எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
நிலையில்லா வெள்ளலைகள் நிலையாக இருக்காது.
அவன் போனால் இவனை யார் தேடுவார்? – அது என்ன?
ஓட்டை உடைத்தேன். தோட்டை உடைத்தேன். உள்ளே இருந்தவன வாய்க்கு ருசியானான் – அது என்ன?
வழுக்கும் கயிரோ என்று வாரி எடுத்தால் கடிக்கும் கையில் பட்டென்று – அது என்ன?
இன்று காமராஜரின் பிறந்தநாள். பலருக்கு எடுத்துகாட்டை விளங்குபவர், மிகவும் எளிமையாக வாழ்ந்த அரசியல் தலைவர். வறுமையை ஒழிக்க பாடுபட்டவர். கல்வியை வளர்க்க பாடுபட்டவர். அவரின் பிறந்தநாளன இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டடபடுகிறது.
அவரின் ஒரு சில வரிகள் ....
கடுமையான உழைப்பே மக்களை வறுமையில் இருந்து மீட்கும். சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவை இல்லை.கல்வியும் உழைப்பும் போதுமானது.
காமராஜ் பொன்மொழிகள்
வேலைக்காரி, கெட்டிக்காரி வெளியே வரமாட்டாள். அது என்ன?
காற்று வழியே வந்தவனைக் கண்ணுக்குள் தந்தவன். – அது என்ன?
விழுந்தவன் எழுந்தான் ஒரு முறை மட்டும் – அது என்ன?