எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 * இசைவான வாழ்க்கைப் 

பயணத்தின் இருப்புப் பாதைகள் 
நம்பிக்கையுடன் வாய்மை 

* இராகுகாலம் மரணயோகமென 
நல்லநேரம் தேடுகிறான் 
இருண்டது எதிர்காலம் 

* மகிழ்வுடன் சிரிக்க 
மறந்தே போனான் 
சர்க்கஸ் கோமாளி 

* வெள்ளம் வந்தால்தான் 
வெள்ளிக் காசுகள் 
படகோட்டி

* மல்லாந்து படுத்ததும் 
கோளரங்கக் காட்சிகள் 
குடிசைவீடு 

 * தாகத்தைத் தணிக்காமல் 
வளமுடன் வாழ்கிறது 
கானல் நீர் 

* ஒரு கோப்பைத் தேநீர் 
பகிர்ந்துண்டார்கள் 
புரிதலோடு பயணம் 

--கா.ந.கல்யாணசுந்தரம்

மேலும்

தன்முனைக் கவிதைகள்  

*******************************
. உனக்கான மனச்சோலையில் 
எப்போதுமே இசை மீட்டுகிறது 
வாழ்வியல் கிளைகளின் 
நினைவுக் குயில்கள்   

 • உனது விழியிரண்டில் 
துள்ளும் கயல்கள் 
இன்னமும் எனது தூண்டிலில் 
சிக்காமல் தப்புகிறது

• நெற்றியில் சூட்டிய சுட்டி 
என்னையே சுட்டிக் காட்டுகிறது 
ஓடி ஒளிந்து கொள்ளவில்லை 
உணர்வுகளால் தலை நிமிர்கிறேன் 

 • பொன்னகைகள் சுமந்த 
முகத்தில் பளிச்சிடுகிறது 
முத்துப் பற்கள் உதிர்க்கும் 
உனது புன்னகை மலர்கள்   

 • அழகுக்கு அழகு செய்ய 
துணிந்தவர்கள் யார் ?
வெட்கமுடன் தலைகுனிகிறது 
ஆபரணங்கள் !   

 • உனது புருவ மலைகளில் 
புறப்படும் ஆதவனாய் குங்குமம் 
எனது வாழ்வின் விடியலில் 
சங்கமிக்கிறது நாள்தோறும்   

• பெண்மையின் இலக்கணத்தில்
அணிசேர்த்து அழகுபார்க்கின்றன 
நன்மக்கள் பேற்றுடன் 
தாய்மையின் அரவணைப்பு 

.....கா.ந.கல்யாணசுந்தரம்      

மேலும்

குளத்தில் எறிந்த கல் நீர்வட்டங்களைத் தந்தது 

மனதில் நுழைந்த கனிவு  நட்புவட்டங்களைத் தந்தது 

மேலும்


மேலே