எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
துயரங்களைத்
துடைத்தெறிய
மெல்லிய காற்று
போதும் நட.
#சர் நா
ஒரு மெல்லிய துகளாகிப்பின்
பெரு வெடிப்பின் மொழியானவன்
கவிஞன்....
#சர் நா
தேடலின் பொழுதுகளை
முடக்கிப் பறந்து
மன்னிக்காத வேகமெடுக்கும்
சுகப்படாத சொற்களுக்கிடையில்
கொத்தித் தின்று ஆசுவாசப்படும்
ஊமைப் பார்வைகளிலிருந்து
அணையாதிருக்க
யதார்த்தமாய்த் தவறுகளையோ
தடுமாறல்களையோ
பாரபட்சமின்றி சேமிக்கின்ற
கேமராக் கண்கள்
இனி எதையும் விட்டு
வைப்பதாயில்லை.
#சர் நா
தோல்விகளில் அழிவுகளாகவும்
வெற்றிகளில் கழிவுகளாகவும்
போட்டிகளில் விதிகளாகவும்
பொறாமைகளில் சதிகளாகவும்
அலங்கரிப்புகளில் வித்தைகளாகவும்
ஆற்றாமைகளில் சொத்தைகளாகவும்
விழிபிதுங்க வழியடைக்கின்றன
ஒப்பீடுகள்....
மொத்தத்திலும் மெருகேறிப்
பறக்கின்றன உருமாறும்
மதிப்பீடுகள்...
-சர் நா
"வெறுமையைப் பொறு"
"வள்ளுவம் புழங்கு"
"எதையும் கட"
"இடைவெளி அளி"
"எப்போதாவது அழு"
"அவ்வப்போது பற"
"அமையும் உழை"
"போகட்டும் எழு"
--சர் நா.......
இணைய உலகிலும் இயல்பு உலகிலும் தடையின்றி பயணிக்க உதவும் தத்துவங்கள்............
வாழ்த்துகள்........
http://talkandcomment.com/p/1430746989-100004207398224
இதை கேட்க முடிகிறதா என்று சொல்லுங்கள் தோழமைகளே.........
http://eluthu.com/kavithai/243774.html -முயற்சி......
எல்லாப் படங்களும் மகத்தான
வெற்றி பெறுகின்றன
ட்ரைலர்களில்
எல்லாப் பொருட்களும் தரத்தோடு
கிடைக்கின்றன
விளம்பரங்களில்
எல்லாப் பாசங்களும் வாழ்வாகி
நனைக்கின்றன
டிவி நிகழ்ச்சிகளில்
எல்லாப் படைப்புகளும் தர்மத்தை
இறுதியாய் காக்கின்றன
எழுத்துகளில்
-சர் நா
நம்ம சூழ்நிலைகள்ல ஆயிரம் விசயங்களிருந்தாக்கூட,
நாம என்ன சிந்திக்கறமோ அதை நோக்கியே புரிஞ்சுக்க வைத்திடுது காலம்.....
-சர் நா ....
இன்றைய குடும்பச் சூழ்நிலைகளில் பெரியவர்களின் பிரச்சனைக்குள் சிறியவர்கள் நுழையாதவரை உறவுகளைத் தொடர்வதில் பெரிய சிக்கல்கள் ஏதும் இருப்பதில்லை.
-சர் நா