- சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-May-2020 |
பார்த்தவர்கள் | : 121 |
புள்ளி | : 0 |
அரசர்கள் போலேவே அரசியல் கட்சிகள் ஆக காரணம்
அரசியல் சாசனத்தின் ஆற்றல் மிகு சட்டங்களே
குற்றங்களைத் தூண்டுவது குதுகலிக்கும் மனித மனம்
குற்றத்தை ஒழுங்குப்படுத்துவது அரசியல் சாசனமே
பாதிக்கப்பட்டோர் நாடுவது பக்க பலமாய் சட்டத்தை
சட்டம் ஆளுவோரோ பாதிப்பு கொடுத்தோருக்கு பாலமாய்
வழவழப்புக்கு வாழையென்போம் வளையாததற்கு இரும்பென்போம்
இவ்விரு நிலைக் கொண்டதற்கு கம்பீர சட்டமென்போம்
பயந்தவனிடம் சட்டங்கள் அதிகமாய் பயமுறுத்தும்
துணிந்தவர்களிடம் அவைகளே குனிந்து அடிபணியும்
குருடனும் செவிடனும் கூத்து பார்ப்பதைப்போல் உள்ளது சட்டங்கள்
கூரிய வாள் குத்துவதைப் போன்றே இருக்க வேண்டும் இனி சட்டங்கள்.
----- நன்னாட
என் கேள்விக்கு என்ன பதில் கண்ணம்மா ?
காணும் கண்கள் எல்லாம் உன் கண்கள் ஆகாதோ?
உன் கண்ணை காணாமல் என் தாகம் தீராதோ?
உன் கண்கள் என்னைத்தான் காணாமல் போகுமோ?
உன் கண்கள் என்னை கண்டவுடன் என் துக்கம் தீருமோ?
தேனின் இதழை பெற்றவளோ ?
இல்லை -
தேனாடையுற்றவளோ ?
என் மனதில் தோன்றிய காதல் என்ற களவோ ?
இல்லை
கருமை கலக்காத வெண்ணிலவோ ?
உன்னை காண என் கண்கள் காத்திருக்குமோ?
இல்லை
உன்னை எண்ணி என் கவிதைகள் பூக்களாக பூத்திருக்குமா ?
என் கேள்விக்கு பதில் நீ தருவாயா ?
இல்லை என் கேள்விக்கு பதிலாக நீ வருவாயா ?
உன் பதிலுக்காக காலம் வரை காத்திருக்கும் என் வரிகள் ...........