எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
1.படித்ததில் பிடித்தது..!
-----------------------------------
செஞ்சாந்தின் பின்னணி-யாழ்மொழி
----------------------------------------------------------
மூர்க்கத்தன ஆண்மையால்
முடக்கப்பட்ட பெண் சுதந்தரம் ..
ஆடை அலங்காரப் பேச்சால்
அலங்கரிகப்படுவது ஏனோ ?
துகிலுரியப்பட்ட பாஞ்சாலிகள்
சேலை கட்டியச் செய்திகளை
திரைக்குப் பின்னே மறைத்து
வைத்தது ஏனோ ?
கைம்மையான கன்ணகிகளின்
சேலையை விலக்கத் துடிக்கும்
செஞ்சாந்தின் பின்னணி விமர்சிக்கப்
படுவதில்லை ஏனோ ?
மழலையையும் மாய்த்துவிட்டு
மன்னன் வேடம் போடுகின்ற
கயவர்களின் மத்தியில் -நவீன
ஆடையில் மட்டும் கலாச்சாரத்தை
தேடுவது ஏனோ (...)
2.படித்ததில் பிடித்தது..
----------------------------------
தேர்வுக்கு வேண்டும் ஒரு தேர்வு
-------------- -------------- ------------------
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை தாங்கள் பணி யாற்றும் பள்ளிக்கு அனுப்பியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பப் பட்ட பிளஸ் 2 கணிதத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவி ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் இந்த தேர்வை ஏன் மீண்டும் (...)