எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
என் வீட்டுக்கு பொங்கல் திருநாளுக்குவாங்கன்னு அழைத்ததுதப்பா போச்சிஏன் என்னாச்சிபொங்கல்... (செல்வம் சௌம்யா)
12-Jan-2016 10:05 pm
என் வீட்டுக்கு
பொங்கல் திருநாளுக்கு
வாங்கன்னு அழைத்தது
தப்பா போச்சி
ஏன் என்னாச்சி
பொங்கல் படைச்ச
பொங்கல் சோற்றை
சாப்பிட கொடுத்தா
இது பொங்கலா
ஓட்டல்ல சாப்பிட்டிருக்கேன்
வெறும் சோற்றை வைக்கிறியானு
சண்டை போட்டு கிளம்பிட்டான்
பொன்மேனி பருவம் போலபுது நெல்லு அசைந்தாடகருநாக பாம்பெனவும்சசெங்கரும்பும் விளையாடஒய்யாற... (செல்வம் சௌம்யா)
12-Jan-2016 9:54 pm
பொன்மேனி பருவம் போல
புது நெல்லு அசைந்தாட
கருநாக பாம்பெனவும்
சசெங்கரும்பும் விளையாட
ஒய்யாற நடையினிலே
தை மகளும் நடமாட
தேன் சுவையாம் தமிழ் மொழியும்
பாரெங்கும் கீதம் இசைக்க
வண்ண வண்ண மலர்களை போல் கன்னியர்கள்
மோனமதில் ஆழ்ந்திருக்க
கட்டிளம் காளைகளும்
ஜல்லிகட்டில் வீரமிட
தமிழர் திருநாளாம்
தை திங்கள் நாளினிலே
ஊரெல்லாம் விழாக்கோலம்
இல்லமெல்லாம்
பொங்கலை போல் பொங்குதன்றோ
தமிழ் மணம் உள்ளமெல்லாம்