எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
கவிதை தொக்கு
~~~~~~~~~~~~~~~~~
ஊர் சுற்றி கிடந்த காட்சிகளை.. கிராமத்தின் நீட்சிகளை ....மெல்ல மெல்ல உரித்து ...உங்கள் முன்... வயல் வரப்பில் நிரப்பி வைப்பது போல ஒரு முயற்சி...
கவிதை தொக்கு - 3 - கோபி சேகுவேரா
கவிதைகளை வாசித்து வாழ்ந்திடுங்கள் ..
இதே வரப்புகளில்
இன்னும் கவிதை தொக்குகள்
இடறாமல் குவியும் ...
உங்கள் விரலாடு கிடக்கும் கவிதை தொக்குகளை கொட்டி பயணத்தில் விரிந்து கிடக்க கவிஜியை தொடர்பு கொள்ளுங்கள்....
இதே கவிதை தொடரில் உங்களின் படைப்பை எதிர்ப்பார்க்கும்
ஒருவனாய்...நான்.....நன்றி...
நானும் இவனே
~~~~~~~~~~~~~~~
அறம் அழித்த அவளிடமும்
சினம் நுழையா நொடியுண்டு...
வீரம் விதைக்கும் அவனிடமும்
பிணம் கோதிய விரலுண்டு ...
அவனை அவள் வென்றாலும்
அவளை அவன் கொன்றாலும்
அடுத்த நொடியில்
இவனது விழிகள்
இன்பத்தில் சிலைகள் ...
- தேன்மொழியன்
உள் உணர்
~~~~~~~~~~~~
அறுக்க சொல்லும் பலருக்கு
எதையும் வளர்க்க தெரிவதில்லை ..
புதைத்து செல்லும் சிலருக்கு
முளைக்கும் என்பதே தெரிவதில்லை .
- சனியன் ...