Ravimanivasagan - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Ravimanivasagan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Aug-2020 |
பார்த்தவர்கள் | : 12 |
புள்ளி | : 0 |
பாலு என்கிற பாலசுப்ரமணியம்!
இசையாய் கனிந்து ..
சுவையாய் குழைந்து..
உயிராய் விழைந்து..
மொழியாய் பொழிந்த..
ஒரு பாட்டுப் புதல்வன்!
இன்று புவியாய்..
நதியாய்..
நெடுந்தூரச் சாலையாய்..
ரயிலாய்.. விமானமாய்..
பேருந்தாய்..
நட்சத்திர ஒட்டலாய்..
சிறு தேனிர் கடையாய்..
எங்கும், எதிலும்,
கனிந்தும், குழைந்தும்,
உரத்தும், உதிர்த்தும்..
ஒலித்துக் கொண்டே தான்.. இருக்கின்றான்!
ஒரு பாடல் பாட வந்தவன்..
இன்று வாடலுக்கெல்லாம் மருந்தாய்..
வாழ்வதற்கெல்லாம் விருந்தாய்..
எங்கும், எப்போதும்..
தென்றல் தேனிசையில்..
என் நாளையும்..
எழில் நாட்களாக மாற்றிய ஒரு சங்கீதத் தேன் காற்று!
மேகங்களோடு மோகங்களாகி..
வானங்களுக்கும் காணங்கள் கூட்ட..
இதோ புறப்பட்டுப் போகின்றான்!
மனங்களோடு மௌணம் பேசிய
இளய நிலாக்களும்!
அந்தியோடு மழை பொழிந்த
மோகம் கொண்ட மேகங்களும்!
சங்கித பேரரசினின்..
தேன் சிந்தும் பயணத்துக்காய்..
ஆகாயம் பூத்தூவி..
பூமழை பொழியும் நேரமிது!
போய் வா இசை மழையே!
பூமியாய் நாங்கள்..
ஏங்கும் போதெல்லாம்
சாமியாய் மனம் கசிந்து
மாரியாய் மனம் நனைப்பாய்!
மாகா மனிதனே!
இரவி மணிவாசகன்.
பாலு என்கிற பாலசுப்ரமணியம்!
இசையாய் கனிந்து ..
சுவையாய் குழைந்து..
உயிராய் விழைந்து..
மொழியாய் பொழிந்த..
ஒரு பாட்டுப் புதல்வன்!
இன்று புவியாய்..
நதியாய்..
நெடுந்தூரச் சாலையாய்..
ரயிலாய்.. விமானமாய்..
பேருந்தாய்..
நட்சத்திர ஒட்டலாய்..
சிறு தேனிர் கடையாய்..
எங்கும், எதிலும்,
கனிந்தும், குழைந்தும்,
உரத்தும், உதிர்த்தும்..
ஒலித்துக் கொண்டே தான்.. இருக்கின்றான்!
ஒரு பாடல் பாட வந்தவன்..
இன்று வாடலுக்கெல்லாம் மருந்தாய்..
வாழ்வதற்கெல்லாம் விருந்தாய்..
எங்கும், எப்போதும்..
தென்றல் தேனிசையில்..
என் நாளையும்..
எழில் நாட்களாக மாற்றிய ஒரு சங்கீதத் தேன் காற்று!
மேகங்களோடு மோகங்களாகி..
வானங்களுக்கும் காணங்கள் கூட்ட..
இதோ புறப்பட்டுப் போகின்றான்!
மனங்களோடு மௌணம் பேசிய
இளய நிலாக்களும்!
அந்தியோடு மழை பொழிந்த
மோகம் கொண்ட மேகங்களும்!
சங்கித பேரரசினின்..
தேன் சிந்தும் பயணத்துக்காய்..
ஆகாயம் பூத்தூவி..
பூமழை பொழியும் நேரமிது!
போய் வா இசை மழையே!
பூமியாய் நாங்கள்..
ஏங்கும் போதெல்லாம்
சாமியாய் மனம் கசிந்து
மாரியாய் மனம் நனைப்பாய்!
மாகா மனிதனே!
இரவி மணிவாசகன்.