Saravanan Uthirapathy - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Saravanan Uthirapathy |
இடம் | : Papanasam |
பிறந்த தேதி | : 09-Sep-1983 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 21-Jul-2010 |
பார்த்தவர்கள் | : 132 |
புள்ளி | : 3 |
I am working as a software engineer in chennai. My interests are writing poems and novel in tamil. I like Kanadasan and vairamuthu kavithaigal.
அமைதி ஒழுகும் அடர்ந்த காடு
நிசப்த அலைவரிசையில்
ரீங்காரம் பாடும் வண்டுக்கூட்டம்
தூங்கும் மரங்கள்
தூங்காத அதன் இலைகள்
ஒன்றைஒன்று உரசி
முத்தமிடும் சத்தம்
தூரத்து விண்மீன்கள்
துரத்தும் நிலவு...
வளர்ந்து செழித்த காட்டிற்கு
வகிடு எடுத்தாற்போல்
ஒரு ஒத்தையடி பாதை
நீளும் பாதையில்
நீயும் நானும்...
இருவரும் கைபிடித்து
என் தோழில் உன் முகம் புதைத்து
காட்டின் நடுவே
கால்நடை பயணம்...
காற்றுடன் கலவிகொண்ட
மேகக்கூட்டங்கள் தன் சிறுசிறு
குழந்தைகளை தூவுகின்றன
தூரல்களாக...
சிந்திய தூரலில்
சிதறிய துளியொன்று
உன் நெற்றி தழுவி
கண்ணம் கழுவி
நாடி நழுவி நடைபோடும் போது சட்டென்ற
மற்ற விலங்குகளிலிருந்து
மாறுபட்டனவாக ..
நாய்கள்..
பல வகையினவாய்..
பெருங்குரலெடுத்து
போரிடும் சில..
கை ஓங்கிட ஓடிடும் ..
போவோர் வருவோர்
எவரையும் பொருட்டாக எண்ணாத
மோன நிலையோடு சில..
நன்றிக்கும் பாசத்திற்கும்
வாலாட்டி ஆட்டியே
வயதாகிப் போகும் சில..
வலியோனைக் கண்டிட
வாலினை இடுக்கிலடக்கி
பம்மும் சில ..
வெகுசாமர்த்தியமாய் ..
சாலையைக் கடக்கும் சில..
அவசரக் குடுக்கைகளாய் ஓடி
அடிபட்டு கிடக்கும் சில..
என்று அவைகளில் பலவகை..
ஏனெனில்..
மனிதனோடு நீண்ட நெடுங் காலமாய்
நட்போடு ..
இருந்துவருபவை..
அவை!