எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் மேல் பயணிக்கும் இரயில் வண்டி
***

இன்னும் சற்று நேரத்தில் 
இரயில் வண்டி புறப்பட்டுவிடும் அறிவிப்பில் 
சன்னல் கம்பிகள் நனையத் தொடங்கின 

உருவம் மறைந்த பின்
நீ இரயில் வண்டிக்கும்
நான் இரயில் நிலையத்திற்குமாகக்
கைகளை அசைக்கின்றோம்

அவையும் மறைந்த பின் கையிலிட்ட 
முத்தத்தின் பற்தடங்கள் இருக்கின்றன
இன்னும் சற்று நேரத்திற்கு

யாவற்றையும் இழந்த பின் 
கைப்பிடி முத்தம் எடுத்து 
உன்னைக் கொலு வைக்க 
இரயில் பெட்டிகளின் 
உள் அறை இளஞ்சிவப்பாகிறது

நிறம் உணர்ந்த சூரியனும் 
இளஞ்சிவப்பாகி 
இரயில் நிலையத்திற்கு நேராக
விழத் தொடங்கியது

உன்மேல் பயணிக்கும் இரயில் வண்டியில் 
இரவு முழுவதும்
இளஞ்சிவப்பாகக் கிடக்கிறேன்.

...ஆண்டன் பெனி

மேலும்

என் தம்பி கவிகண்மணி @ சிவபாலன்....

இன்றைய தேதியில் வெளியாகியுள்ள குங்குமம் 27.07.2015 இதழில்...
என் உடன்பிறவா தம்பியும், எழுத்து தளத்தின் தீவிர படைப்பாளியுமான, கவிகண்மணி பற்றி, 5 பக்கக் கட்டுரை வந்துள்ளது....
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்பதற்கு என் தம்பியும் ஓர் உதாரணம்...

வாழ்வாங்கு வாழ்வாய் தம்பி நீ,
வாழ்த்துக்களுடன்...

நன்றி குங்குமம்

என்றும் தோழமையுடன்
இரா. ரவிக்குமாா் @ ஆண்டன்பெனி

மேலும்

நன்று, பகிர்விற்கு நன்றி - மு.ரா. 26-Nov-2015 5:55 pm
மிக்க நலம் தோழரே இனி தொடர்பில் இருப்போம் 19-Jul-2015 3:26 pm
கேள்விப்பட்ட பெயராக உள்ளது .... நலமா ஐயா .... 19-Jul-2015 2:38 pm
எல்லையிலா மகிழ்ச்சி கண்மணி . வாழ்த்துக்கள் . பகிர்வுக்கு நன்றி 19-Jul-2015 2:38 pm

புதுச்சேரியின் மற்றுமோர் அடையாளம் ```அகன் அய்யா~~~

திட்டமிட்டு நடக்கவில்லை...
ஆனாலும், உள்ளுணர்வின் வெளிப்பாடாக அச் சந்திப்பு நிகழ்ந்தது.
புதுச்சேரிக்கு சென்றால்...எப்படியும் பார்த்து விடலாம் அகன் தோழரை.....நம்பிக்கை இருந்தால்...!

நன்றி தோழரே...

மேலும்

அச்சிறு நேர முகனோக்கு உவகை அளித்தது..அன்றியும் மருத்துவர் காத்திருப்பு அதிகம் உரையாட விடவில்லை தோழா..பிறிதொரு பொழுதில் பிற .. 05-May-2015 4:11 pm

மேலே