சீனுவாசன - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : சீனுவாசன |
இடம் | : Thiruvannamalai |
பிறந்த தேதி | : 05-May-1984 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Jul-2015 |
பார்த்தவர்கள் | : 142 |
புள்ளி | : 3 |
நான் திருவண்ணாமலை
கோபம் கொப்பளிக்க, வன்மம் நெஞ்சிலேந்த
கொடுமைகளை கண்ணுற்று கலங்கியிருக்கிறது
பாமரக்கூட்டம்,
எதற்கும் துணிந்தவர் இனி இழக்கயேதுமில்லை,
எவர்வரினும் ஆவதொன்றுமில்லைஎனதுணியுமுன்
எதையாவது செய்யுங்கள்,
நீயா, நானா என்று வெட்டி அரசியல்
இனியும் பேசினால் உங்கள் நாக்குகள் துண்டிக்கப்படும்.
வெறுங்கையில் வந்து நின்று சமாதானம் செய்தால்,
உங்கள் வேட்டிகள் உருவப்படும்..
போராட்ட நெருப்பு
ஜுவாலையிலிருந்து பொங்குமுன்
செய்யுங்கள், இல்லை செத்து மடியுங்கள்.!!
சித்திரைத் திருவிழா
*************************
சித்திரைத்திருழா...
சுவற்றில் வரையப்பட்ட சித்திரம் போல்...
சுவையான ஒரு விழா...!
சூரியனே உன்,
இயக்கத்தை மையப்படுத்தி கணித்த...
தமிழர் காலக்கணிப்பில்...
உன் வருகை...
சுட்டெரிக்கும் வெப்பமாய்...
அதிகம்,
எங்கள் பகுதியில் படுவதால் என்னவோ...
உன்மேல் உள்ள மதிப்பின் காரணமாய்...
இம்மாதத்தை ஆண்டின்
முதல் மாதமாய் வைத்தனரோ...!
பழந்தமிழர்...
அறிவும், அறிவியல் சார்ந்த விசயத்தில்...
கைதேர்ந்தவர்கள்...
என்பதில் ஐயமில்லை...
சுட்டெரிக்கும் கோடைவெயிலில்...
சுற்றியிருக்கும் சொந்தபந்தங்கள்...
சேர்ந்தாலே மனதிற்கு குளிர்ச்சிதான்...
ஒரு தகப்பன் தன் மகனுக்கு கொடுக்கும் சிறந்த சொத்து என்ன. ? ஏட்டு கல்வியா.? அனுபவா.? பணமா.? இந்த மூன்றில் ஏதாவது ஒன்று தான் நீங்கள் தங்களது தந்தையின் மூலமாக பெறமுடியும் என்றால் எதை தேர்ந்தெடுப்பீர்கள் ...? காரணம் என்ன. .? ஒரு முக்கியமான குறிப்பு உங்கள் தந்தையிடம் இந்த மூன்றில் ஒன்றை மட்டுமே உங்களால் பெறமுடியும். நீங்கள் வீட்டிற்கு ஒரே பிள்ளையாக இருந்தாலும் சரி. (அவ்வாறு ஒரு சூழல் ஏற்பட்டால் )
துன்பங்களை நீக்கி - நல்
புத்துணர்ச்சி தந்தே
மேன்மையை கொண்டது
இனிய துன்முகியாம்..
வேம்முகம் கொண்ட காலத்திலே
வேம்பம்பூ பாயாசமாம் - மஞ்சள்
நீரெடுத்து ஆடுவோமே
பிணியகன்றிட கொண்டாடுவோமே...
நித்திரையின்றி கண்விழித்து
முத்திரையிற்றி கொள்வதல்ல - பந்து
மித்திரரோடு உடன்களித்தே
சித்திரையை கொண்டாடுவோமே ..
அனைவருக்கும் ஆனந்தமாக அமைய
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ...
- வைஷ்ணவதேவி
ஆரிராரோ பாடவில்லை
ஆசைக் கொஞ்சல் கேட்கவில்லை
உனக்கு பாரமானேன்
உன்னால் தொலை தூரமானேன்
வியர்வைத் துளி போல
உதறித் தள்ளிவிட்டாய்
உதிர்ந்த இறகானேன்
உலர்ந்த சருகானேன்
உன் ஆசை தீர்த்து விட்டு
என் ஆசை தீயிலிட்டு
குப்பையில் போட்டுவிட்டு
எச்சில் இலை ஆக்கிவிட்டாய்
உருவான அன்றே நீ
கரு என்னைத் தொலைத்திருந்தால்
தெருவோரம் கண்டெடுத்த
அநாதை எண் குறைந்திருக்கும்
விளையாட்டாய் செய்தாயோ
விபரமாய்தான் செய்தாயோ
எதுவாக இருந்த போதும்
என்னுடைய வாழ்வு இன்று
விதியின் கைகளிலே
விளையாட்டு பொம்மைதானே
சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை என்றிருந்தால்
எங்கேனும் சென்றிருப்பேன்
எவரிடத்தும்
ஆரிராரோ பாடவில்லை
ஆசைக் கொஞ்சல் கேட்கவில்லை
உனக்கு பாரமானேன்
உன்னால் தொலை தூரமானேன்
வியர்வைத் துளி போல
உதறித் தள்ளிவிட்டாய்
உதிர்ந்த இறகானேன்
உலர்ந்த சருகானேன்
உன் ஆசை தீர்த்து விட்டு
என் ஆசை தீயிலிட்டு
குப்பையில் போட்டுவிட்டு
எச்சில் இலை ஆக்கிவிட்டாய்
உருவான அன்றே நீ
கரு என்னைத் தொலைத்திருந்தால்
தெருவோரம் கண்டெடுத்த
அநாதை எண் குறைந்திருக்கும்
விளையாட்டாய் செய்தாயோ
விபரமாய்தான் செய்தாயோ
எதுவாக இருந்த போதும்
என்னுடைய வாழ்வு இன்று
விதியின் கைகளிலே
விளையாட்டு பொம்மைதானே
சாண் பிள்ளை ஆனாலும்
ஆண் பிள்ளை என்றிருந்தால்
எங்கேனும் சென்றிருப்பேன்
எவரிடத்தும்
மனிதப் புனிதரே! - மாசு
இல்லா மாமனிதரே!
கலியுகத்தின் புத்தரே! - எங்கள்
கனவு நாயகரே!
ஏழைக் குடிசையில் பிறந்த
ஏசுவே - இளைஞர்களின்
இதையத் துடிப்பே!
எளிமையின் மைந்தராய் - ஏற்றம்
கண்ட வேந்தரே,
அறிவியலின் பாதையில்
அக்னியின் அன்னையே!
சிந்தனை செம்மலே
செறுக் கில்லா துயவரே! - பாரதத்
தாய் ஈன்றெடுத்த
பாசமிகு நேசரே!
கடைகோடியில் உதயமான - எங்கள்
தலை ஞாயிரே!
பாரதத்தின் புகழதனை - இந்த
பார்புகழ செய்தவரே!
நின்
இறப்பு செய்தி யறிந்து - இந்த
விண்ணும், மண்ணும் , விழிபிதுங்கி
வழிமறந்து போனதையா - எம்மை
வழிநடத்த இனி எவரென்று.....
கண்ணீருடன்,,,,,,,
தி,மலை - சீனுவாசன்
உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!
எழுந்து வா!
பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது
எழுந்து வா!
சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை
காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்
மனிதப் புனிதரே! - மாசு
இல்லா மாமனிதரே!
கலியுகத்தின் புத்தரே! - எங்கள்
கனவு நாயகரே!
ஏழைக் குடிசையில் பிறந்த
ஏசுவே - இளைஞர்களின்
இதையத் துடிப்பே!
எளிமையின் மைந்தராய் - ஏற்றம்
கண்ட வேந்தரே,
அறிவியலின் பாதையில்
அக்னியின் அன்னையே!
சிந்தனை செம்மலே
செறுக் கில்லா துயவரே! - பாரதத்
தாய் ஈன்றெடுத்த
பாசமிகு நேசரே!
கடைகோடியில் உதயமான - எங்கள்
தலை ஞாயிரே!
பாரதத்தின் புகழதனை - இந்த
பார்புகழ செய்தவரே!
நின்
இறப்பு செய்தி யறிந்து - இந்த
விண்ணும், மண்ணும் , விழிபிதுங்கி
வழிமறந்து போனதையா - எம்மை
வழிநடத்த இனி எவரென்று.....
கண்ணீருடன்,,,,,,,
தி,மலை - சீனுவாசன்
கீர்த்திமிகு கீதமே
சங்கீதமே - நின்
கீதனையும் போதனையும்
கண்டதில்லை இன்னுமே
நான் இன்னுமே,
சோதனையும் வேதனையும்
சேர்ந்து வந்த வேளையில்
ஏழைமனம் உன்னை விட்டு
மாறவேதான் இல்லையே,
எழுகட்ட எட்டுகட்ட - இந்த
கட்ட அறியல - உள்ளுக்குள்ளே
ஆசை யுண்டு - ஒன்னுமிங்கே
விளங்கல...
உன்னைத் தேடி நானும் வாரேன் -
என் நெஞ்சுக்குள்ளே வாராயோ
இசைச் சாரல் மழை
தூவாயோ......
இவன்
தி.மலை - சீனுவாசன்