
சேர்த்து வேலி போட்டாய்….
சேர்த்த இடத்தையெல்லாம்
விற்று விலை கேட்டாய்…
மரங்களையெல்லாம் வெட்டி
என்னை மௌனமாக்கினாய்….
மணல்களையெல்லாம் அள்ளி
என்னை மலடியாக்கினாய்…
நான் வடிந்த குளாய்கள்
துருப்பிடிக்க கண்ணீர் வடிக்கிறது….
பிம்பம் காட்டிய கிணறுகளெல்லாம்
செத்துப் போய் மூடிக் கிடக்கிறது…..
நான் விளையாண்ட வாய்க்காளெ
மனிதா….!
பஞ்சபூதங்களில் ஒருவன் நான்..
பஞ்சமில்லா நீரை வாரித்தந்தவன்..
கருவிலே பனிக்குடத்தால்
உன்னைப் பாதுகாத்தவன்….
தெருவிலே தேடிவந்து
உன் தாகம் தீர்த்தவன்…
நீ வாழ நான் உனக்கு
தியாகம் செய்தேன்….
நான் வாழ நீ எனக்கு
துரோகம் செய்தாய்….
நான் செல்லும் இடங்களெல்லாம்
சேர்த்து வேலி போட்டாய்….
சேர்த்த இடத்தையெல்லாம்
விற்று விலை கேட்டாய்…
மரங்களையெல்லாம் வெட்டி
என்னை மௌனமாக்கினாய்….
மணல்களையெல்லாம் அள்ளி
என்னை மலடியாக்கினாய்…
நான் வடிந்த குளாய்கள்
துருப்பிடிக்க கண்ணீர் வடிக்கிறது….
பிம்பம் காட்டிய கிணறுகளெல்லாம்
செத்துப் போய் மூடிக் கிடக்கிறது…..
நான் விளையாண்ட வாய்க்காளெ