Prasath - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Prasath |
இடம் | : Erode |
பிறந்த தேதி | : 24-Jan-1992 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 29-Mar-2020 |
பார்த்தவர்கள் | : 22 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
Prasath செய்திகள்
How to upload my poem?
காந்தி மகான்.
காந்தி என்றொரு கடமைவீரரின்
கனிவில் பூத்தது சுதந்திரமே....!
கன்னத்தில் கிடைத்த அடியின் விலையை
காந்தியும் கொடுத்தார் அகிம்சையிலே.....!
கைத்தடி ஊன்றி நடந்திட்ட போதும்
காந்திக்குக் களைப்பே கிடையாது.....!
இருபது கோடி இந்தியர் கண்ணீர்
ஏந்தி நடந்தார் கைத்தடியாய் ......!
துப்பாக்கித் தோட்டா தூக்குக் கயிறும்
தோற்றன காந்தியின் முன்னாலே.....!
போர்ப்பந்தர் பிறந்த புண்ணியவானிடம்
போர்செய்து தோற்றனர் வெள்ளையரும்.....!
உணவும் உடையும் உறக்கம் இழந்து
உழைத்தார் சுதந்திரம் பெற்றிடவே.....!
உப்புக் காய்ச்சியும் உண்ணா திருந்தும்
உணர்த்தினார் உண்மையை உலகினுக்கே.....!
ஆற்றில் கண்டொரு காட்சியில் நொந்து
ஆடையை ஒதுக்கினார் வாழ்நாளில்.....!
ஆங்கிலப் படைகள் அரண்டன மிரண்டன
அண்ணல் காந்தியின் அகிம்சையிலே.....!
கத்தியைத் தீட்டி வந்தவர்க் கெதிரே
புத்தியைத் தீட்டினார் காந்தி மகான்....!
சிறையில் அடைத்தும் சித்தத்தை அழித்தும்
சத்திய சோதனை வென்றதுவே.....!
சாதியை மதத்தை மொழியை யெல்லாம்
ஆயுதம் ஆக்கினர் வெள்ளையரும்......!
உணர்வால் இணைந்து ஒன்றாய்த் திரண்டு
இந்தியர் நின்றனர் காந்தியுடன்......!
அடிமைகள் செய்திட வந்தவர் முயற்சிகள்
அனைத்தும் தோற்றன காந்தியிடம்....!
அடித்தும் உதைத்தும் கொலை பலசெய்தவர்
கும்பிட்டு விழுந்தனர் அண்ணலிடம்.....!
அன்னியப் பொருட்கள் அனைத்தையும் விலக்கி
அண்ணலும் புரட்சி செய்திட்டார்......!
இந்தியர் அடிமைகள் என்றவர் ஒருநாள்
இந்தியர் சுதந்திரர் என்றிட்டார்.....!
சும்மா கிடைக்கலை சுதந்திரம் அதுவும்
சிந்தினர் கோடிகள் குருதியினை.....!
அந்தமகான்களின் சிந்தை குளிர்ந்திட
காப்போம் சுதந்திர தேவியினை......! 01-Apr-2020 9:46 am
கருத்துகள்