எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
நலமா...?
வரலாறு படைத்த வரலாறு - குஞ்சாலி மரைக்காயர்
பேராசிரியர் டாக்டர் நாகூர் ரூமி
சாத்தானுக்குப் பல பெயர்கள் உண்டு. அதில் ஒன்று வாஸ்கோடகாமா. ஆமாம். வாஸ்கோடகாமா போர்ச்சுக்கலில் இருந்து முதன்முறையாக இந்தியாவுக்குக் கடல் மார்க்கத்தைக் கண்டுபிடித்தார், கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் இறங்கினார் – இப்படித்தான் பள்ளிக்கூட சரித்திர நூல்களில் படித்திருக்கிறோம். ஆனால் உண்மையான வரலாறு வேறுவிதமான முகத்தைக் காட்டுகிறது.
கடல்வழிகாணுதல், வாணிபமெல்லாம் அவனுக்கு கொசுறு நோக்கங்கள்தான். நாடுபிடிப்பதும், போர்ச்சுக்கீசிய காலனியாக இந்தியாவை மாற்றுவதும்தான் பிரதான நோக்கங்கள். அதற்காக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மிர (...)
மைசூரின் புலி
By நாகூர் ரூமி
"நூறாண்டுகள் நரியைப்போல வாழ்வதை விட ஒரே ஒரு நாள் புலியைப் போல வாழ்வதே சிறப்பு”.
இப்படிச் சொன்னதுகூட ஒரு புலிதான். அது மைசூரை ஆண்ட புலி. ஒரு வெள்ளிக்கிழமையன்று பிறந்தது அந்தப் புலிக்குட்டி (நவம்பர் 10, 1750 / துல்ஹஜ் பிறை 10, ஹிஜ்ரி 1163). ஆமாம். நீங்கள் நினைத்தது சரிதான். திப்பு சுல்தான் என்ற புலியைப் பற்றித்தான் பேச இருக்கிறேன்.
திப்பு சுல்தான் ஒரு யுத்தமேதை. இதுதான் நாம் அவரைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டிய முதல் விஷயமாகும். ஆம். ஆங்கிலேயரின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் அவர். திப்பு என்றாலே அவர்களுக்கு சிம்மசொப்பனம். ஜாதி மத வித்தியாசம் பார்க்காத நீத (...)
கலியுகக் கர்ணன் நவாப் சி அப்துல் ஹகீம்
By நாகூர் ரூமி
செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்று சொல்லக்கேள்விபட்டிருக்கிறோம். அது எப்படி ஒருவர் செத்தபிறகும் கொடுப்பார்? கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதி இறந்த பிறகு ஒரு ஏழை தன் தேவைகளைச் சொல்லி அவர் மண்ணறைக்கு அருகில் நின்று புலம்பினாராம். உடனே மண்ணறைக்குள்ளிருந்து வெளியே வந்த கையில் தங்க மோதிரம்! அன்றிலிருந்து ’செத்தும் கொடுத்தார் சீதக்காதி’ என்று சொல்வது பிரபலமானதாம்!
ஒருவர் செத்தபிறகும் சொத்துக்காக உரிமை கொண்டாட வழக்குகள் நடத்துவதுதான் நம் வழக்கு! செத்தும் கொடுக்காமல் போனவர்கள்தான் அதிகம்! ஆனால் சீதக்காதியின் கதை அப்படிப்பட்டதல்ல. ச (...)
அன்பு தங்கை அனீஸ்ராஜ் என்கிற பபியோலாவுக்கு, அண்ணனின் அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...!
வாழ்வில் நலமோடும் வளமோடும்
சீரோடும் சிறப்போடும்
என்றும் வாழ எல்லாம் வல்ல
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்....!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் பபி...!
http://eluthu.com/kavithai/228206.html
கீழே விழும்போது
என்னை தட்டிக் கொடுத்த நட்புக்களுக்கும்...
மேலே எழும்போது
என்னை தடவிக் கொடுத்த நட்புக்களுக்கும்...
ஆதரித்த எழுத்து தளத்திற்கும்
அரவணைத்த என்னுயிர் நட்புக்களுக்கும்
இந்த வருடம் நான் பெற்ற
நட்புணர்வு மிளிர் நன்மணி 2014
விருதினை சமர்ப்பிக்கிறேன்....!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!
நன்றி நன்றி நன்றி....!
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பொற்பாதம்.
சூபி ஞானி ஹலரத் மௌலானா ஜலாலுத்தீன் ரூமி துருக்கி அவர்கள்.